பெற்றோர்களே! உங்க குழந்தைங்க மொபைல் நோண்டாம...புத்தகம் படிக்க வைக்க இத பண்ணுங்க போதும்!

படிக்கும் திறன் குழந்தைகளுக்கு அறிவு மற்றும் கற்பனையின் உலகத்தைத் திறக்கிறது. புத்தகம் படிப்பது குழந்தைகளின் வாழ்க்கையில் முக்கியமான திறன்களை உருவாக்குகிறது. ஆனால், தற்போதுள்ள பெரும்பாலான குழந்தைகள் மொபைல் போன்க்கு அடிமையாகி வருகிறார்கள்.

குழந்தைகள் தங்கள் பெரும்பலான நேரத்தை மொபைல் போன்களில் செலவிடுகிறார்கள். சிறு குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வத்தை வளர்த்து, அவர்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமை. ஆனால், இதை செய்வது மிகவும் கடினமாக இருக்கலாம்.

How To Encourage Your Kids To Read Books​ In Tamil

படிக்கும் ஆர்வத்தை ஊக்குவிப்பதற்கும், மொபைல் போன் அடிமையாவதைத் தடுப்பதற்கும் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு உதவுவதற்கு இக்கட்டுரையில் சில வழிகளை கொடுத்துள்ளோம். இந்த வழிகளை பின்பற்றி உங்கள் குழந்தையை புத்தக வாசிப்பாளராக ஆக்குங்கள்.

வாசிப்பை வேடிக்கையாக ஆக்குங்கள்
முதலாவதாக, வாசிப்பை சுவாரஸ்யமாகவும் வேடிக்கையாகவும் மாற்றுவது முக்கியம். புத்தம் படிப்பது அல்லது வசிப்பது குழந்தைகளுக்கு ஒரு வேலையாக தோன்றக்கூடாது. அப்படி தோன்றினால், அவர்கள் புத்தகம் படிக்க மாட்டார்கள். வாசிப்பது குழந்தைகளுக்கு சுவாரஸ்யமாகத் தோன்றினால், குழந்தைகள் அதைக் காதலிக்க வாய்ப்புகள் அதிகம்.

கண்ணைக் கவரும் விளக்கப்படங்கள் மற்றும் மனதைக் கவரும் கதைகளைக் கொண்ட புத்தகங்களை அவர்களுக்கு படிக்கக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் அவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்களைத் அவர்களே தேர்ந்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும். மேலும் அவர்கள் விரும்புவதைக் கண்டறிய வெவ்வேறு வகைகளில் பரிசோதனை செய்ய அனுமதிக்கவும்.

வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்
அடுத்த படியாக உங்கள் குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். குடும்பப் பிணைப்புக்கு இது ஒரு இனிமையான மற்றும் அமைதியான செயலாக இருக்கும். மேலும் இது குழந்தைகளுக்கு வாசிப்பை நல்ல உணர்வுகளுடன் இணைக்க உதவுகிறது.

ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களாவது, உங்கள் குழந்தையுடன் படிக்க நேரத்தை செலவிடுங்கள். குழந்தைகள் படிப்பதற்கான இடங்களை உருவாக்குங்கள். இருக்கைகள் மற்றும் பரந்த அளவிலான புத்தகங்களுடன் வசதியான வாசிப்புப் பகுதியை உருவாக்குவது, குழந்தைகள் தாங்களாகவே படிக்க அதிக உந்துதலை ஏற்படுத்த உதவும்.

உதாரணம் மூலம் கற்பிக்கவும்
நிபுணர்கள் கூறுகையில், வாசிப்புப் பழக்கத்தை மாடலிங் செய்வது வாசிப்பு ஆர்வத்தை ஊக்குவிக்கும் மற்றொரு திறமையான முறையாகும். உங்கள் குழந்தைகளுக்கு முன்பாக நீங்கள் அடிக்கடி படிக்கும்போது, அவர்களும் படிக்க விரும்புவார்கள், ஏனென்றால் குழந்தைகள் பெரும்பாலும் உதாரணம் மூலம் கற்றுக்கொள்கிறார்கள். குடும்பமாகப் படிக்க நேரம் ஒதுக்குங்கள், வீடு முழுவதும் புத்தகங்கள் மற்றும் வாசிப்புப் பொருட்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

வாசிப்பை கொண்டாடுங்கள்
இறுதியாக, வாசிப்பு வெற்றிகளை அங்கீகரிப்பதும் பாராட்டுவதும் முக்கியம். உங்கள் பிள்ளை ஒரு புத்தகத்தை முடித்ததும் அல்லது வாசிப்பு மைல்கல்லை எட்டும்போதும் அவர்களின் சாதனையை அங்கீகரித்து கொண்டாடுங்கள். இதன் விளைவாக, அவர்கள் மேலும் படிக்க உத்வேகம் பெறுவார்கள் மற்றும் அவர்களின் வாசிப்புத் திறனைப் பற்றி நன்றாக உணருவார்கள்.

இறுதிக்குறிப்பு
ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வியானது சிறு குழந்தைகளுக்கு வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பெற்றோர்களும் கல்வியாளர்களும் குழந்தைகளை மகிழ்விப்பதன் மூலமும், வழக்கமான வாசிப்பை ஊக்குவிப்பதன் மூலமும், நல்ல வாசிப்புப் பழக்கத்தை முன்மாதிரியாகக் கொண்டும், வாசிப்பு வெற்றியை அங்கீகரிப்பதன் மூலமும், வாழ்நாள் முழுவதும் வாசிப்பின் மீதான அன்பைப் பெறுவதற்கு குழந்தைகளுக்கு ஆதரவளிக்க முடியும்.

Story first published: Saturday, May 6, 2023, 19:05 [IST]
Desktop Bottom Promotion