மாங்காய் ஊறுகாய் செய்யும் போது இதப் பண்ணா இன்னும் சுவையா இருக்கும்!

மாங்காய் கொண்டு ஊறுகாய் தயாரிக்க என்னென்ன தேவை எப்படி தயாரிக்கலாம் என்பது குறித்து சில பயனுள்ள டிப்ஸ்

By Staff

1.எண்ணைய் எலுமிச்சங்காய் ஊறுகாய்

தேவையான பொருட்கள்:

வெந்தயம், பெருங்காயம் (பொடித்தது) - 1 தேக்கரண்டி.

மிளகாய்த் தூள் - 1 மேஜைக் கரண்டி.

உப்புத் தூள் - 100 கிராம்.

மஞ்சள் - 1 தேக்கரண்டி.

செய்முறை:

கீறிய எலுமிச்சம்பழத்தில் இந்த மசாலாவை உள்ளே திணித்தும், மேலே புரட்டியும், எண்ணையோடு சேர்த்து ஜாடியில் போட்டுவைக்கவும். அல்லது, எலுமிச்சம்பழத்தை வெட்டி, மசாலாவில் கலந்து அப்படியே ஜாடியில் எடுத்து வைக்கலாம்.


2.வினிகர் மாங்காய் ஊறுகாய்

தேவையான பொருட்கள்:

பெரிய மாங்காய் - 1.

பச்சை மிளகாய் - 15.

வற்றல் (மிளகாய்) - 6

சீரகம் - 2 தேக்கரண்டி.

முருங்கப்பட்டை - 1 அங்குலம்.

வினிகர் (தேவையான அளவு)

கடுகு - 50 கிராம்.

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

மாங்காய், மிளகாய் இவற்றை நீளமாக வெட்டி உப்பு போட்டு ஒரு ஜாடியில் போட்டுமூன்று நாட்கள் வெயிலில் வைத்து, 3 நாட்கள் கழித்து, வற்றல், சீரகம்,முருங்கப்பட்டை இவற்றை வினிகர் ஊற்றி அரைக்கவும்.

விழுது போல வந்ததும், அதை மாங்காயில் போட்டு வினிகரை மாங்காய் மூழ்கும்அளவுக்கு ஊற்றி வெயிலில் 2 நாட்கள் வைக்கவும். கடுகை வெயிலில் காய வைத்துபூரிக் கட்டையினால் உருட்டி தோலை நீக்கவும். தோல் நீக்கிய கடுகை அம்மியில்வைத்து ஒன்றிரண்டாய் உருட்டி அதையும் மாங்காயில் போடவும்.


3.மாவடு ஊறுகாய்

தேவையான பொருட்கள்:

மாவடு - 1 படி.

உப்புத்தூள் - 400 கிராம்.

வற்றல் - 18.

கடுகு பொடி செய்தது - 3 மேஜைக் கரண்டி.

மஞ்சள் தூள் - 1 மேஜைக் கரண்டி.


செய்முறை:

மாவடுவைக் கழுவித் துடைத்து விளக்கெண்ணை தடவி வைக்கவும். சுத்தமான ஜாடியில் வெறும் மாவடு ஒரு அடுக்கு, உப்புதூவி மற்றுமொரு அடுக்கு என அடுக்கி 3 நாள் வைத்து விட வேண்டும். இதனால் மாங்காயின் தண்ணீர் சத்து, உப்புடன் சேர்ந்துநீர் விட்டுக் கொண்டிருக்கும்.

பொடி செய்த மசாலாவைக் கலந்து ஒரு வாரம், தினமொரு முறை குலுக்கி நன்கு ஊற வைக்க வேண்டும். மாவடு ஊறுகாய் ரெடி!ஒரு வருடமாயினும் கெட்டுப் போகாமல் நன்றாக இருக்கும்.

Desktop Bottom Promotion