Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஜூன் 2026: இன்று உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம் -
விவாகரத்து இனி சுலபம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தம்பதிகளுக்குக் கொடுக்கும் நிம்மதி என்ன? -
தக்காளி இருந்தா இந்த மாதிரி ஹைதராபாத் தக்காளி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
ஹனிமூனுக்குப் பெற்றோரையும் கூட்டிச் சென்ற கணவர்! விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற மனைவி - என்ன நடந்தது? -
இந்தியாவின் ஒரு ரயில் நிலையத்தில் கூட ஏன் மருந்து கடை இருப்பதில்லை தெரியுமா? இதுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கா -
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களுக்காக பணத்தை செலவழிப்பவர்களை விட்டு வறுமை எப்பவுமே போகாதாம் -
1 கப் பட்டாணி இருந்தா இந்த மாதிரி பட்டர் மசாலா செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும்
செரிமானக் குறைவாலும் மலட்டுத் தன்மை ஏற்படுமாம்!!!

ஊட்டச்சத்துக் குறைவு: பொதுவாக கருவில் உள்ள குழந்தை வளர்வதற்கு சரியான ஊட்டச்சத்து வேண்டும். ஏனெனில் வயிற்றில் இருக்கும் குழந்தை தாயின் வயிற்றில் சரியாக செரித்து வரும் உணவைத் தான் உண்டு வளரும், ஆனால் அந்த செரிமானம் நன்கு நடைபெறவில்லையென்றால், பிறகு எப்படி குழந்தை உணவை உண்டு வளரும். அதனால் தான் செரிமானக் கோளாறு இருந்தால், கருவுறுதல் தடைபடுகிறது.
ஹார்மோன் குறைவு: எப்போது உடலில் ஹார்மோன் இயக்கத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளதோ, அப்போது அண்டவிடுப்பிற்கு தேவையான ஹார்மோனை நாளமில்லா சுரப்பிகள் வெளியிட முடியாத நிலையில் இருக்கும். இதுவே நீண்ட நாட்கள் நீடித்தால், பின் கருவுறுதல் மிகவும் கடினமாகிவிடும்.
எடை குறைவு: இரைப்பையில் ஏற்படும் ஒரு வகை நோயான குடல் எரிச்சலால், உடல் எடை குறையக் கூடும். மேலும் எப்போது உடல் எடை இருக்க வேண்டிய எடையை விட குறைவாக இருக்கிறதோ, அப்போது மாதந்தோறும் வரும் மாதவிடாய் நின்றுவிடும். அதிலும் இந்த பிரச்சனை உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கு ஏற்படும்.
நாள்பட்ட அனீமியா: உடலில் இரத்த அணுக்களான ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் அனீமியா ஏற்படும். இரத்த குறைவு ஏற்படுவதற்கு காரணமும் ஊட்டச்சத்து குறைவினால் தான். ஆகவே உடலில் இரத்தம் குறைவாக இருந்தால், குழந்தை ஆரோக்கியமாக பிறப்பது கடினம். சிலசமயங்களில் கர்ப்பம் தறிப்பது கூட கடினமாகிவிடும்.
செலியாக் நோய்: இந்த நோய் செரிமானக் கோளாறால் ஏற்படும். இவை குழிக்குடலில் ஏற்படும் ஒருவித நோய். மேலும் இந்த நோய் உடலில் வந்தால், அவ்வளவு சீக்கிரம் தெரியாது. ஏனெனில் அதற்கான அறிகுறிகள் தெரிந்தாலும், அதை அனைவரும் சாதாரணமாக விட்டுவிடுவோம். இதற்கான அறிகுறி வயிற்றுப்போக்கு ஏற்படுவது போல் தான் இருக்கும். ஆனால் அவ்வாறு போகும் போது அடிவயிற்றில் வலியோடு, வயிற்றுப்போக்கு போகும். மேலும் இந்த செலியாக் உடலில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவிடாமல், வெளியேற்றிவிடும். இதனால் கருவுறுதல் தடைபடும்.
ஆகவே இவற்றையெல்லாம் நினைவில் கொண்டு, உடல் நலத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். சரியான ஊட்டச்சத்து உணவுகளை உண்டு, அழகான குழந்தையை பெற்றெடுங்கள்...



Click it and Unblock the Notifications