Latest Updates
-
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்!
அசாரி பன்னீர் புலாவ்

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்
பச்சை பட்டாணி - 2 டேபிள் ஸ்பூன் (வேக வைத்தது)
குங்குமப்பூ - 2 சிட்டிகை
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பட்டை - 1
கருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்
பால் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அசாரிக்கு...
பன்னீர் - 2 கப்
தயிர் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசியை நன்கு கழுவி, அதை குக்கரில் போட்டு, தண்ணீர், உப்பு மற்றும் ஒரு துளி எண்ணெய் சேர்த்து, 3 விசில் விட்டு இறக்கி, பின் அதனை குளிர வைக்க வேண்டும்.
பின் ஒரு பௌலில் பால் மற்றும் குங்குமப்பூவை சேர்த்து, ஊற வைத்து, பின் சாதத்துடன் நன்கு கலந்து கொள்ளவும்.
பின்னர் மிக்ஸியில் தயிர், பச்சை மிளகாய் பேஸ்ட், மஞ்சள் தூள், கடுகு, சோம்பு, கடுகு எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு நைஸாக அடித்து கொள்ளவும்.
பிறகு அந்த பேஸ்ட்டை பன்னீர் துண்டுகளில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மீதமுள்ள பேஸ்ட்டை தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, கருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் தனியாக எடுத்து வைத்துள்ள பேஸ்ட் மற்றும் வேக வைத்துள்ள பச்சை பட்டாணியை சேர்த்து சிறிது நிமிடம் வேக வைக்க வேண்டும். இப்போது அதில் சாதம் மற்றும் பொரித்து வைத்துள்ள பன்னீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, சில நிமிடம் அடுப்பில் வைத்து கிளறி இறக்க வேண்டும்.
இப்போது சுவையான அசாரி பன்னீர் புலாவ் ரெடி!!! இதனை விருப்பமான சைடு டிஷ் உடன் சேர்த்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications