Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
வெங்காயம் சேர்க்காம வெறும் 3 பொருளை வெச்சு 5 நிமிடத்தில் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க...
Kara Chutney In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? சட்டுபுட்டென்று 5 நிமிடத்தில் ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் உள்ளோர் எப்போதும் இட்லி, தோசைக்கு சற்று புளிப்பான மற்றும் காரமான சட்னியைத் தான் சாப்பிட நினைப்பார்களா? அப்படியானால் கார சட்னியை செய்யுங்கள். அதுவும் வெங்காயம் சேர்க்காத கார சட்னியை செய்யுங்கள். இந்த கார சட்னிக்கு 3 பொருட்கள் இருந்தாலே போதுமானது.

அந்த 3 பொருட்களையும் அரைத்து நல்லெண்ணெய் அதிகம் ஊற்றி தாளித்தால் போதும். இந்த சட்னியை நீங்கள் ஒருமுறை முயற்சித்தால், நிச்சயம் அடிக்கடி செய்வீர்கள். முக்கியமாக இது குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்வோருக்கு ஏற்ற சட்னி இது.
உங்களுக்கு வெங்காயம் சேர்க்காத கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காயம் சேர்க்காத கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தக்காளி - 4
* வரமிளகாய் - 13
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் தக்காளியை வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் துண்டுகளாக்கப்பட்ட தக்காளி, வரமிளகாய்,
புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நீர் சேர்க்காமல் நன்கு
மென்மையாகும் வரை அரைக்க வேண்டும்.
* சட்னியை அரைத்த பின், அதை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், 1 டீஸ்பூன் கடுகு மற்றும் 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* இறுதியாக தாளித்ததை சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கார
சட்னி தயார்.
Image Courtesy: Sailaja Kitchen



Click it and Unblock the Notifications











