தாய்ப்பால் சுரப்பை கட்டுப்படுத்த வேண்டுமா? அப்ப மல்லிகை பூவை இப்படி யூஸ் பண்ணுங்க...

குழந்தை பெற்ற பிறகு குழந்தைக்கு கொடுக்கப்படும் முதல் உணவான தாய்ப்பால் மிகவும் முக்கியமான ஊட்டச்சத்துக்களை அதிகமாக கொண்டுள்ளது. எனவே முதல் 10 மாதங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது அத்தியாவசியமான ஒன்று என்பதை பல வகைகளில் மருத்துவர்கள் எடுத்துக் கூறி இருக்கிறார்கள்.

மேலும் சில தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு மூன்று வயது வரை தாய்ப்பாலை கொடுத்து வளர்த்து இருக்கிறார்கள். ஆனால் இன்று அத்தகைய நிலைமை இல்லை. மேலும் குறைந்தபட்சம் ஒரு வயது வரை தாய்ப்பால் பருகக்கூடிய குழந்தைகள் தான் இருக்கிறார்கள்.

How To Use Jasmine Flower To Control Milk Secretion In Tamil

பெண்களின் தற்போதைய நிலை

தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல்வேறு தொழில்களை செய்து வந்தாலும் ஆண்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் குடும்ப பொருளாதாரத்தை அதிகரிக்க கூடிய நோக்கத்தில் பணிக்குச் செல்லக்கூடிய பெண்கள் அதிகரித்து இருக்கிறார்கள்.

எனவே இவர்கள் தங்கள் பணிக்கு செல்வதில் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாமல் தங்களது குழந்தையை வளர்க்க விரும்புகிறார்கள். அதற்கு ஏற்றபடி தான் இவர்கள் தாய்ப்பாலை பெற்ற பிள்ளைகளுக்கு கொடுக்கக்கூடிய சூழ்நிலை இருப்பதால் குறைந்தபட்சம் ஒரு வருடம் வரைதான் தாய் பாலை தருகிறார்கள்.

எனவே ஒரு வருடத்திற்கு பிறகு பால் சுரப்பை கட்டுப்படுத்த முயற்சி செய்வதோடு அதற்காக மருத்துவரை அணுகி அதற்குரிய மருந்துகளை உட்கொண்டு வருகிறார்கள்.

அப்படிப்பட்ட பெண்கள் இனிமேல் பால் சுரப்பை கட்டுப்படுத்த மருத்தவர்களை அணுகாமல் இயற்கையான முறையில் பால் சுரப்பை கட்டுப்படுத்த சில வழிகளை பின்பற்றலாம். அதில் சிறப்பான ஒன்றுதான் மல்லிகை பூ. இந்த மல்லிகை பூவை பால் கொடுக்கும் பெண்கள் பயன்படுத்துவதன் மூலம் பால் சுரப்பை கட்டுப்படுத்த முடியும்.

மேலும் மல்லிகை பூவில் இருக்கக்கூடிய சில ஹார்மோன்கள் எப்படி பாலியல் உணர்வுகளை தூண்டுகிறதோ, அதுபோலவே பால் சுரப்பையும் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் நிறைந்தது. இது ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், நமது முன்னோர்கள் பால் சுரப்பை கட்டுப்படுத்த மல்லிகை பூவை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

பால் சுரப்பை கட்டுப்படுத்த மல்லிகை பூவை பயன்படுத்தக்கூடிய விதம்

பால் சுரப்பை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் மல்லிகைப்பூவை 100 கிராம் அளவு எடுத்துக் கொண்டு அதை மென்மையாக அரைத்து தங்களது மார்பில் அப்படியே தடவி விட்டுவிட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்வதன் மூலம் எளிதில் பால் வற்றிவிடும்.

மேலும் தாய்மார்கள் குழந்தைக்கு பால் கொடுக்கும் பொழுது மல்லிகை பூவை மார்பகங்களில் அப்படியே போட்டு விட்டபடி பாலை கொடுக்கும் போது குழந்தைகளுக்கு மல்லிகை பூவின் வாடை பிடிக்காமல் பால் குடிப்பதை அவர்கள் தானாகவே நிறுத்தி விடுவார்கள். இதன் மூலமும் உங்கள் பால் சுரப்பு எளிதில் நின்றுவிடும்.

எனவே தான் பெண் பிள்ளைகளுக்கு மல்லிகை பூவை அடிக்கடி தலையில் சூட்டுவதோடு அதனை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நமது பாரம்பரியமாக நமது முன்னோர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள். தாய்ப்பாலை நிறுத்த வேண்டும் என்று முயற்சி செய்பவர்களுக்கு தாய்ப்பால் கட்டி விடுதல் மற்றும் மார்பகங்களில் வலியும் ஏற்படும்.

இதனையும் இந்த மல்லிகைப்பூ சரி செய்யக்கூடிய ஆற்றல் கொண்டது என கூறலாம். இதில் இருக்கும் வேதிப்பொருட்கள் பால் கட்டை சரி செய்து மார்பகங்களில் ஏற்படும் வலியை நிவர்த்தி செய்கிறது.

மேலும் அதிகளவு பால் சுரப்பு இருக்கக்கூடிய சமயத்தில் மல்லிகைப்பூ வைத்தியம் சரியாக வேலை செய்யாது. எனவே மார்பகங்களில் பால் சுரப்பது சற்று குறைவாக இருக்கும் போது எந்த முறையை நீங்கள் பின்பற்றினால் கட்டாயம் உங்களுக்கு பால் சுரப்பு தடைபடும்.

Story first published: Sunday, August 6, 2023, 14:00 [IST]
Desktop Bottom Promotion