Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
அவரைக்காய் உருளைக்கிழங்கு பொரியல்
பொரியல் இல்லாமல் சிலர் மதிய வேளையில் உணவே சாப்பிடமாட்டார்கள். அத்தகையவர்கள் வீட்டில் பெரும்பாலும் தினமும் ஒரே மாதிரியான கேரட் பீன்ஸ் பொரியல் தான் இருக்கும். அப்படி ஒரே மாதிரியான பொரியல் சாப்பிட்டால் அலுத்துப் போய்விடும். எனவே வாரம் ஒருமுறையாவது சற்று வித்தியாசமான பொரியலை முயற்சி செய்ய முயல வேண்டும்.
அதிலும் உருளைக்கிழங்கு மற்றும் அவரைக்காய் கொண்டு செய்யப்படும் பொரியலை முயற்சித்துப் பாருங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதுடன், மிகுந்த சுவையுடனும் இருக்கும். இங்கு அந்த அவரைக்காய் உருளைக்கிழங்கு பொரியலின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
அவரைக்காய் - 1/2 கிலோ
உருளைக்கிழங்கு - 3 (துண்டுகளாக்கப்பட்டது)
தக்காளி - 3 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (தட்டியது)
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 1/2 கப்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் அவரைக்காயை நன்கு நீரில் கழுவி, அதனை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி சேர்த்து கிளறி, பின் தக்காளியை சேர்த்து வதக்கி, அடுத்து அதில் உருளைக்கிழங்கு, அவரைக்காய் சேர்த்து 4-5 நிமிடம் நன்கு வதக்கி வேக வைக்க வேண்டும்.
பின்பு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மாங்காய் தூள் சேர்த்து பிரட்டி, 5-6 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பிறகு அதில் தண்ணீர் சேர்த்து கிளறி, 7-8 நிமிடம் குறைவான தீயில் காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
பின் உங்களுக்கு கிரேவி போன்று வேண்டுமானால், அதனை அப்படியே இறக்கலாம் அல்லது பொரியல் போன்று வேண்டுமானால், நீரை சுண்ட விட்டு இறக்கி விடலாம்.
அடுப்பில் இருந்து இறக்கிய பின், அதன் மேல் கொத்தமல்லியைத் தூவினால், அவரைக்காய் உருளைக்கிழங்கு பொரியல் ரெடி!!!



Click it and Unblock the Notifications