Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Varutharacha Idly Sambar Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி செய்வீர்களா? அந்த இட்லிக்கு எப்பவும் சட்னி தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை வறுத்தரைச்ச இட்லி சாம்பாரை செய்யுங்கள். இந்த சாம்பார் செய்தால், சட்னியை இனிமேல் கேட்கமாட்டார்கள். அதோடு இந்த சாம்பாரை ஊற்றி வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சாம்பார் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த வறுத்தரைச்ச இட்லி சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வறுத்தரைச்ச இட்லி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டஸபூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 2
* காஷ்மீரி வரமிளகாய் - 2
* புளி - சிறிய துண்டு
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
வதக்குவதற்கு..
* எண்ணெய் - 1 ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப் பருப்பு, துவரம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக
வறுக்க வேண்டும்.
* பின் அதில் மல்லியை சேர்த்து வறுத்து, அதன் பின் வரமிளகாய்,
காஷ்மீரி வரமிளகாய், புளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி இறக்கி ஒரு தட்டில்
போட்டு குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 ஸ்புன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு
வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* வெங்காயம் தக்காளி வதக்கியதும், அதில் முக்கால்வாசியை எடுத்து ஒரு
தட்டில் வைத்து குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து முதலில் நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் குளிர வைத்துள்ள வெங்காயம் தக்காளியை சேர்த்து , சிறிது
நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த விழுதை அடுப்பில் வதங்கிக் கொண்டிருக்கும் மீதமுள்ள
வெங்காயம் தக்காளியுடன் சேர்த்து, சாம்பாருக்கு தேவையான அளவு நீரை
ஊற்றி, மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள்
சேர்த்து தாளித்து, கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாருடன் சேர்த்து,
5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி கலந்தால்,
சுவையான வறுத்தரைச்ச டிபன் சாம்பார்/இட்லி சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications