Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை எப்படி பாத்துக்கணும் தெரியுமா?

* பொதுவாக பிறத்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது தான் நல்லது என்று மருத்துவர்கள் கூறுவார்கள். ஆனால் அதுவே குறை மாதத்தில் குழந்தை பிறந்தால், அப்போது தாய்ப்பால் கண்டிப்பாக கொடுக்கக்கூடாது. ஏனெனில் அப்போது குழந்தையால் பாலை குடிக்கும் அளவில் திறமை இருக்காது. ஆகவே குறை மாதத்தில் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் முன்பு, மருத்துவரை அணுகியப் பின்னரே பாலை கொடுக்க வேண்டும். ஏனெனில் ஆரம்பத்தில் குழந்தையின் எந்த உறுப்புகளும் சரியாக இயங்க முடியாது. எனவே தான் மருத்துவரை அணுகி, எப்போது கொடுக்கலாம் என்று தெரிந்து கொண்டு கொடுக்க வேண்டும்.
* குறை மாதத்தில் பிறந்த குழந்தைக்கு மசாஜ் செய்வது ஒரு சிறந்த வழி. ஏனெனில் இதனால் குழந்தையின் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, சருமத்தின் நிலை மற்றும் செரிமான மண்டலம் நன்கு நடைபெறும். மேலும் மசா4 செய்தால், குழந்தையின் உடல் நன்கு வலுவோடு, ஆரோக்கியத்துடன் இருக்கும்.
* குறைமாத குழந்தைக்கு படுக்கும் நிலை என்பது மிகவும் முக்கியமானது. மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த பின்னர் கவனிக்க வேண்டிய ஒரு விஷயத்தில், இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் சில சமயங்களில் குழந்தையின் படுக்கும் நிலை சரியாக இல்லாத காரணத்தினாலும், குழந்தை இறக்க நேரிடும். ஆகவே குழந்தையை சரியாக படுக்க வைப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
* இந்த மாதிரியான குழந்தையின் உடலில் சரியான அளவில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. ஆகவே இந்த குழந்தையை எளிதில் கிருமிகள் தாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே சரியான சுத்தமான பராமரிப்பு அவசியம்.
* குழந்தை குறைமாதத்தில் பிறந்தால், தொடர்ச்சியாக மருத்துவரிடம் சென்று சோதிக்க வேண்டும். இதனால் குழந்தையை ஏதாவது நோய் தாக்கியிருந்தாலும், அதை உடனே வளர விடாமல் தடுக்கலாம்.
ஆகவே மேற்கூறியவற்றையெல்லாம் நினைவில் கொண்டு, குறை பிரவசத்தில் குழந்தை பிறந்தால், மிகவும் கவனமாக பராமரிக்கவும். இதனால் குழந்தை விரைவில் நன்கு வலுவோடு வளர்ந்து, ஆரோக்கியத்துடன் இருக்கும்.



Click it and Unblock the Notifications