Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்..
வெங்காயம் சேர்க்காம வெறும் 3 பொருளை வெச்சு 5 நிமிடத்தில் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க...
Kara Chutney In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? சட்டுபுட்டென்று 5 நிமிடத்தில் ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் உள்ளோர் எப்போதும் இட்லி, தோசைக்கு சற்று புளிப்பான மற்றும் காரமான சட்னியைத் தான் சாப்பிட நினைப்பார்களா? அப்படியானால் கார சட்னியை செய்யுங்கள். அதுவும் வெங்காயம் சேர்க்காத கார சட்னியை செய்யுங்கள். இந்த கார சட்னிக்கு 3 பொருட்கள் இருந்தாலே போதுமானது.

அந்த 3 பொருட்களையும் அரைத்து நல்லெண்ணெய் அதிகம் ஊற்றி தாளித்தால் போதும். இந்த சட்னியை நீங்கள் ஒருமுறை முயற்சித்தால், நிச்சயம் அடிக்கடி செய்வீர்கள். முக்கியமாக இது குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்வோருக்கு ஏற்ற சட்னி இது.
உங்களுக்கு வெங்காயம் சேர்க்காத கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காயம் சேர்க்காத கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தக்காளி - 4
* வரமிளகாய் - 13
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் தக்காளியை வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் துண்டுகளாக்கப்பட்ட தக்காளி, வரமிளகாய்,
புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நீர் சேர்க்காமல் நன்கு
மென்மையாகும் வரை அரைக்க வேண்டும்.
* சட்னியை அரைத்த பின், அதை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், 1 டீஸ்பூன் கடுகு மற்றும் 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* இறுதியாக தாளித்ததை சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கார
சட்னி தயார்.
Image Courtesy: Sailaja Kitchen



Click it and Unblock the Notifications