Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
3 தக்காளியும், 1 ஸ்பூன் கடலைப்பருப்பும் இருந்தா இந்த சட்னியை அரைங்க... இட்லி, தோசைக்கு செம சைடிஷா இருக்கும்...
Tomato Chutney Recipe for Diabetics in Tamil: தமிழ்நாட்டில் காலை அல்லது மாலையில் பெரும்பாலான வீடுகளில் இட்லி அல்லது தோசைதான் பிரதான உணவாக இருக்கும். இட்லி அல்லது தோசை செய்வது மிகவும் எளிதானதாக இருக்கலாம் ஆனால் அதற்கு சரியான சைடிஷ் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
உங்கள் வீட்டில் உள்ளோர் தோசைக்கு பெரும்பாலும் தக்காளி சட்னியைத் தான் விரும்புவார்களா? அப்படியானால் எப்போதும் செய்வது போன்று தக்காளி சட்னியை செய்யாமல், இன்று சற்று வித்தியாசமான முறையில் தக்காளி சட்னியை செய்யுங்கள். முக்கியமாக இந்த தக்காளி சட்னி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றதாகும். சர்க்கரை நோய் இருப்பவர்கள் இந்த சட்னியை தாராளமாக சாப்பிடலாம். இது ஆரோக்கியமான சட்னி என்பதை விட சுவையான சட்னியும் கூட. இந்த சட்னியை அரைத்துக் கொடுத்தால் எல்லோருமே அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு சர்க்கரை நோயாளிகளுக்கான சூப்பரான தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த தக்காளி சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 3 பெரிய தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- 2 டீஸ்பூன் புளிக்கரைசல்
- 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 டீஸ்பூன் தனியா
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 காஷ்மீரி சிவப்பு மிளகாய்
- 1 பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 2 பல் பூண்டு (பொடியாக நறுக்கியது)
- 1 டீஸ்பூன் இஞ்சி (பொடியாக நறுக்கியது)
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/4 டீஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 டீஸ்பூன் எண்ணெய்
- 1 டீஸ்பூன் கொத்தமல்லி இலைகள்
- 1 டீஸ்பூன் பாசிப்பருப்பு
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- தக்காளியை கொதிக்கும் நீரில் 2-5 நிமிடங்கள் போட்டு, தோலை உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, கொத்தமல்லி விதைகள், சீரகம், காஷ்மீரி சிவப்பு மிளகாய் ஆகியவற்றை வறுத்து ஆற வைக்கவும்.
- இவை ஆறிய பின்னர் அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி, எண்ணெய் சூடானதும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு வெடித்தவுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நன்றாக வெந்ததும், மஞ்சள் தூள், வறுத்த மசாலாப் பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் வேகவைத்து நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின்னர் புளிக்கரைசலைச் சேர்த்து நன்கு கலக்கவும். இதை 2-3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைத்து பரிமாறுவதற்கு முன் கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.



Click it and Unblock the Notifications