Just In
- 24 min ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 3 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 4 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 6 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
Don't Miss
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பருப்பு புட்டு
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒரு ரெசிபி செய்து கொடுக்க நினைத்தால், பருப்பு புட்டு செய்து கொடுங்கள்.
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒரு ரெசிபி செய்து கொடுக்க நினைத்தால், பருப்பு புட்டு செய்து கொடுங்கள். பருப்பு புட்டில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். உங்களுக்கு பருப்பு புட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே பருப்பு புட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1/4 கப்
* கடலைப் பருப்பு - 1/4 கப்
* பாசிப் பருப்பு - 1/4 கப்
* புழுங்கல் அரிசி - 1/4 கப்
* உப்பு - 1/8 டீஸ்பூன்
* சர்க்கரை - 3/4 - 1 கப்
* துருவிய தேங்காய் - 2-3 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் பவுடர் - 1/2 டீஸ்பூன்
* முந்திரி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் அனைத்து பருப்புக்களையும், அரிசியையும் நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரிசி மற்றும் பருப்புக்களை நன்கு கழுவி, மிக்சர் ஜாரில் போட்டு, உப்பு சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு இட்லி தட்டை எடுத்து, அதில் எண்ணெய் தடவி, அரைத்து வைத்துள்ள மாவை இட்லி குழியில் ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் வெந்துள்ள பருப்பு இட்லியை நீர் தெளித்து எடுத்து, புட்டு போன்று உதிர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, அதில் ஒரு கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து சர்க்கரை பாகு தயாரித்துக் கொள்ள வேண்டும். மற்றொரு வாணலியில் நெய்யை ஊற்றி, முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்து உதிர்த்து வைத்துள்ளதை சேர்த்து, அத்துடன் துருவிய தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் பவுடர் மற்றும் வறுத்த முந்திரியையும் சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் கிளறி விட்டு இறக்கினால், சுவையான பருப்பு புட்டு தயார்.
குறிப்பு:
* புட்டில் சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரையையும் சேர்த்துக் கொள்ளலாம்.
* புட்டு தயாரித்த உடனே சூடாக சாப்பிடாமல், சற்று குளிர்ந்த பின் சாப்பிடுங்கள். இல்லாவிட்டால், அது பிசுபிசுப்பாக இருக்கும்.
* சர்க்கரை பாகுவில் புட்டு சேர்த்ததும் ஒரு நிமிடத்திற்கு மேலே அடுப்பில் வைக்க வேண்டாம். இல்லாவிட்டால், அது கடினமாகிவிடும்.
Image Courtesy: naliniscooking