Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
வைரல் தேங்காய் பொடி ரெசிபி... தேங்காயும், வர மிளகாயும் இருந்தா இந்த பொடியை அரைங்க...தோசைக்கு செமையா இருக்கும்!
Thengai Podi Recipe in Tamil: சமீபத்தில் தேங்காய் பொடி என்பது மிகவும் வைரலானது. இட்லி, தோசைக்கு சில நிமிடங்களில் செய்துவிடக் கூடிய இந்த சைடிஷ் செய்வதற்கு மிகவும் எளிதானதாகவும், அதேசமயம் மிகவும் சுவையானதாகவும் இருக்கும். சட்னி செய்ய நேரமில்லாத போது இந்த பொடியை அரைத்து வைத்துக் கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த சுவையான தேங்காய்ப்பொடி செய்வதற்கு மிகவும் குறைவான பொருட்களே போதும். வறுத்து அரைக்கப்படும் இந்த பொடியை காற்றுப்புகாத பாத்திரத்தில் அடைத்து வைத்தால் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும். இதில் வறுத்து சேர்க்கப்படும் தேங்காய், பருப்பு வகைகள் மற்றும் வர மிளகாய் இதன் சுவையையும், வாசனையையும் அதிகரிக்கும்.

உங்களுக்கு சூப்பரான தேங்காய் பொடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் பொடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் உலர்ந்த தேங்காய்
- ½ கப் முழு உளுத்தம் பருப்பு
- 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
- 10 வர மிளகாய்
- 6 காஷ்மீரி சிவப்பு மிளகாய்
- 1 டீஸ்பூன் புளி
- 1 டீஸ்பூன் பெருங்காயம்
- 6 பூண்டு பல்
- தேவையான அளவு உப்பு
- 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
செய்முறை:
- முதலில் அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஒரு கடாயில் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் ½ கப் முழு உளுத்தம் பருப்பு, 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு, 10 வர மிளகாய் மற்றும் 6 காஷ்மீரி மிளகாய்களைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும், இதை ஒரு தட்டிற்கு மாற்றி தனியாக வைக்கவும்.
- அதே கடாயில் மீதமுள்ள எண்ணெயைச் சேர்த்து, 1 கப் தேங்காயை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து இதையும் தனியாக வைக்கவும்.
- பின் பூண்டு பற்களை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.
- இப்போது 1 டீஸ்பூன் புளியைச் சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும், பின்னர் உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைத்து விட்டு அடுப்பை அணைக்கவும்.
- அனைத்தும் ஆறும் வரை காத்திருக்கவும்.
- அனைத்தும் ஆறியவுடன் அவற்றை ஒரு மிக்சி ஜாருக்கு மாற்றவும்.
- பின்னர் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்கவும்.
- இதை ஒரு தட்டுக்கு மாற்றி ஆறியவுடன் ஒரு காற்றுப்புகாத பாத்திரத்துக்கு மாற்றவும்.
- இதை சூடான தோசையுடன் வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











