Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
அவரைக்காய் உருளைக்கிழங்கு பொரியல்
பொரியல் இல்லாமல் சிலர் மதிய வேளையில் உணவே சாப்பிடமாட்டார்கள். அத்தகையவர்கள் வீட்டில் பெரும்பாலும் தினமும் ஒரே மாதிரியான கேரட் பீன்ஸ் பொரியல் தான் இருக்கும். அப்படி ஒரே மாதிரியான பொரியல் சாப்பிட்டால் அலுத்துப் போய்விடும். எனவே வாரம் ஒருமுறையாவது சற்று வித்தியாசமான பொரியலை முயற்சி செய்ய முயல வேண்டும்.
அதிலும் உருளைக்கிழங்கு மற்றும் அவரைக்காய் கொண்டு செய்யப்படும் பொரியலை முயற்சித்துப் பாருங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதுடன், மிகுந்த சுவையுடனும் இருக்கும். இங்கு அந்த அவரைக்காய் உருளைக்கிழங்கு பொரியலின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
அவரைக்காய் - 1/2 கிலோ
உருளைக்கிழங்கு - 3 (துண்டுகளாக்கப்பட்டது)
தக்காளி - 3 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (தட்டியது)
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 1/2 கப்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் அவரைக்காயை நன்கு நீரில் கழுவி, அதனை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி சேர்த்து கிளறி, பின் தக்காளியை சேர்த்து வதக்கி, அடுத்து அதில் உருளைக்கிழங்கு, அவரைக்காய் சேர்த்து 4-5 நிமிடம் நன்கு வதக்கி வேக வைக்க வேண்டும்.
பின்பு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மாங்காய் தூள் சேர்த்து பிரட்டி, 5-6 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பிறகு அதில் தண்ணீர் சேர்த்து கிளறி, 7-8 நிமிடம் குறைவான தீயில் காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
பின் உங்களுக்கு கிரேவி போன்று வேண்டுமானால், அதனை அப்படியே இறக்கலாம் அல்லது பொரியல் போன்று வேண்டுமானால், நீரை சுண்ட விட்டு இறக்கி விடலாம்.
அடுப்பில் இருந்து இறக்கிய பின், அதன் மேல் கொத்தமல்லியைத் தூவினால், அவரைக்காய் உருளைக்கிழங்கு பொரியல் ரெடி!!!



Click it and Unblock the Notifications











