Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
செல்லங்கள் தவழ ஆரம்பிச்சுடாங்களா!!! இதை படிச்சு பாருங்க...

1. எப்போது குழந்தைகள் தவழவும், நிலை தடுமாறி நடக்கவும் துவங்குகிறார்களோ, அப்போது அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில், அவர்கள் முன் நின்று அவர்களை அழைக்கலாம் அல்லது அவர்கள் முன் ஏதேனும் அவர்கள் கண்ணை பறிக்கும் வகையான பொருட்களை வைத்து அவர்கள் எடுக்க முன் வரும்படி செய்யலாம். உதாரணமாக, குழந்தைகளுக்கு சத்தம் வரும் பொம்மைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனை அவர்கள் முன் வைத்து சத்தத்தை ஏற்படுத்தி அவர்கள் கைக்கு எட்டும் வகையில் வைக்கலாம். இதனால் அவர்கள் மேலும் சுறுசுறுப்படைவார்கள்.
2. எலும்புகள் உறுதியாக இருந்தால் குழந்தைகளுக்கு எந்த நோய் மற்றும் வேறு எந்த ஒரு பிரச்சனையும் உடலில் வராது. ஆகவே அவ்வாறு அவர்கள் எலும்புகளை வலுப்படுத்த, குழந்தைகளுக்கு குளிப்பாட்டும் முன் எண்ணெய் வைத்து அவர்களுக்கு உடல் முழுவதும் மசாஜ் செய்ய வேண்டும். இத்தகைய எண்ணெய் மசாஜ் ஆனது, அவர்களுக்கு சரியான வடிவத்தை தரும். உதாரணமாக, இப்போது குழந்தைகளுக்கு மசாஜை மூக்கில் மற்றும் உதட்டில் செய்தால், மூக்கானது கூர்மையாக அழகாக வடிவம் பெறும். எப்படியென்றால் குழந்தைகளது எலும்பானது மிகவும் மென்மையாக இருப்பதால், இந்த வகையான மசாஜ் அவர்களுக்கு வடிவத்தை தருவதோடு, வலிமையும் அடையும்.
3. எப்போது குழந்தையானது தவழ ஆரம்பிக்கிறதோ, அப்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதலில் எந்த ஒரு பொருளையும் ஜன்னல் அருகே வைக்க வேண்டாம். ஏனெனில் அந்த பொருள் அவர்கள் கண்களைப் பறித்தால் கண்டிப்பாக எப்போதாவது அதை எடுக்க அவர்கள் முயற்சி செய்து, அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மேலும் எந்த ஒரு கூர்மையான பொருளையும் அவர்கள் முன்னாடி வைக்காதீர்கள். வீட்டின் கதவை திறந்து வைத்து வேலை செய்யாதீர்கள். சொல்லப்போனால், எந்த வேலை செய்தாலும், எப்போதும் அவர்களை கவனித்துக் கொண்டே செய்யுங்கள்.
4. குழந்தைகள் எப்போதும் ஒரே இடத்தில் இருக்க மாட்டார்கள். ஆகவே அவர்கள் தவழ ஆரம்பித்தால், அவர்களை கட்டிலில் தனியாக விட்டு விட வேண்டாம். என்ன தான் அவர்களைச் சுற்றி தலையணை, விளையாட்டுப் பொருட்கள் என்று வைத்தாலும், தவழ ஆரம்பித்தால் அவர்கள் கை, கால்கள் துறுதுறுவென்று இருக்கும். அப்போது கட்டிலில் விட்டால் அவர்கள் விழ வேண்டிவரும். கட்டிலானது உயரம் குறைவாக இருந்தால் பாரவாயில்லை, ஆனால் உயரமாக இருந்தால் ஆபத்து தான்.
ஆகவே உங்கள் குழந்தை தவழ ஆரம்பித்தால் மேற்கூறிய அனைத்தையும் நினைவில் வைத்து செயல்படுங்கள்.



Click it and Unblock the Notifications