Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
தக்காளியுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சட்னி அரைங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும்...!
Tomato Coriander Chutney Recipe in Tamil: உங்கள் வீட்டில் காலையில் இட்லி அல்லது தோசைதான் செய்யப்போகிறீர்களா? அந்த இட்லிக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொத்தமல்லி உள்ளதா? அப்படியானால் கொத்தமல்லியை வைத்து வித்தியாசமான சட்னி செய்யுங்கள். அதுவும் கொத்தமல்லி சட்னியை வழக்கமாக நீங்கள் செய்வது போன்று செய்யாமல், ஒருமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் செய்யுங்கள்.
இப்படி சட்னியை செய்யும் போது வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட 2 இட்லி அதிகமாக சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை வித்தியாசமானதாகவும், சூப்பராகவும் இருக்கும். மேலும் இந்த சட்னி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். ஒருமுறை இந்த மாதிரி கொத்தமல்லி சட்னியை செய்தால், அதற்குப்பின் பழைய சட்னியை மறந்து விடுவீர்கள். இதில் கூடுதலாக சேர்க்கும் அந்த ஸ்பெஷல் பொருள் தக்காளி. இதனால் சட்னியின் சுவை வேற லெவலில் இருக்கும்.

உங்களுக்கு இந்த வித்தியாசமான தக்காளி கொத்தமல்லி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கொத்தமல்லி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 6 பழுத்த தக்காளி
- ¼ கப் கொத்தமல்லி இலைகள்
- 3 வர மிளகாய்
- 2 பச்சை மிளகாய்
- ¼ டீஸ்பூன் புளிச் சாறு
- ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் வெல்லம்
- 1 டீஸ்பூன் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 2 டீஸ்பூன் எண்ணெய்
- ½ டீஸ்பூன் கடுகு
- ¼ டீஸ்பூன் பெருங்காயம்
- 1 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, 3 வர மிளகாய்களைச் சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும்.
- நறுக்கிய 6 தக்காளிகளையும், நறுக்கிய 2 பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
- அடுத்து ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- நன்கு கலந்து, மிதமான தீயில் 7-8 நிமிடங்கள் மூடி வைத்து சமைக்கவும். தக்காளி நன்கு குழைய வெந்திருக்க வேண்டும். அடுப்பிலிருந்து இறக்கி, கலவையை ஆற விடவும்.
- இந்த கலவையுடன் 1 டீஸ்பூன் வெல்லம் பொடி, ¼ டீஸ்பூன் கெட்டியான புளிக்கரைசல் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸி ஜாரில் போடவும். ¼ கப் கொத்தமல்லி இலைகளையும் சேர்க்கவும்.
- சட்னி மென்மையாக மாறும் வரை அரைக்கவும். பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- ஒரு சிறிய கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கவும். 1வர மிளகாய், ½ டீஸ்பூன் கடுகை சேர்க்கவும். கடுகு வெடித்ததும், ¼ டீஸ்பூன் பெருங்காயம் மற்றும் 1 கொத்து புதிய கறிவேப்பிலை சேர்த்து, உடனடியாக சட்னியில் கொட்டி நன்கு கலக்கவும்.
- இது இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். குளிர்சாதன பெட்டியில் காற்றுப்புகாத கொள்கலனில் மூடி வைத்தால் 1 வாரம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.



Click it and Unblock the Notifications











