Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்!
சிசேரியனுக்கு பிறகு குழந்தையை தொட்டு தூக்கியதற்கு 2,000 பில் போட்டு அதிர வைத்த மருத்துவமனை!
தற்போது ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனைகள் என்ற பெயரில் பிரசவத்திற்கு, கண்களுக்கு, இதயத்திற்கு, ஈ.என்.டி, மூட்டு என தனித்தனியாக மருத்துவமனைகள் பிரிந்தாலும் பிரிந்தது, அவர்கள் போடும் பில்லு தாறுமாறாக ஏறுகிறது. கேட்டால் நாங்க கொஞ்சம் ஸ்பெஷலாக்கும் என கூறுகின்றனர்.

ஐ.சி.யு, ஐ.சி.சி.யூ, சி.சி.யூ, ஸ்பெஷல் பெட், நார்மல் பெட், ஜெனரல் வார்ட் என மருத்துவமனைகள் 5 ஸ்டார் ஹோட்டல்கள் ரேஞ்சுக்கு மாறிவிட்டன. இப்படி வகைவகையாக நம்மிடம் பில்லு போட இவர்கள் பல விஷயங்களை செய்து நாம் பார்த்திருக்கிறோம். ஏன் ரமணா ஸ்டைல் மருத்துவமனைகள் கூட ஊரூருக்கு ஒன்றிரண்டு இருக்கின்றன.
ஆனால், பெற்ற குழந்தையை தாய் தொட்டு தூக்கியதற்கு எல்லாம் இரண்டாயிரம் பில் போடுவது இந்த விதத்தில் நியாயம்???

$39.35
இது எந்த டாலர் நாடு என தெரியவில்லை. Imgur எனும் புகைப்படம் பகிரும் இணையத்தில், சமீபத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற தாய் ஒருவர் அவருக்கு மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட பில்லை பகிர்ந்திருந்தார்.
அதில், சிசேரியன் முடிந்த பிறகு, தான் பெற்ற குழந்தையை தொட்டு தூக்கியதற்கு மருத்துவமனையில் $39.35 டாலர்கள் பில் போடப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு!
அந்த பதிவில், அந்த புதிய தாய், "நான் பெற்ற குழந்தையை, தொட்டு தூக்குவதற்கு நான் $39.35 டாலர்கள் பில் கட்ட வேண்டியிருக்கிறது.." என குறிப்பிட்டு கூறியுள்ளார்.
Image Source

ஸ்கின் டூ ஸ்கின்!
அந்த பில்லில் மருத்துவமனை ஊழியர்கள், சிசேரியன் செய்த உடனேயே, ஸ்கின் டூ சிக்கின் டச்சில் அந்த தாய் குழந்தையை தூக்கியதற்கு என கூறப்பட்டுள்ளது.

இது சாதாரணம் தானே...
சிசேரியனோ, சுகப்பிரசவமோ, குழந்தை பிறந்தவுடன், தாய் தூக்குவது மிக சாதாரண விஷயம், மருத்துவர்களே முதலில் தாயிடம் தான் காண்பிப்பார்கள்.
இதற்கு ஏன் தனி பில் போட்டார்கள் என பலரும் அந்த பதிவின் கீழே கருத்து தெரிவித்துள்ளனர்.

எந்த ஊரு, எந்த ஹாஸ்பிடல்...
அந்த தாயின் பெயர் மற்றும் இடம் அந்த பதிவில் மறைக்கப்பட்டுள்ளது . அந்த பதிவை இதுவரை 60 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











