Latest Updates
-
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம்
சூரியன் அஸ்தமனமாகும் போது இத பார்த்தா.. உங்கள தேடி பணம் வரப்போகுது-ன்னு அர்த்தம்...
Vastu Tips In Tamil: ஒவ்வொருவருக்குமே தங்கள் வீடு செல்வ செழிப்போடு இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். வீட்டில் செல்வம் அதிகம் சேர வேண்டும் என்பதற்காக பலரும் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள சில விஷயங்களைப் பின்பற்றுவார்கள்.
வாஸ்துவில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களைப் பின்பற்றும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிப்பதோடு, செல்வத்தின் தெய்வமாக கருதப்படும் லட்சுமி தேவியின் அருளைப் பெறச் செய்யும்.

ஒருவருக்கு லட்சுமி தேவியின் பரிபூர்ண ஆசி கிடைத்தால், அவர் நல்ல மகிழ்ச்சியான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ்வார். மேலும் லட்சுமி தேவி ஒருவரது வீட்டிற்கு வரவுள்ளார் என்றால், அதற்கு முன் ஒருசில அறிகுறிகள் தென்படும்.
அந்த அறிகுறிகளுள் சில சூரிய அஸ்தமனத்தின் போது அல்லது பின் தெரியும். இப்போது வீட்டில் பணம் அதிகம் சேரப் போகிறது அல்லது லட்சுமி தேவி வீட்டிற்கு வருகை தருவதாக இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். இப்போது அவை என்னவென்பதைக் காண்போம்.
பறவை கூடு
உங்கள் வீட்டிற்குள் ஒரு பறவை வந்து கூடு கட்டுகிறது என்றால், அது மிகவும் மங்களகரமானதாகும். ஏனெனில் எங்கு அதிர்ஷ்டம் உள்ளதோ, அங்கு தான் பறவை கூடு கட்டும். மேலும் பறவை கூடு கட்டும் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியும் செல்வமும் நிலைத்திருக்கும் மற்றும் அந்த அந்த வீட்டில் பண வரவு சிறப்பாக இருக்கும்.
கனவில் இவற்றை காண்பது
ஒருவரது கனவில் பல்லி, ஆந்தை, விளக்கமாறு ஆகியவற்றை காண்பது என்பது மிகவும் நல்லது. இப்படிப்பட்ட கனவுகள் ஒருவரை நோக்கி பணம் வரப்போகிறது என்பதைக் குறிக்கிறது. மேலும் கனவு சாஸ்திரத்தின் படி, இம்மாதிரியான கனவுகள் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகின்றன.
கருப்பு எறும்புகள்
சூரியன் அஸ்தமனத்திற்கு பின், வீட்டில் கருப்பு எறும்புகள் அதிகம் சுற்றிக் கொண்டிருப்பதைக் காண்டால், அது மிகவும் நல்ல அறிகுறியாகும். ஏனெனில் கருப்பு எறும்புகளானது லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கப் போவதைக் குறிக்கிறது. இந்நிலையில் அந்த கருப்பு எறும்புகளுக்கு சர்க்கரையை போட்டால், மாலையில் வீட்டிற்கு வரும் லட்சுமி தேவி மகிழ்ச்சியடைந்து, வீட்டில் பண வரவை அதிகரிப்பார்.
மூன்று பல்லிகள்
சூரிய அஸ்தமனத்தின் போது வீட்டின் ஒரே சுவற்றில் மூன்று பல்லிகளை ஒன்றாக பார்ப்பது என்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் லட்சுமி தேவி ஒருவரது வீட்டிற்கு வருகை தரும் போது தான் இம்மாதிரியான நிகழ்வு நடைபெறுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதோடு, இது ஒருவரது நிதி பிரச்சனைகள் நீங்கி, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகிறது என்பதன் அறிகுறியும் கூட.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications