Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்..
தேங்காய் சட்னியை அரைக்கும் போது இந்த 1 பொருளை வதக்கி சேர்த்து அரைங்க.. சும்மா அல்டிமேட்டா இருக்கும்..
Thakkali Thengai Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? இன்னும் சைடு டிஷ் எதுவும் முடிவு செய்யவில்லையா? அப்படியானால் தேங்காய் சட்னியை அரையுங்கள். அதுவும் வழக்கமாக அரைக்கும் தேங்காய் சட்னியை செய்யாமல், சற்று வித்தியாசமாக தக்காளியை வதக்கி சேர்த்து தேங்காய் சட்னியை அரைத்துப் பாருங்கள்.
இதனால் இந்த தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்கும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு ருசியாகவும் இருக்கும். இந்த தக்காளி தேங்காய் சட்னி இட்லி, தோசை போன்றவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும். முக்கியமாக இதை 10 நிமிடத்தில் செய்துவிடும் அளவில், செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

உங்களுக்கு தக்காளி தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 3 பல்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* வரமிளகாய் - 5
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், 3 பல் பூண்டு சேர்த்து, அத்துடன் பெருங்காயத் தூள்
சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி,
தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாயை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1/2 கப் துருவிய தேங்காய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நீர் ஊற்றாமல்
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வேண்டுமானால் சட்னி மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றிக்
கொள்ளலாம்.
* இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தக்காளி
தேங்காய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications