Latest Updates
-
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
அசாரி பன்னீர் புலாவ்

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்
பச்சை பட்டாணி - 2 டேபிள் ஸ்பூன் (வேக வைத்தது)
குங்குமப்பூ - 2 சிட்டிகை
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பட்டை - 1
கருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்
பால் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அசாரிக்கு...
பன்னீர் - 2 கப்
தயிர் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசியை நன்கு கழுவி, அதை குக்கரில் போட்டு, தண்ணீர், உப்பு மற்றும் ஒரு துளி எண்ணெய் சேர்த்து, 3 விசில் விட்டு இறக்கி, பின் அதனை குளிர வைக்க வேண்டும்.
பின் ஒரு பௌலில் பால் மற்றும் குங்குமப்பூவை சேர்த்து, ஊற வைத்து, பின் சாதத்துடன் நன்கு கலந்து கொள்ளவும்.
பின்னர் மிக்ஸியில் தயிர், பச்சை மிளகாய் பேஸ்ட், மஞ்சள் தூள், கடுகு, சோம்பு, கடுகு எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு நைஸாக அடித்து கொள்ளவும்.
பிறகு அந்த பேஸ்ட்டை பன்னீர் துண்டுகளில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மீதமுள்ள பேஸ்ட்டை தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, கருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் தனியாக எடுத்து வைத்துள்ள பேஸ்ட் மற்றும் வேக வைத்துள்ள பச்சை பட்டாணியை சேர்த்து சிறிது நிமிடம் வேக வைக்க வேண்டும். இப்போது அதில் சாதம் மற்றும் பொரித்து வைத்துள்ள பன்னீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, சில நிமிடம் அடுப்பில் வைத்து கிளறி இறக்க வேண்டும்.
இப்போது சுவையான அசாரி பன்னீர் புலாவ் ரெடி!!! இதனை விருப்பமான சைடு டிஷ் உடன் சேர்த்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications