Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
3 தக்காளி இருந்தா.. காலையில் இட்லி, தோசைக்கு இப்படியொரு சாம்பார் செய்யுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க..
Instant Tomato Sambar Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் செய்யப் போகிறீர்களா? அந்த இட்லி, தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று முடிவெடுத்துவிட்டீர்களா? இன்னும் இல்லையா? இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் தான் சரியான காம்பினேஷன். இன்று உங்கள் வீட்டில் சிம்பிளாக ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் 3 தக்காளி உள்ளதா? அப்படியானால் அந்த தக்காளியைக் கொண்டு சாம்பார் செய்யுங்கள். வீட்டில் உள்ள குறைவான பொருட்களைக் கொண்டே இட்லி தோசைக்கு அருமையான சாம்பாரை செய்யுங்கள். இந்த தக்காளி சாம்பார் இட்லி, தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இந்த சாம்பார் 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாகவும் இருக்கும். பேச்சுலர்கள் கூட இதை செய்யலாம்.

உங்களுக்கு தக்காளி சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* கடலை மாவு - 2 டீஸ்பூன்
* தண்ணீர் - 3 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து வதக்கி, பொடியாக
நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு தக்காளி
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், சாம்பார் தூள்
சேர்த்து குறைவான தீயில் வைத்து கிளறி விட வேண்டும்.
* பிறகு 2 ஸ்பூன் கடலை மாவை, 3 கப் நீரில் கரைத்து, வாணலியில் ஊற்றி
கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* சாம்பார் பச்சை வாசனை போய் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், உப்பு சுவை
பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்க்க வேண்டும்.
* இறுதியில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான தக்காளி
சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications