Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
1/2 கப் பொட்டுக்கடலையும், 1 கப் இட்லி மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணிப் பாருங்க..
Coconut Susiyam Recipe In Tamil: மாலை வேளையில் ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு பசியுடன் குழந்தைகள் வருவார்கள். அப்போது குழந்தைகளின் பசியை போக்கும் வகையில் ஒரு அருமையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? வீட்டில் 1/2 கப் பொட்டுக்கடலையும், 1 கப் இட்லி மாவும் இருந்தால், ருசியான தேங்காய் சுசியத்தை செய்யுங்கள்.
இந்த தேங்காய் சுசியம் ஒரு சிறந்த மாலை நேர மற்றும் பசியை ஆற்றும் ஸ்நாக்ஸாக இருக்கும். முக்கியமாக இந்த சுசியம் வழக்கமாக செய்யும் சுசியத்தை விட செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு தேங்காய் சுசியத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் சுசியம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பொட்டுக்கடலை - 1/2 கப்
* நெய் - 1/2 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/2 மூடி
* வெல்லம் - 1 1/2 கப்
* தண்ணீர் - 1/4 கப்
மேல் மாவிற்கு...
* இட்லி மாவு - 1 கப்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலையை போட்டு நன்கு அரைத்து
பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் வெல்லத்தை பொடித்து சேர்த்து,
அதில் 1/4 கப் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும், அதை
வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் நெய்
சேர்த்து உருகியதும், துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடித்த பொட்டுக்கடலை பொடியை சேர்த்து நல்ல மணம்
வரும் வரை வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்ல நீரை சேர்த்து நன்கு கிளறி
விட வேண்டும்.
* கலவையானது நன்கு திரண்டு வந்ததும், அதை இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, ஒரு தட்டில் வைத்துக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு கிண்ணத்தில் 1 கப் இட்லி மாவை எடுத்து, அதில் 2 டேபிள்
ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள உருண்டையை எடுத்து,
மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்துக்
கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் மாவில் பிரட்டி,
எண்ணெயில் பொரித்து எடுத்தால், சுவையான தேங்காய் சுசியம் தயார்.



Click it and Unblock the Notifications









