Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
தாய்ப்பாலின் சுரப்பை நிறுத்துவதற்கான சில இயற்கை வழிகள்!!!
குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது தான் தாய்ப்பால். ஏனெனில் இதிலிருந்து தான் குழந்தைகளுக்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். மேலும் அவர்களுக்கு வேண்டிய நோயெதிர்ப்பு சக்தி தாய்ப்பாலில் இருந்து தான் கிடைக்கும். இத்தகைய தாய்ப்பாலை குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட வயது வரைக் கொடுப்போம்.
ஏனெனில் எந்த அளவில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் இன்றியமையாததோ, அதேப் போல் அவர்கள் வளர வளர மற்ற உணவுகளும் மிகவும் முக்கியமானது. எனவே பல தாய்மார்கள் குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட வயதில் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள். அதனால் நாளடைவில் குழந்தைகளும் தாய்ப்பாலை மறந்துவிடுவார்கள். ஆனால் இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினாலும், ஒரு கட்டத்தில் மார்பகங்களில் இருந்து தாய்ப்பால் தானாக வெளியேறும்.
இத்தகைய பிரச்சனையை போக்குவதற்கு ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அந்த வழிகள் என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றை பின்பற்றினால், நிச்சயம் தாய்ப்பால் வெளியேறுவதை நிறுத்தலாம்.

முட்டைகோஸ்
தாய்ப்பால் வடிவதை தடுக்க ஒரு சிறந்த வழியென்றால், குளிர்ச்சியான முட்டைகோஸ் இலைகளை மார்பகங்களில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு செய்தால், தாய்ப்பால் வற்றிவிடும்.

சேஜ் டீ
ஒருவேளை முட்டைகோஸின் இலைகள் வேலை செய்யாவிட்டால், சேஜ் இலையால் செய்யப்பட்ட டீயை, தினமும் மூன்று முறை குடித்து வந்தால், தாய்ப்பாலின் உற்பத்தி குறைந்துவிடும்.

தண்ணீர்
தண்ணீர் அதிகம் குடித்து வந்தால், தாய்ப்பாலின் உற்பத்தியைத் தடுக்கலாம். ஒருவேளை உடலில் வறட்சி ஏற்பட்டால், அது தாய்ப்பாலின் உற்பத்தியை அதிகரித்துவிடும்.

புதினா
புதினாவின் சுவையுள்ள எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்டாலும், தாய்ப்பால் வற்றிவிடும். எனவே தினமும் புதினா டீ அல்லது புதினாவின் சுவைக் கொண்ட உணவுப் பொருளை உட்கொண்டால், இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

ஐஸ் பேக்
இயற்கை வழியில் தாய்ப்பாலின் சுரப்பைத் தடுக்க வேண்டுமானால், தினமும் இரண்டு முறை ஐஸ் கட்டிகளைக் கொண்டு மார்பகங்களை மசாஜ் செய்து வர வேண்டும்.



Click it and Unblock the Notifications
