Latest Updates
-
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம்
அவரைக்காய் உருளைக்கிழங்கு பொரியல்
பொரியல் இல்லாமல் சிலர் மதிய வேளையில் உணவே சாப்பிடமாட்டார்கள். அத்தகையவர்கள் வீட்டில் பெரும்பாலும் தினமும் ஒரே மாதிரியான கேரட் பீன்ஸ் பொரியல் தான் இருக்கும். அப்படி ஒரே மாதிரியான பொரியல் சாப்பிட்டால் அலுத்துப் போய்விடும். எனவே வாரம் ஒருமுறையாவது சற்று வித்தியாசமான பொரியலை முயற்சி செய்ய முயல வேண்டும்.
அதிலும் உருளைக்கிழங்கு மற்றும் அவரைக்காய் கொண்டு செய்யப்படும் பொரியலை முயற்சித்துப் பாருங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதுடன், மிகுந்த சுவையுடனும் இருக்கும். இங்கு அந்த அவரைக்காய் உருளைக்கிழங்கு பொரியலின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
அவரைக்காய் - 1/2 கிலோ
உருளைக்கிழங்கு - 3 (துண்டுகளாக்கப்பட்டது)
தக்காளி - 3 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (தட்டியது)
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 1/2 கப்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் அவரைக்காயை நன்கு நீரில் கழுவி, அதனை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி சேர்த்து கிளறி, பின் தக்காளியை சேர்த்து வதக்கி, அடுத்து அதில் உருளைக்கிழங்கு, அவரைக்காய் சேர்த்து 4-5 நிமிடம் நன்கு வதக்கி வேக வைக்க வேண்டும்.
பின்பு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மாங்காய் தூள் சேர்த்து பிரட்டி, 5-6 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பிறகு அதில் தண்ணீர் சேர்த்து கிளறி, 7-8 நிமிடம் குறைவான தீயில் காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
பின் உங்களுக்கு கிரேவி போன்று வேண்டுமானால், அதனை அப்படியே இறக்கலாம் அல்லது பொரியல் போன்று வேண்டுமானால், நீரை சுண்ட விட்டு இறக்கி விடலாம்.
அடுப்பில் இருந்து இறக்கிய பின், அதன் மேல் கொத்தமல்லியைத் தூவினால், அவரைக்காய் உருளைக்கிழங்கு பொரியல் ரெடி!!!



Click it and Unblock the Notifications