தாய்லாந்து மக்கள் ஏன் முதலை இறைச்சியை விரும்பி உண்கிறார்கள்? அதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா?

உலகில் ஒவ்வொரு நாடும் தங்களுக்கென தனித்துவமான உணவுக்கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது. சில நாடுகள் மிகவும் மென்மையான உணவு முறைகளைக் கொண்டிருக்கும் போது சில நாடுகள் மிகவும் வினோதமான உணவுக் கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது. அதில் மிகவும் முக்கியமானது தாய்லாந்து.

தாய்லாந்து அதன் தனித்துவமான உணவு கலாச்சாரத்திற்காக பிரபலமானது, மேலும் அங்கு சாலைகளில் கூட நீங்கள் காணக்கூடிய ஒரு ஆச்சரியமான உணவு முதலை இறைச்சி. நம் ஊரில் சிக்கன் 65 சாலைகளில் விற்கப்படுவது போல தாய்லாந்து சாலைகளில் முதலை இறைச்சி பாகம் பாகமாக விற்கப்படுகிறது. வெவ்வேறு நாடுகள் தங்கள் சொந்த உணவு விருப்பங்களைக் கொண்டிருந்தாலும், தாய்லாந்தில், முதலை சாப்பிடுவது மிகவும் பொதுவானது.

Why Thailand People Love to Eat Crocodile Meat in Tamil

தாய்லாந்து மக்களும், இங்கு சுற்றுலா வரும் மக்களும் இந்த அசாதாரண சுவையான உணவை மிகுந்த ஆர்வத்துடன் உண்கிறார்கள், இது தாய்லாந்தின் உணவுக் கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாகிறது. முதலை இறைச்சி பல்வேறு உணவுகளில் பரிமாறப்படுவது மட்டுமல்லாமல், திறந்த வெளியில் பார்பிக்யூவில் வறுக்கப்படுவதையும் காணலாம், இது சுற்றுலாப் பயணிகளையும், உள்ளூர் மக்களையும் ஈர்க்கிறது.

முதலை வளர்ப்பு என்பது தாய்லாந்தில் மிகவும் பிரபலமான தொழிலாகும், அங்கு நாடு முழுவதும் பல பண்ணைகளில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான முதலைகள் வளர்க்கப்படுகின்றன. இந்த பண்ணைகள் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு முதலை வளர்ப்பு மற்றும் அவற்றை கொலை செய்வதற்கான அரசாங்க வழிகாட்டுதல்களின் கீழ் செயல்படுகின்றன.

முதலை இறைச்சி உள்ளூர் மக்களிடையே பிரபலமாக உள்ளது, அவர்கள் அதை ஒரு சுவையான மற்றும் வசீகரமான உணவாகப் பார்க்கிறார்கள், ஆனால் இங்கு முதலைகள் உணவுக்காக மட்டும் வளர்க்கப்படுவதில்லை. அவற்றின் தோல் கைப்பைகள் போன்ற ஆடம்பர பொருட்களை தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் அவற்றின் இரத்தம் மற்றும் பைல் போன்ற பிற பாகங்கள் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

Why Thailand People Love to Eat Crocodile Meat in Tamil
Photo Credit:

தாய்லாந்தில் முதலை இறைச்சியின் விலை ஒரு கிலோ 570 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, இது நம்மூரில் மட்டன் விற்கும் விலையை விட குறைவாகும். இதற்கிடையில், முதலையின் இரத்தம் ஒரு கிலோவிற்கு சுமார் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, இது பெரும்பாலும் பல்வேறு ஆரோக்கியம் சார்ந்த பொருட்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. அதன் பித்தநீர் கணிசமாக அதிக விலை கொண்டது, அதன் அளவிலா மருத்துவப் பயன்கள் காரணமாக ஒரு கிலோ 76,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

முதலை வளர்ப்பு தாய்லாந்தில் இப்போது புதிதாக வந்ததில்லை. 35 ஆண்டுகளுக்கும் மேலாக, இது உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கியப்பங்கைக் கொண்டுள்ளது. இந்தத் தொழில் பண்ணைகளில் வேலை செய்பவர்களின் வாழ்வாதாரத்தை ஆதரிப்பது மட்டுமல்லாமல் தாய்லாந்தின் சுற்றுலாவையும் அதிகரிக்கிறது.

உலகம் முழுவதுமிருந்து பல பயணிகள் ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தேடி தாய்லாந்திற்கு வருகிறார்கள், மேலும் முதலை இறைச்சியை ருசிப்பது அல்லது முதலைப் பண்ணைகளுக்குச் செல்வது போன்றவற்றால் ஈர்க்கப்படுகிறார்கள். இது சுற்றுலாவை மேம்படுத்த உதவுகிறது, உணவு மற்றும் கல்வி சுற்றுப்பயணங்களை மேம்படுத்துகிறது.

மொத்தத்தில் தாய்லாந்தில் முதலை வளர்ப்பு மற்றும் இறைச்சி என்பது ஒரு ஆர்வமான விஷயம் என்பதை விட, அவை நாட்டின் பொருளாதாரம் மற்றும் கலாச்சார நிலப்பரப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. முதலைகளிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் அதன் இறைச்சி தாய்லாந்து சுற்றுலா மற்றும் உணவு வகைகளின் ஒரு தனித்துவமான அம்சமாக இருக்கிறது.

Story first published: Monday, October 21, 2024, 14:45 [IST]
Desktop Bottom Promotion