Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 4 குணம் உள்ள பெண் அவரது கணவரின் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றுவாராம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கொள்ளு குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 16 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணக்கஷ்டம் தேடிவருமாம் - ஜாக்கிரதை -
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் நடக்கப்போகும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்.. -
மாங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
உலகின் டாப் 10 பணக்கார குட்டி நாடுகள் என்னென்ன தெரியுமா? இந்த நாடுகளில் சில ஆயிரம் பேரே வாழ்கிறார்களாம்
குழந்தையின் எடை அதிகமா இருக்கா? முதல்ல கவனிங்க...

1. குழந்தை கருவில் இருக்கும் போதே தினமும் உடல் எடையை தாயானவள் பரிசோதிக்க வேண்டும். ஒரு வேளை கருவில் இருக்கும் போது தாயின் எடை அதிகரித்தால், பிறந்த பின் குழந்தையும் அதிக எடையுடன் இருக்கும். ஆகவே அப்போது குழந்தையின் நலத்துக்காக தாய், உணவில் ஒரு சில டயட் அல்லது எளிய உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதனால் குழந்தை அதிக எடையுடன் இல்லாமல் இருக்கும்.
2. குழந்தை அதிக எடையோடு இல்லாமல் இருக்க, குழந்தை பிறந்த பின் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஏனெனில் தாய்ப்பாலானது பாட்டில் பாலை விட ஆரோக்கியமானது. அவ்வாறு தாய்ப்பால் கொடுத்தால் குழந்தையின் எடை கண்டிப்பாக குறையும். மேலும் அவ்வாறு தாய்ப்பால் கொடுத்தால், குழந்தை பசிக்கு ஏற்றவாறு மட்டுமே குடிக்கும்.
3. சில சமயங்களில் பரம்பரை ஜீன்கள் காரணமாகவும் குழந்தைகள் அதிக எடையுடன் இருக்கும். அதுமட்டுமல்லாமல் குடும்பத்தில் யாராவது அதிக எடையுடன் இருந்தாலும் குழந்தை குண்டாக இருக்கும். ஆகவே அப்போது குழந்தையை குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று, அவரது ஆலோசனையின் படி மருந்துகளை குழந்தைக்கு கொடுத்து, குழந்தையின் எடையை குறைக்கலாம்.
4. குழந்தை அழ ஆரம்பித்தால் சில தாய்மார்கள் உடனே பாலைக் கொடுப்பார்கள். முதலில் தாய்மார்கள் குழந்தை பசிக்கு மட்டும் அழாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு தெரியாமல் குழந்தைக்கு அழும் போதெல்லாம் பாலைக் கொடுத்தால், குழந்தைக்கு அதுவே பழக்கமாகிவிடும். ஆகவே அப்போது அவர்களை சமாதானப்படுத்த வேறு வழிகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தை அதிக எடையுடன் கொழுக் மொழுக் என்று இருந்தால் நன்றாகத் தான் இருக்கும், ஆனால் அது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
5. குழந்தையின் எடை அதிகமாக இருக்கும் போது குழந்தைக்கு சிறிது டயட் ஆனது தேவைப்படுகிறது. ஆகவே அப்போது குழந்தைக்கு மருத்துவரின் ஆலோசனையின் படி, ஜூஸ் மற்றும் சிறிது திட உணவுகளை கொடுக்கலாம். அதற்காக ஓவர் டயட் கூடாது. சில பெற்றோர்கள் குழந்தைக்கு கிரீம் பால் மற்றும் வெண்ணெயை கொடுப்பார்கள். அது எதிர்காலத்தில் அவர்களுக்கு மிகவும் சிரமத்தை தரும்.
ஆகவே மேற்கூறியவற்றையெல்லாம் மனதில் கொண்டு, குழந்தையின் உணவுப் பொருட்களை, அவர்களது எடையை சரியாக பராமரித்து வந்தால், ஆரோக்கியமாக இருப்பதோடு, குழந்தையும் ஃபிட்டாக அழகாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications