Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும்
Aval Pakoda Recipe in Tamil: தமிழ்நாட்டில் தற்போது ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கியுள்ளது. மழை பெய்யும் போது சூடான நொறுக்குத்தீனி சாப்பிடுவது என்பது எழுதப்படாத விதியாக மாறிவிட்டது. மாலை நேரத்தில் உங்கள் வீட்டில் உள்ளோர் காபி, டீ குடிக்கும் போது ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? அதுவும் மொறுமொறுவென்று சூடாக சாப்பிட கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் அவல் உள்ளதா? அப்படியானால் அந்த அவலை வைத்து வித்தியாசமான சுவையில் பக்கோடா செய்து கொடுங்கள்.

இந்த அவல் பக்கோடா செய்வதற்கு மிகவும் எளிதானது அதேசமயம் சுவையானதும் கூட, மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த அவல் பக்கோடா நீங்கள் வழக்கமாக சாப்பிடும் பக்கோடா போல அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக, மொறுமொறுவென்று இருக்கும்.
உங்களுக்கு சுவையான அவல் பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் அவல்
- 1 பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கியது
- 1 உருளைக்கிழங்கு, வேகவைத்து நறுக்கியது
- அரை ஸ்பூன் துருவிய இஞ்சி
- 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
- 2 ஸ்பூன் கொத்தமல்லி இலை, பொடியாக நறுக்கியது
- 1 கொத்து கறிவேப்பிலை, நறுக்கியது
- ¼ ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- ¼ ஸ்பூன் ஓமம்
- தேவையான அளவு உப்பு
- 2 ஸ்பூன் உடைத்த வேர்க்கடலை
- 3 ஸ்பூன் கடலை மாவு
- பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய்
செய்முறை:
- முதலில், ஒரு கப் அவலைத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கழுவவும். அவலை ஊற வைக்கக்கூடாது, அலசினாலே போதும்.
- தண்ணீரை முழுமையாக வடித்துவிட்டு, அவலில் உள்ள நீர் முழுவதும் வெளியேறும் வகையில் அதை 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
- பின்னர் வடிகட்டிய அவலை ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றவும்.
- இந்த அவலில் நறுக்கிய பெரிய வெங்காயம், வேகவைத்த 1 உருளைக்கிழங்கு, ½ ஸ்பூன் துருவிய இஞ்சி, 2 மிளகாய், 2 ஸ்பூன் கொத்தமல்லி மற்றும் சிறிது கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- பின்னர் ¼ ஸ்பூன் மிளகாய்த்தூள், ¼ ஸ்பூன் ஓமம் மற்றும் ½ ஸ்பூன் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- அதன்பின் 2 ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை மற்றும் 3 ஸ்பூன் கடலை மாவு சேர்க்கவும்.
- இப்போது சிறிதளவு தண்ணீர் சேர்த்து அனைத்தையும் நன்றாக கைகளால் கலக்கவும், குறிப்பாக உருளைக்கிழங்கை நன்றாக மசிக்க வேண்டும்.
- இப்போது கைகளில் எண்ணெய் தடவி, சிறு உருண்டைகளாகத் தயார் செய்யவும்.
- சூடான எண்ணெயில் ஒவ்வொன்றாகப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
- எண்ணெயை வடிகட்டி தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறவும்.



Click it and Unblock the Notifications