Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
ஆந்திரா உள்ளி கார சட்னி ரெசிபி... இந்த மாதிரி அரைச்சு பாருங்க... எல்லாரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...!
Andhra Ulli Kara Chutney Recipe in Tamil: காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று முடிவெடுப்பது கடினமாக உள்ளதா? சற்று காரமான அதே சமயம் சுவையான சட்னியை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் உள்ளி கார சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி வழக்கமாக செய்யும் கார சட்னியை விட சற்று வித்தியாமான சுவையில் இருக்கும்.
ஒருமுறை இந்த சட்னியை அரைத்து விட்டால் அதன்பிறகு இட்லி, தோசை என்றாலே உங்களுக்கு இந்த சட்னிதான் நியாபகத்திற்கு வரும். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு ஒரு சில பொருட்களே போதுமானது. இந்த சட்னி செய்வதற்கு மிகவும் எளிதாகவும் அதேசமயம் சுவையாகவும் இருக்கும். பெரும்பாலான ஆந்திர ஹோட்டல்களில் இந்த சட்னி நிச்சயம் பரிமாறப்படும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் உள்ளி கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 2 பச்சை மிளகாய்
- 2 சிவப்பு மிளகாய்
- 1 ஸ்பூன் கொத்தமல்லி விதைகள்
- 5 பூண்டு பல்
- 2 வெங்காயம்
- தேவையான அளவு உப்பு
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகள்
- 1 கொத்து கறிவேப்பிலை
- சிறிதளவு புளி
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 சிவப்பு மிளகாய்
- 1 சிட்டிகை பெருங்காயம்
செய்முறை:
- முதலில் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- பின்னர் கொத்தமல்லி விதைகள், பச்சை மிளகாய் மற்றும் வர மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் பூண்டை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- பின்னர் உப்பு, புளி, சீரகம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- பின்னர் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சுருளும் வரை வதக்கவும்.
- இதை நன்கு ஆறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
-- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, வர மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து சட்னி மீதி கொட்டி நன்கு கிளறவும்.
- அவ்வளவுதான் சூப்பரான ஆந்திரா உள்ளி கார சட்னி ரெடி.



Click it and Unblock the Notifications