Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
குழந்தையின் எடை அதிகமா இருக்கா? முதல்ல கவனிங்க...

1. குழந்தை கருவில் இருக்கும் போதே தினமும் உடல் எடையை தாயானவள் பரிசோதிக்க வேண்டும். ஒரு வேளை கருவில் இருக்கும் போது தாயின் எடை அதிகரித்தால், பிறந்த பின் குழந்தையும் அதிக எடையுடன் இருக்கும். ஆகவே அப்போது குழந்தையின் நலத்துக்காக தாய், உணவில் ஒரு சில டயட் அல்லது எளிய உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதனால் குழந்தை அதிக எடையுடன் இல்லாமல் இருக்கும்.
2. குழந்தை அதிக எடையோடு இல்லாமல் இருக்க, குழந்தை பிறந்த பின் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஏனெனில் தாய்ப்பாலானது பாட்டில் பாலை விட ஆரோக்கியமானது. அவ்வாறு தாய்ப்பால் கொடுத்தால் குழந்தையின் எடை கண்டிப்பாக குறையும். மேலும் அவ்வாறு தாய்ப்பால் கொடுத்தால், குழந்தை பசிக்கு ஏற்றவாறு மட்டுமே குடிக்கும்.
3. சில சமயங்களில் பரம்பரை ஜீன்கள் காரணமாகவும் குழந்தைகள் அதிக எடையுடன் இருக்கும். அதுமட்டுமல்லாமல் குடும்பத்தில் யாராவது அதிக எடையுடன் இருந்தாலும் குழந்தை குண்டாக இருக்கும். ஆகவே அப்போது குழந்தையை குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று, அவரது ஆலோசனையின் படி மருந்துகளை குழந்தைக்கு கொடுத்து, குழந்தையின் எடையை குறைக்கலாம்.
4. குழந்தை அழ ஆரம்பித்தால் சில தாய்மார்கள் உடனே பாலைக் கொடுப்பார்கள். முதலில் தாய்மார்கள் குழந்தை பசிக்கு மட்டும் அழாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு தெரியாமல் குழந்தைக்கு அழும் போதெல்லாம் பாலைக் கொடுத்தால், குழந்தைக்கு அதுவே பழக்கமாகிவிடும். ஆகவே அப்போது அவர்களை சமாதானப்படுத்த வேறு வழிகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தை அதிக எடையுடன் கொழுக் மொழுக் என்று இருந்தால் நன்றாகத் தான் இருக்கும், ஆனால் அது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
5. குழந்தையின் எடை அதிகமாக இருக்கும் போது குழந்தைக்கு சிறிது டயட் ஆனது தேவைப்படுகிறது. ஆகவே அப்போது குழந்தைக்கு மருத்துவரின் ஆலோசனையின் படி, ஜூஸ் மற்றும் சிறிது திட உணவுகளை கொடுக்கலாம். அதற்காக ஓவர் டயட் கூடாது. சில பெற்றோர்கள் குழந்தைக்கு கிரீம் பால் மற்றும் வெண்ணெயை கொடுப்பார்கள். அது எதிர்காலத்தில் அவர்களுக்கு மிகவும் சிரமத்தை தரும்.
ஆகவே மேற்கூறியவற்றையெல்லாம் மனதில் கொண்டு, குழந்தையின் உணவுப் பொருட்களை, அவர்களது எடையை சரியாக பராமரித்து வந்தால், ஆரோக்கியமாக இருப்பதோடு, குழந்தையும் ஃபிட்டாக அழகாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications