Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
சனி, குரு, புதன் வக்ரமாக இருப்பதால் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிகளுக்கு பண மழை பொழியும்..
Saturn Jupiter Mercury In Retrograde Motion: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதைத் தவிர, வக்ரமாகி பின்னோக்கியும் பயணிக்கும். அப்படி கிரகங்கள் பின்னோக்கி பயணிக்கும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அதுவும் ஒரே நேரத்தில் பல முக்கியமான கிரகங்கள் வக்ரமாகும் போது, அதன் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் நீதிமான் சனி பகவான், புத்திகாரகன் புதன் மற்றும் செழிப்பிற்கு காரணமான குரு பகவான் ஆகிய மூன்று கிரகங்களும் வக்ர நிலையில் உள்ளன.

இப்படி மூன்று கிரகங்களும் வக்ரமாக இருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த வக்ர காலத்தில் குரு, சனி மற்றும் புதனின் அருளைப் பெற்று பல அற்புதமான நன்மைகளைப் பெறுவார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சனி, குரு, புதன் வக்ரமாக இருப்பதால், பணிபுரியும் ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. மேலும் பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவும் கிடைக்கும். சொத்துக்களில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். வேலை இல்லாமல் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்துக்களால் நல்ல பலனைப் பெறக்கூடும்.
கன்னி
சனி, குரு, புதன் வக்ரமாக இருப்பதால், கன்னி ராசிக்காரர்கள் நிதி ரீதியாக சிறப்பான பலனைப் பெறுவார்கள். சிக்கிய பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும். பேச்சால் பல காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மேலும் உங்கள் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் உங்களின் ஆசைகள் நிறைவேறும். தடைப்பட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். வாகனம், சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
தனுசு
சனி, குரு, புதன் வக்ரமாக இருப்பதால் தனுசு ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தையும் காண்பார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். கடவுள் வழிபாட்டினால் மன அமைதி கிடைக்கும். இக்காலத்தில் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். ஆனால் தாயின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications