Latest Updates
-
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க லட்சங்களை குவிக்கப் போறாங்களாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்..
வாழைக்காய் புட்டு ரெசிபி
காலையில் நல்ல ஆரோக்கியமான, அதே சமயம் எளிதில் செய்யக்கூடிய ரெசிபி செய்ய நினைத்தால், அப்போது கேரளா ரெசிபியான வாழைக்காய் புட்டு ரெசிபியை செய்யலாம். இது மிகவும் ஆரோக்கியமான ஒரு காலை உணவு. மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியது.
சரி, இப்போது கேரளா ரெசிபியான வாழைக்காய் புட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 1 (துருவியது)
கைக்குத்தல் அரிசி மாவு - 1 கப்
தேங்காய் - 2 கப் (துருவியது)
உப்பு - 1 டீஸ்பூன்
சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, பின் வாழைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, குக்கரில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின் கைக்குத்தல் அரிசி மாவில் தண்ணீர் ஊற்றி, உப்பு மற்றும் வேக வைத்த வாழைக்காயைசேர்த்து சேர்த்து, புட்டு மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து நீளமாக இருக்கும் புட்டு வேக வைக்கும் பாத்திரத்தில், நான்கில் ஒரு பங்கு மாவைப் போட்டு, அதன் மேல் 3 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை போட்டு, தேவையான அளவு சர்க்கரையை தூவி விட வேண்டும்.
பின்னர் மீண்டும் மாவைப் போட்டு, தேங்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து, பாத்திரத்தை மூட வேண்டும்.
பின்பு அதனை இட்லி பாத்திரம் போல் இருக்கும் குடுவைப் போன்று உள்ள பாத்திரத்தில், பாதி அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, தண்ணீர் கொதித்ததும், அதில் மூடி வைத்துள்ள புட்டு பாத்திரத்தை வைத்து, இறுக்கமாக மூடி, 20 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
இப்போது சூப்பரான வாழைக்காய் புட்டு ரெடி!!! இதனை தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications











