தலைசுற்ற வைக்கும் இந்தியாவின் டாப் 10 வினோதமான திருமண சடங்குகள்... இப்படிலாம் கூடவா கல்யாணம் பண்ணுவாங்க...!

இந்தியாவில் திருமண உறவு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், புனிதமானதாகவும் கருதப்படுகிறது. அதேசமயம் இந்தியத் திருமணங்கள் பிரம்மாண்டமும் ஆடம்பரமும் நிறைந்தவை. இந்தியாவின் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும், ஒவ்வொரு இனத்திற்கும், சில சமயங்களில் ஒரு சிறிய குழுவிற்கும் கூட தனித்துவமான திருமண சடங்கு இருக்கும். இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பதால், நாடு முழுவதும் விசித்திரமான திருமண சடங்குகளும் பழக்கவழக்கங்களும் பின்பற்றப்படுகின்றன.

இந்த சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களுடன் இணைந்த உணர்வுகள் இந்தியத் திருமணங்களை மேலும் சிறப்பானதாகவும் தனித்துவமானதாகவும் மாற்றுகின்றன. இந்திய திருமணங்களில் நமக்கு தெரிந்தது வெகுசில சாதாரண சடங்குகள் மட்டுமே. உண்மையில் நமக்குத் தெரியாத, நம்மால் நம்பவே முடியாத பல திருமண சடங்குகள் உள்ளன. அவற்றில் சில வினோதமான இந்திய திருமண சடங்குகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Strange Marriage Traditions and Rituals in India

மணமகன் மற்றும் மணமகளின் அம்மாக்கள் அளிக்கப்படாத திருமணம்

பெங்காலி திருமண மரபுகளின்படி, மணமகன் மற்றும் மணமகளின் அம்மாக்கள் திருமணத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு காரணம், அவர்களது அதிகப்படியான பாசப் பிணைப்பு அசுபமானதாகக் கருதப்படுகிறது. அம்மாக்களின் கண்ணீருக்கு தங்கள் குழந்தையின் திருமண வாழ்க்கையில் ஏதேனும் தீய விளைவை ஏற்படுத்தும் சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது.

மீன் சடங்கு

இது மணிப்பூர் திருமணங்களில் நடைபெறும் மிகவும் விசித்திரமான, அதேசமயம் கடைசி சடங்காகும். மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இரு தரப்பிலும் உள்ள பெண்கள், மணமகனையும் மணமகளையும் குறிக்கும் ஒரு ஜோடி டாக்கி மீன்களை தண்ணீரில் விடுவார்கள். அந்த மீன்கள் ஒன்றாக நீந்தினால், புதுமணத் தம்பதியினர் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள் என்று நம்பப்படுகிறது.

மண்குட சடங்கு

பீகார் திருமணங்களின் விசித்திரமான திருமண சடங்குகளில் ஒன்று மண்பானையை பேலன்ஸ் செய்வதாகும், அதேசமயம் இது மிகவும் அசாதாரணமானதாகக் கருதப்படுகிறது. இதில், மாமியார் மணப்பெண்ணை சில மண் குடங்களுடன் வரவேற்கிறார், அவற்றை மணப்பெண் தன் தலையில் பேலன்ஸ் செய்ய வேண்டும். மணப்பெண் அந்தக் குடங்களை பேலன்ஸ் செய்து கொண்டே, பெரியவர்களின் கால்களைத் தொட வேண்டும். மணப்பெண் சமநிலைப்படுத்தும் குடங்களின் எண்ணிக்கையே, குடும்பத்தின் எதிர்காலத்தைப் பராமரிப்தற்கு அவருக்கு இருக்கும் திறன்களின் எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது.

Strange Marriage Traditions and Rituals in India

மணமகளை கடத்தும் சடங்கு

இது மிகவும் விசித்திரமான திருமண சடங்காகும். இந்தியாவின் ஒரு பழங்குடியினரின் விசித்திரமான பாரம்பரியத்தின்படி, மணமகன் மணப்பெண்ணைக் கடத்திச் சென்று, அவரை ஒரு வருடம் மறைத்து வைத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த கடத்தல் செயல்முறை வெற்றிகரமாக முடிந்தால், முறையான திருமண விழா நடைபெறும்.

மாப்பிள்ளையின் உடையைக் கிழிக்கும் சடங்கு

நம் ஊரில் திருமணத்தின் நடுவில் யாராவது மாப்பிள்ளையின் உடையைக் கிழிப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாதல்லவா? ஆனால் சிந்தி திருமண பாரம்பரியத்தில், இது 'சாந்த்' என்று அழைக்கப்படும் ஒரு சடங்காகக் கருதப்படுகிறது. இதில் மாப்பிள்ளையின் வலது காலில் ஒரு காலணி அணிவித்து, தலையில் எண்ணெய் தடவி, பின்னர் தனது வலது காலால் ஒரு மண்பானையை உடைக்கச் செய்வார்கள். இதைத் தொடர்ந்து மாப்பிள்ளையின் உடைகளைக் கிழிப்பார்கள். இது மாப்பிளைக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது.

பால் மற்றும் தேனைக் குடித்தல்

பாலில் தேனைக் கலந்து குடிப்பது இயல்பானதாகக் கருதப்பட்டாலும், குஜராத்தி மரபுகளில் பின்பற்றப்படும் திருமணச் சடங்கில் அது சாதாரணமாக இருப்பதில்லை. இந்த விசித்திரமான பாரம்பரியம் "மதுர்பர்கா" என்று அழைக்கப்படுகிறது. இதில், மணமகனின் பாதங்களை மணப்பெண்ணின் பெற்றோர் பால் மற்றும் தேன் கலவையால் கழுவி அவரை வரவேற்கின்றனர். பின்னர், மணமகன் அதே பாத்திரத்தை எடுத்து அந்த கலவையைக் குடிக்க வேண்டும். இது கொஞ்சம் அருவருப்பாகத் தோன்றினாலும், இது அவர்களின் பழமையான பாரம்பரியமாகும்.

தக்காளியால் வரவேற்கும் சடங்கு

இந்த திருமண வழக்கம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய ஊரில் பின்பற்றப்படுகிறது. இங்கு மாப்பிள்ளை வீட்டார் ரோஜா இதழ்களால் வரவேற்கப்படுவதில்லை, மாறாக அவர்கள் மீது தக்காளிகள் வீசப்படுகின்றன. குழப்பத்துடன் தொடங்கும் ஒரு உறவு காதலில் முடியும் என்பதுதான் இதன் பின்னணியில் உள்ள நம்பிக்கை என்று கூறப்படுகிறது.

மூக்கை இழுக்கும் சடங்கு

மூக்கைப் பிடித்து இழுப்பது ஒரு வேடிக்கையான விஷயமாக இருக்கலாம், ஆனால் குஜராத்தி திருமண பாரம்பரியத்தில் அப்படியல்ல. இந்த வினோதமான திருமண சடங்கு "பொங்கனா" என்று அழைக்கப்படுகிறது. இதில் மாமியார் ஆரத்தி எடுத்து, மணமகன் மணப்பெண்ணை வரவேற்கும்போது பணிவாகவும் நன்றியுடனும் இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் விதமாக, மணமகளின் மூக்கைப் பிடித்து இழுக்கிறார்.

மாப்பிளையைக் கிணற்றில் வீசுதல்

இந்த விசித்திரமான திருமணச் சடங்கு வட கோவாவில் உள்ள கோவன் மக்களால் பின்பற்றப்படுகிறது. இதில், புதிதாகத் திருமணமான மாப்பிள்ளையை ஒரு கிணற்றுக்கோ அல்லது ஏரிக்கோ அழைத்துச் சென்று, அதில் அவரைத் தூக்கி எறிகிறார்கள். இந்த விழாவுக்கு "சாவோ ஜோவோ" என்று பெயரிடப்பட்டுள்ளது. இது மாப்பிள்ளைக்குக் கருவுறுதல் தொடர்பான நல்வாய்ப்பைக் கொண்டுவரும் என்று கூறப்படுகிறது.

மாலையை மட்டும் மாற்றும் திருமணம்

பொதுவாக இந்தியாவில் திருமணம் என்றால் மிகவும் ஆடம்பரமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. அதற்காக மிகப்பெரிய தொகை செலவிடப்படுகிறது. ஆனால் அசாமின் பழங்குடியினப் பகுதிகளில், மணமகனும் மணமகளும் மாலைகளை மாற்றிக்கொண்டாலே போதும், அவர்கள் திருமணம் ஆனவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

Story first published: Saturday, February 7, 2026, 14:15 [IST]
Desktop Bottom Promotion