Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
சுவையான... கேரட் சட்னி
கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது என்பதால், அடிக்கடி கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. உங்களுக்கு கேரட்டை பொரியல் செய்து சாப்பிட்டு போரடித்திருந்தால், இனிமேல் கேரட் சட்னி செய்து சுவையுங்கள்.
உங்களுக்கு இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி, பூண்டு சட்னி செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் இன்று சற்று வித்தியாசமாக கேரட் சட்னியை செய்து பாருங்கள். கேரட் சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, அடையுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது என்பதால், அடிக்கடி கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. உங்களுக்கு கேரட்டை பொரியல் செய்து சாப்பிட்டு போரடித்திருந்தால், இனிமேல் கேரட் சட்னி செய்து சுவையுங்கள்.

கேரட் சட்னியை இரண்டு முறையில் தயாரிக்கலாம். ஒன்று தேங்காய் சேர்த்து செய்யலாம். மற்றொன்று வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து செய்யலாம். உங்களுக்கு கேரட் சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் சேர்த்து தயாரிக்கப்படும் கேரட் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துருவிய கேரட் - 1 கப்
* தேங்காய் - 1/4 கப்
* சின்ன வெங்காயம் - 4
* பச்சை மிளகாய் - 7-8
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* புளி - 1 இன்ச்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* பின் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின் சின்ன வெங்காயம், கேரட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* இறுதியாக தேங்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* வதக்கிய பொருட்கள் குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு, புளி மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கேரட் சட்னி தயார்.
குறிப்பு:
* கேரட் சட்னியில் இனிப்பு அதிகம் தெரியக்கூடாது என்றால், பச்சை மிளகாயை சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
* சின்ன வெங்காயம் இல்லாவிட்டால், பாதி பெரிய வெங்காயத்தை பயன்படுத்துங்கள்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications







