Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
தக்காளியுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சட்னி அரைங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும்...!
Tomato Coriander Chutney Recipe in Tamil: உங்கள் வீட்டில் காலையில் இட்லி அல்லது தோசைதான் செய்யப்போகிறீர்களா? அந்த இட்லிக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொத்தமல்லி உள்ளதா? அப்படியானால் கொத்தமல்லியை வைத்து வித்தியாசமான சட்னி செய்யுங்கள். அதுவும் கொத்தமல்லி சட்னியை வழக்கமாக நீங்கள் செய்வது போன்று செய்யாமல், ஒருமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் செய்யுங்கள்.
இப்படி சட்னியை செய்யும் போது வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட 2 இட்லி அதிகமாக சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை வித்தியாசமானதாகவும், சூப்பராகவும் இருக்கும். மேலும் இந்த சட்னி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். ஒருமுறை இந்த மாதிரி கொத்தமல்லி சட்னியை செய்தால், அதற்குப்பின் பழைய சட்னியை மறந்து விடுவீர்கள். இதில் கூடுதலாக சேர்க்கும் அந்த ஸ்பெஷல் பொருள் தக்காளி. இதனால் சட்னியின் சுவை வேற லெவலில் இருக்கும்.

உங்களுக்கு இந்த வித்தியாசமான தக்காளி கொத்தமல்லி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கொத்தமல்லி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 6 பழுத்த தக்காளி
- ¼ கப் கொத்தமல்லி இலைகள்
- 3 வர மிளகாய்
- 2 பச்சை மிளகாய்
- ¼ டீஸ்பூன் புளிச் சாறு
- ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் வெல்லம்
- 1 டீஸ்பூன் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 2 டீஸ்பூன் எண்ணெய்
- ½ டீஸ்பூன் கடுகு
- ¼ டீஸ்பூன் பெருங்காயம்
- 1 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, 3 வர மிளகாய்களைச் சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும்.
- நறுக்கிய 6 தக்காளிகளையும், நறுக்கிய 2 பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
- அடுத்து ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- நன்கு கலந்து, மிதமான தீயில் 7-8 நிமிடங்கள் மூடி வைத்து சமைக்கவும். தக்காளி நன்கு குழைய வெந்திருக்க வேண்டும். அடுப்பிலிருந்து இறக்கி, கலவையை ஆற விடவும்.
- இந்த கலவையுடன் 1 டீஸ்பூன் வெல்லம் பொடி, ¼ டீஸ்பூன் கெட்டியான புளிக்கரைசல் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸி ஜாரில் போடவும். ¼ கப் கொத்தமல்லி இலைகளையும் சேர்க்கவும்.
- சட்னி மென்மையாக மாறும் வரை அரைக்கவும். பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- ஒரு சிறிய கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கவும். 1வர மிளகாய், ½ டீஸ்பூன் கடுகை சேர்க்கவும். கடுகு வெடித்ததும், ¼ டீஸ்பூன் பெருங்காயம் மற்றும் 1 கொத்து புதிய கறிவேப்பிலை சேர்த்து, உடனடியாக சட்னியில் கொட்டி நன்கு கலக்கவும்.
- இது இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். குளிர்சாதன பெட்டியில் காற்றுப்புகாத கொள்கலனில் மூடி வைத்தால் 1 வாரம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.



Click it and Unblock the Notifications