Latest Updates
-
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க!
தாய்ப்பாலின் சுரப்பை நிறுத்துவதற்கான சில இயற்கை வழிகள்!!!
குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது தான் தாய்ப்பால். ஏனெனில் இதிலிருந்து தான் குழந்தைகளுக்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். மேலும் அவர்களுக்கு வேண்டிய நோயெதிர்ப்பு சக்தி தாய்ப்பாலில் இருந்து தான் கிடைக்கும். இத்தகைய தாய்ப்பாலை குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட வயது வரைக் கொடுப்போம்.
ஏனெனில் எந்த அளவில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் இன்றியமையாததோ, அதேப் போல் அவர்கள் வளர வளர மற்ற உணவுகளும் மிகவும் முக்கியமானது. எனவே பல தாய்மார்கள் குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட வயதில் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள். அதனால் நாளடைவில் குழந்தைகளும் தாய்ப்பாலை மறந்துவிடுவார்கள். ஆனால் இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினாலும், ஒரு கட்டத்தில் மார்பகங்களில் இருந்து தாய்ப்பால் தானாக வெளியேறும்.
இத்தகைய பிரச்சனையை போக்குவதற்கு ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அந்த வழிகள் என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றை பின்பற்றினால், நிச்சயம் தாய்ப்பால் வெளியேறுவதை நிறுத்தலாம்.

முட்டைகோஸ்
தாய்ப்பால் வடிவதை தடுக்க ஒரு சிறந்த வழியென்றால், குளிர்ச்சியான முட்டைகோஸ் இலைகளை மார்பகங்களில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு செய்தால், தாய்ப்பால் வற்றிவிடும்.

சேஜ் டீ
ஒருவேளை முட்டைகோஸின் இலைகள் வேலை செய்யாவிட்டால், சேஜ் இலையால் செய்யப்பட்ட டீயை, தினமும் மூன்று முறை குடித்து வந்தால், தாய்ப்பாலின் உற்பத்தி குறைந்துவிடும்.

தண்ணீர்
தண்ணீர் அதிகம் குடித்து வந்தால், தாய்ப்பாலின் உற்பத்தியைத் தடுக்கலாம். ஒருவேளை உடலில் வறட்சி ஏற்பட்டால், அது தாய்ப்பாலின் உற்பத்தியை அதிகரித்துவிடும்.

புதினா
புதினாவின் சுவையுள்ள எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்டாலும், தாய்ப்பால் வற்றிவிடும். எனவே தினமும் புதினா டீ அல்லது புதினாவின் சுவைக் கொண்ட உணவுப் பொருளை உட்கொண்டால், இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

ஐஸ் பேக்
இயற்கை வழியில் தாய்ப்பாலின் சுரப்பைத் தடுக்க வேண்டுமானால், தினமும் இரண்டு முறை ஐஸ் கட்டிகளைக் கொண்டு மார்பகங்களை மசாஜ் செய்து வர வேண்டும்.



Click it and Unblock the Notifications











