Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
இந்த அறிகுறிகள் உங்ககிட்ட இருந்தா... நீங்க ரொம்ப பாவமாம்...ஏன்னா? உங்க பெற்றோர் இப்படிபட்டவங்களாம்!
குழந்தைப் பருவத்தில், நிலையான விமர்சனங்கள் உங்கள் எண்ணங்கள், உணர்வுகள் அல்லது செயல்கள் ஏதோ ஒரு வகையில் குறைபாடுடையவை என்ற கருத்தை உங்களுக்குத் தரக்கூடும்.
நாம் இளமையாக இருக்கும்போது, எல்லாவற்றையும் விட பெற்றோரின் அன்பையும் அரவணைப்பையும் விரும்புகிறோம். ஒவ்வொரு குழந்தையும் பெற்றோரிடமிருந்து பெற விரும்புவது இதைத்தான். தங்கள் குழந்தைகளை நல்லவர்களாகவும் புத்திசாலியாகவும் ஆரோக்கியமானவர்களாகவும் வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. ஆனால், சில பெற்றோர்களின் அறியாமை, பிடிவாதமான அல்லது மோசமான நடத்தை குழந்தைகளை தவறான பாதைக்கு அழைத்து செல்லலாம். இப்படியான பெற்றோர்கள் உங்களையும் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் விமர்சனம் செய்வார்கள். துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் தொடர்ந்து விமர்சிக்கும் ஒரு பெற்றோரைக் கொண்டிருப்பது, உங்கள் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கலாம்.

நீங்கள் செய்யும் எதுவும் பெற்றோர்களுக்கு போதுமானதாக இல்லை என உணரவைத்து உங்கள் மன ஆரோக்கியத்தில் பாதகமான விளைவை ஏற்படுத்தலாம். குறைந்தபட்சம், உங்களைப் பற்றியும் வெளி உலகத்தைப் பற்றியும் உங்கள் கண்ணோட்டத்தை மாற்றலாம். இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் நீங்கள் அதிகமாக விமர்சிக்கும் பெற்றோரால் வளர்க்கப்பட்டீர்கள் என்பதைக் காட்டும்.

எல்லா நேரத்திலும் மன்னிப்பு கேட்பது
நீங்கள் எல்லா நேரத்திலும் மன்னிப்பு கேட்பவராக இருந்தால், விமர்சனம் செய்யும் பெற்றோரால் நீங்கள் வளர்க்கப்பட்டிருக்க்கலாம். நீங்கள் நிரபராதியாக இருந்தாலும் கூட, இவ்வளவு காலமாக பல விஷயங்களுக்காக நீங்கள் மன்னிப்புக் கேட்டிருக்கலாம், அதுதான் உங்களிடம் பெற்றோர் எதிர்பார்த்திருப்பார்கள். உங்கள் பெற்றோர்கள் உங்களை குற்றவாளியாக உணர வைப்பதால் மற்றவர்கள் உங்களை எதிர்மறையாகப் பார்க்க வாய்ப்புள்ளது. நீங்கள் எல்லா நேரத்திலும் "மன்னிக்கவும்" என்று சொல்லத் தேவையில்லை. உங்கள் மீது தவறு இருந்தால், மட்டுமே மன்னிப்பு கேட்க வேண்டும்.

தவறுகள் உங்களை உடைத்துவிடும்
மிகச்சிறிய தவறுகள் கூட மிகையான விமர்சனம் செய்யும் பெற்றோர்களால் பெரிதாக்கப்படுகின்றன. இதனால், நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறும் உங்களை எதிர்மறையாக வரையறுப்பதாக நீங்கள் உணருவீர்கள், எல்லோரும் அதைச் செய்தாலும் (பெரும்பாலும், உங்கள் தந்தை அதிகமாக விமர்சிக்கிறார்). இதன் காரணமாக, சிறிய தவறு கூட உங்களை முழு தோல்வியாக உணர வைக்கும். தவறுகள் செய்வது மனித இயல்பு, எல்லாரும் ஒரு சூழ்நிலையில் தவறு செய்வார்கள். ஆனால் அவர்கள் செய்யும் போது, அது உங்கள் தவறுகளுக்கு மேலும் சான்றாக உணர்கிறது. ஒரு சிறிய தவறின் காரணமாக உங்கள் சுய மதிப்பு சரிந்துவிடும். இது உங்கள் முந்தைய தவறுகளை நினைவூட்டும்.

உங்களை நம்புவதற்கு நீங்கள் போராடுகிறீர்கள்
குழந்தைப் பருவத்தில், நிலையான விமர்சனங்கள் உங்கள் எண்ணங்கள், உணர்வுகள் அல்லது செயல்கள் ஏதோ ஒரு வகையில் குறைபாடுடையவை என்ற கருத்தை உங்களுக்குத் தரக்கூடும். இதன் விளைவாக நீங்கள் அடிக்கடி சுய சந்தேகத்தால் பாதிக்கப்படுகிறீர்கள். குழந்தை பருவத்தில் தொடர்ச்சியான விமர்சனத்தை அனுபவித்தவர்கள் தங்கள் மீது நம்பிக்கையை வளர்க்க போராடுவார்கள். நீங்கள் சரியான புத்திசாலி அல்லது போதுமான வலிமை இல்லாதவர் என்று உங்கள் மனதுக்கு தோன்றலாம்.

நீங்கள் முழுமையின் பின்னால் ஓடுகிறீர்கள்
அதிகமாக விமர்சிக்கும் பெற்றோரைக் கொண்டிருப்பதன் பக்க விளைவு பரிபூரணவாதம். அடிக்கடி திட்டிய பிறகும், இழிவுபடுத்தப்பட்டும், உடைந்து போன பிறகும் எல்லாவற்றையும் கச்சிதமாக மாற்றுவதற்கு நீங்கள் ஒரு சமாளிக்கும் உத்தியை உருவாக்குவீர்கள். துரதிர்ஷ்டவசமாக, இது உங்களுக்கு உதவாது. ஏனெனில், இங்கு முழுமை அல்லது பரிபூரணம் என்று எதுவும் இல்லை. மிகவும் விமர்சிக்கும் ஒருவரைப் போல மகிழ்ச்சியற்ற ஒருவரை எதுவும் திருப்திப்படுத்தாது. உங்கள் வேலையின் பெருமைக்காக நீங்கள் முழுமைக்காக பாடுபடவில்லை, மாறாக தவறு செய்து திறமையற்றவர்களாக மாறிவிடுவோம் என்ற பயத்தினால் ஓடுகிறீர்கள்.

உடன்பிறந்தவர்களுடன் சண்டையிட்டு முடிப்பீர்கள்
மோசமான பெற்றோர்கள் அடிக்கடி உடன்பிறப்புகளுக்கு இடையே பதட்டமான உறவுகளை நிலவ வைக்கிறார்கள். விமர்சன செய்யும் பெற்றோர்கள் உங்களை உங்கள் சகோதர மற்றும் சகோதரியோடு ஒப்பிட்டு பேசும்போது, உங்களுக்குள் விரிசல் வரலாம். நீங்கள் நெருக்கம் மற்றும் இணைப்பின் தருணங்களை அனுபவிக்கும் போது, நம்பிக்கையின் உறுதியான அடித்தளம் இல்லை. உங்களிடம் போதுமான புத்திசாலித்தனமாக இல்லை என்று எப்போதும் உடன் பிறந்தவர்களுடன் வைத்து பேசுவது, சில நேரங்களில் உங்களுக்குள் சண்டையை ஏற்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications











