Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
ஆந்திரா உள்ளி கார சட்னி ரெசிபி... இந்த மாதிரி அரைச்சு பாருங்க... எல்லாரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...!
Andhra Ulli Kara Chutney Recipe in Tamil: காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று முடிவெடுப்பது கடினமாக உள்ளதா? சற்று காரமான அதே சமயம் சுவையான சட்னியை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் உள்ளி கார சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி வழக்கமாக செய்யும் கார சட்னியை விட சற்று வித்தியாமான சுவையில் இருக்கும்.
ஒருமுறை இந்த சட்னியை அரைத்து விட்டால் அதன்பிறகு இட்லி, தோசை என்றாலே உங்களுக்கு இந்த சட்னிதான் நியாபகத்திற்கு வரும். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு ஒரு சில பொருட்களே போதுமானது. இந்த சட்னி செய்வதற்கு மிகவும் எளிதாகவும் அதேசமயம் சுவையாகவும் இருக்கும். பெரும்பாலான ஆந்திர ஹோட்டல்களில் இந்த சட்னி நிச்சயம் பரிமாறப்படும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் உள்ளி கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 2 பச்சை மிளகாய்
- 2 சிவப்பு மிளகாய்
- 1 ஸ்பூன் கொத்தமல்லி விதைகள்
- 5 பூண்டு பல்
- 2 வெங்காயம்
- தேவையான அளவு உப்பு
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகள்
- 1 கொத்து கறிவேப்பிலை
- சிறிதளவு புளி
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 சிவப்பு மிளகாய்
- 1 சிட்டிகை பெருங்காயம்
செய்முறை:
- முதலில் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- பின்னர் கொத்தமல்லி விதைகள், பச்சை மிளகாய் மற்றும் வர மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் பூண்டை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- பின்னர் உப்பு, புளி, சீரகம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சுருளும் வரை வதக்கவும்.
- இதை நன்கு ஆறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
-- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, வர மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து சட்னி மீதி கொட்டி நன்கு கிளறவும்.
- அவ்வளவுதான் சூப்பரான ஆந்திரா உள்ளி கார சட்னி ரெடி.



Click it and Unblock the Notifications











