Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
இந்தியாவின் இந்த மாநிலத்தை சேர்ந்த மக்கள் எந்த வரியும் கட்ட வேண்டியதில்லையாம்... பேசாம இங்க பிறந்திருக்கலாம்!
2024-2025 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் ஜூலை 23 அன்று புதிய மோடி 3.0 அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 62 பக்க நீண்ட உரையின் போது, பல புதிய திட்டங்களையும், வரி விதிப்பில் புதிய மாற்றங்களையும் அறிவித்தார்.
சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான உயர்த்தப்பட்ட நிலையான விலக்கு மக்களிடமிருந்து பல்வேறு எதிர்வினைகளைப் பெற்றுள்ளது. சிலர் அரசாங்கத்தின் முடிவை ஆதரித்தாலும், பெரும்பாலான மக்கள் இந்த பட்ஜெட்டை எதிர்த்துதான் வருகின்றனர். பழைய வரி முறை சிறந்ததா அல்லது புதிய வரி விதிப்பு முறையா என நாடு முழுவதும் விவாதம் நடந்து வருகிறது. ஆனால் இந்த விவாதம் மற்றும் வரிகளின் குழப்பம் பற்றி துளியும் கவலைப்படாத ஒரு மாநிலம் உள்ளது.

இந்திய வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10 (26AAA) இன் கீழ், வடகிழக்கு மாநிலமான சிக்கிம் இந்தியாவில் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள ஒரே மாநிலமாகும். சிக்கிம், 330 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பழங்கால சமஸ்தானமாக இருந்தது. இருப்பினும், 1975 இல் சிக்கிம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது, இது இந்தியாவின் 22 வது மாநிலமாக மாறியது.
இந்த இணைப்பு ஒரு நிபந்தனையின் பேரில் நடந்தது, அதன்படி சிக்கிமின் பழைய வரி அமைப்பு இந்த இணைப்புக்குப் பிறகும் தொடர வேண்டும். சிக்கிமின் வரிக் கொள்கையின் படி, சிக்கிம் குடிமக்கள் அவர்களின் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அரசுக்கு எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை.
2008 இல் அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரியின் பிரிவு 10 (26AAA) சிக்கிமில் உள்ள ஒரு சொத்திலிருந்து அல்லது மாநிலத்தில் வசிக்கும் எவராலும் ஈவுத்தொகை அல்லது பத்திரங்கள் மீதான வட்டிகள் மூலம் சம்பாதித்த அல்லது பெறப்பட்ட எந்தவொரு வருமானமும் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பின் 371 (எஃப்) பிரிவின் கீழ் சிக்கிமின் சிறப்பு அந்தஸ்தில் இந்த நிலை பாதுகாக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, சிக்கிம் குடிமக்கள் இந்திய பத்திரங்கள் மற்றும் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதற்கு பான் விவரங்களை வழங்குவது கட்டாயமில்லை.
சிக்கிமுக்கு வெளியே உள்ள சொத்துக்களிலிருந்து வாடகை வருமானம் அல்லது மாநிலத்திற்கு வெளியில் இருந்து பெறப்படும் வருமானங்களுக்கு இந்த விலக்கு செல்லுபடியாகாது. ஏப்ரல் 1, 2008க்குப் பிறகு மாநிலத்தில் வசிக்காத ஒருவரைத் திருமணம் செய்யும் சிக்கிம் பெண்களுக்கும் இந்த விலக்கு பொருந்தாது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும், இந்திய உச்ச நீதிமன்றம் 2008 இல் அதை உறுதி செய்தது.
சிக்கிம் குடியிருப்பாளர்கள் மட்டுமின்றி திரிபுரா, மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பட்டியல் பழங்குடியினருக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. லடாக் பகுதி மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் பழங்குடியினரும் வரி செலுத்த வேண்டியதில்லை.



Click it and Unblock the Notifications












