Latest Updates
-
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
தஞ்சாவூர் ஸ்பெஷல் இஞ்சி புளி - இத செஞ்சு வெச்சா.. 1 மாதம் வரை கெட்டுப்போகாது.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்
Tanjore Special Ingi Puli Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் ஊறுகாய் பிரியர்களா? அனைத்துவிதமான உணவுகளுக்கும் ஊறுகாயை வைத்துக் கொள்வார்களா? அப்படியானால் ஒருமுறை தஞ்சாவூர் ஸ்பெஷல் இஞ்சி புளியை செய்யுங்கள். இந்த இஞ்சி புளி இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம் என அனைத்தும் கலந்து ருசியாக இருக்கும்.
இதனால் இது தயிர் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதம் என அனைத்து விதமான சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசை, சப்பாத்தியுடனும் சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த இஞ்சி புளியை ஒருமுறை செய்தால், ஒரு மாதம் வரை வைத்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு இஞ்சி புளியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இஞ்சி புளி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* இஞ்சி - 350 கிராம்
* புளி - 1 எலுமிச்சை அளவு
* நல்லெண்ணெய் - 100 கிராம்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* பொடித்த வெல்லம் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் இஞ்சியை நீரில் கழுவி, அதன் தோலை நீக்கிவிட்டு, துருவிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் 1 எலுமிச்சை அளவு புளியை எடுத்து, நீரில் ஊற வைத்து, அதைப்
பிசைந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் துருவி வைத்துள்ள இஞ்சியை சேர்த்து, நிறம் மாறும் வரை
நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூளை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 2-3
நிமிடம் நன்கு கிளறி விட்டு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, நன்கு
10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க
வைக்க வேண்டும்.
* நீர் ஓரளவு சுண்டியதும், அதில் பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்கு
கிளறி, எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைத்து இறக்கினால், சுவையான
இஞ்சி புளி தயார்.
* இந்த இஞ்சி புளியை நன்கு குளிர வைத்து, பின் காற்றுப்புகாத
டப்பாவில் போட்டு தேவையான போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இஞ்சி
புளி 1 மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.



Click it and Unblock the Notifications











