Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
பழைய சாதத்தை வைச்சு சப்பாத்தி செஞ்சு சாப்பிட்ருக்கீங்களா? இப்படி செஞ்சு பாருங்க... சூப்பரா இருக்கும்...!
Rice Chapati Recipe in Tamil: வீட்ல சாப்பாடு மீந்து போன தாளிச்சி சாப்பிடுவோம், பச்சை புளி சாதம் செய்வோம், இல்லை என்றால் தண்ணீரில் ஊற வைத்து பழைய சாதமாக சாப்பிடுவோம் அல்லது அதை வைத்து வடகம் செய்து சாப்பிடுவோம். ஆனால் சப்பாத்தி செய்து சாப்பிட்டிருக்கீறீர்களா? ஆம் மீதமான சாதத்துல சப்பாத்தி செய்து பாருங்க மிருதுவாக இருப்பதோடு சுவையும் அருமையாக இருக்கும். வாங்க எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- மீந்து போன சாதம் - 1 கப்
- கோதுமை மாவு - 2 கப்
- தேவையான அளவு - உப்பு
- எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
- முதலில் மீதமாக இருக்கும் வடித்த சாதத்தை அளந்து எடுத்து அதில் சேர்க்க வேண்டும்.
- அதற்கு சமமான அளவு கோதுமை மாவையும் சேர்க்க வேண்டும் என்பதால் தான் இதை அளந்து கொள்ள வேண்டும்.
- பின் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி நன்றாக மிக்ஸி ஜார் முழுவதும் தடவி கொள்ளுங்கள்.
- அதில் அளந்து எடுத்து வைத்த வடித்த சாதத்தை சேர்க்கவும்.
- உங்களுக்கு சாதத்தில் உப்பு சேர்த்து சமைக்கும் பழக்கம் இருந்தால் மாவிற்கு ஏற்றவாறு உப்பை போட்டுக் கொள்ள வேண்டும்.
- அல்லது சாதத்தில் உப்பு சேர்க்கும் பழக்கம் இல்லாத போது மாவிற்கு தேவையான அளவு உப்பை சேர்க்கவும். இப்பொழுது அவை அனைத்தையும் நன்றாக கிளறிவிட்டு மிக்ஸி ஜாரில் அரைக்க வேண்டும்.
- இதை விட்டு விட்டு அரைத்து திறந்து ஒரு கிளறு கிளறி மறுபடியும் இரண்டு சுற்று சுற்ற வேண்டும்.
- சாதம் முழுவதும் அரைந்து மாவு பதத்திற்கு வரும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும்.
-தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.
- அரைத்த மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- இந்த மாவுடன் தண்ணீர் சேர்க்கக் கூடாது. அந்த சாதத்தில் இருக்கும் ஈரப்பதமே அதிக அளவில் இருக்கும்.
- பின் அதை சப்பாத்தி மாவு பதத்திற்கு வருவதற்கு தேவையான அளவு கோதுமை மாவு சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக பிணைந்து கொள்ள வேண்டும்.
- சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்த பின் எப்போதும் போல் மாவின் மேல் ஒரு டீ ஸ்பூன் அளவிற்கு எண்ணெயை சேர்த்து நன்றாக தடவி 20 நிமிடத்தில் இருந்து 30 நிமிடம் வரை ஊற வைத்து விட வேண்டும்.
- பின் எப்பொழுதும் போல் சப்பாத்திக்கு மாவு உருட்டுவது போல் உருட்டி சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
- அடுத்து அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் தேய்த்து வைத்திருக்கும் சப்பாத்தியை போடவும்.
- ஒரு புறம் லேசாக நிறம் மாறியதும் அதை திருப்பி போட்டு உங்கள் விருப்பப்படி சப்பாத்தியில் நெய் அல்லது எண்ணெய் தடவிக் கொள்ளலாம்.
- இந்த சப்பாத்தி மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











