Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
3 தக்காளியும், 1 ஸ்பூன் கடலைப்பருப்பும் இருந்தா இந்த சட்னியை அரைங்க... இட்லி, தோசைக்கு செம சைடிஷா இருக்கும்...
Tomato Chutney Recipe for Diabetics in Tamil: தமிழ்நாட்டில் காலை அல்லது மாலையில் பெரும்பாலான வீடுகளில் இட்லி அல்லது தோசைதான் பிரதான உணவாக இருக்கும். இட்லி அல்லது தோசை செய்வது மிகவும் எளிதானதாக இருக்கலாம் ஆனால் அதற்கு சரியான சைடிஷ் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
உங்கள் வீட்டில் உள்ளோர் தோசைக்கு பெரும்பாலும் தக்காளி சட்னியைத் தான் விரும்புவார்களா? அப்படியானால் எப்போதும் செய்வது போன்று தக்காளி சட்னியை செய்யாமல், இன்று சற்று வித்தியாசமான முறையில் தக்காளி சட்னியை செய்யுங்கள். முக்கியமாக இந்த தக்காளி சட்னி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றதாகும். சர்க்கரை நோய் இருப்பவர்கள் இந்த சட்னியை தாராளமாக சாப்பிடலாம். இது ஆரோக்கியமான சட்னி என்பதை விட சுவையான சட்னியும் கூட. இந்த சட்னியை அரைத்துக் கொடுத்தால் எல்லோருமே அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு சர்க்கரை நோயாளிகளுக்கான சூப்பரான தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த தக்காளி சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 3 பெரிய தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- 2 டீஸ்பூன் புளிக்கரைசல்
- 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 டீஸ்பூன் தனியா
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 காஷ்மீரி சிவப்பு மிளகாய்
- 1 பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 2 பல் பூண்டு (பொடியாக நறுக்கியது)
- 1 டீஸ்பூன் இஞ்சி (பொடியாக நறுக்கியது)
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/4 டீஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 டீஸ்பூன் எண்ணெய்
- 1 டீஸ்பூன் கொத்தமல்லி இலைகள்
- 1 டீஸ்பூன் பாசிப்பருப்பு
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- தக்காளியை கொதிக்கும் நீரில் 2-5 நிமிடங்கள் போட்டு, தோலை உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, கொத்தமல்லி விதைகள், சீரகம், காஷ்மீரி சிவப்பு மிளகாய் ஆகியவற்றை வறுத்து ஆற வைக்கவும்.
- இவை ஆறிய பின்னர் அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி, எண்ணெய் சூடானதும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு வெடித்தவுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நன்றாக வெந்ததும், மஞ்சள் தூள், வறுத்த மசாலாப் பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் வேகவைத்து நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின்னர் புளிக்கரைசலைச் சேர்த்து நன்கு கலக்கவும். இதை 2-3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைத்து பரிமாறுவதற்கு முன் கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.



Click it and Unblock the Notifications