Just In
- 1 hr ago 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- 4 hrs ago இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- 12 hrs ago கும்ப ராசியில் உதயமாகும் சனி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது..
- 14 hrs ago உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கா? மறந்தும் இந்த சப்ளிமென்டுகளை எடுக்காதீங்க.. அப்புறம் கஷ்டப்படுவீங்க..
Don't Miss
- News பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகள் எது? சேலத்தில் இவரா? உத்தேச வேட்பாளர்கள் லிஸ்ட் ?
- Finance H-1B விசா: ஐடி ஊழியர்களுக்கு 3 நாளில் குட் நியூஸ்.. பல பேரின் வாழ்க்கை மாறப்போகுது..!!
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Movies Shaitaan Box office: ஜோதிகாவின் ஷைத்தான்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
- Technology ஆதார் அப்டேட் செய்ய போறீங்களா? தெரியாம கூட இந்த தவறை செய்யாதீர்கள்.. கணக்கு வைக்கும் UIDAI ஆணையம்..
- Sports சர்ஃபராஸ் கான், ஜுரேலுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆனால் ரிஷப் பண்ட்டுக்கு.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
இந்த ராசிக்காரங்க தாங்கள் காதலிக்கிறவங்கள எப்பவும் சந்தேகப்பட்டு டார்ச்சர் பண்ணுவாங்களாம்... உஷார்!
நாம் நிம்மதி இல்லாமல் தவிக்க நம்முடைய சந்தேக குணம் முக்கியமான காரணமாக இருக்கிறது. காதலைப் பொறுத்தவரை குறிப்பிட்ட அளவு சந்தேகம் இருப்பது தவிர்க்க முடியாதது
காதலை பொறுத்தவரை நாம் திரைப்படங்களைத்தான் அதிகம் பார்த்து கற்றுக்கொள்கிறோம். ஆனால் திரைப்படங்களிலேயே காதலில் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் தவறாக காட்டுப்படுவதால் அது நம்முடைய காதலிலும் பிரதிபலிப்பதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. சந்தேக குணம் என்பது மனிதர்களின் முக்கியமான குணங்களில் ஒன்று. நமது சந்தேகங்கள் உண்மையென தெரியும் போது நமக்குள் ஒரு திருப்தி ஏற்படும். ஆனால் அதன்பின் நம்முடைய நிம்மதி கெட்டுவிடும்.
நாம் நிம்மதி இல்லாமல் தவிக்க நம்முடைய சந்தேக குணம் முக்கியமான காரணமாக இருக்கிறது. காதலைப் பொறுத்தவரை குறிப்பிட்ட அளவு சந்தேகம் இருப்பது தவிர்க்க முடியாதது, அது காதலை பாதுகாக்க அவசியமான ஒன்றாகவும் இருக்கிறது. ஆனால் அதீத சந்தேக உணர்வு காதலை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும். அனைவருக்குள்ளும் இந்த சந்தேக குணம் இருந்தாலும் சிலருக்கு காதலில் அதிக சந்தேக குணம் இருக்கும். அதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசியாகவும் இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் காதலை சந்தேகத்தால் சிதைத்துக்கொள்வார்கள் என்று பார்க்கலாம்.
ரிஷபம்
காளையை அடையாளமாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்கள் மெதுவாகவும், சீராகவும் இருப்பார்கள். ஒருவருடன் கமிட் ஆவதற்கு போதுமான காலத்தை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். தகவல்களை தெரிந்து கொள்ள இருக்கும் ஆர்வத்தினால் எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். நிலையான அறிகுறியான இவர்கள் எந்தவொரு உறவுடனும் தன்னை இணைத்துக்கொள்ள அதிக காலம் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் இவர்களின் துணை இவர்களுடைய நம்பிக்கையை வென்றுவிட்டால் இறுதிவரை அவர்களுக்கு துணையாக இருந்து தங்களின் நம்பிக்கை சிதையாத வண்ணம் அவர்களை பார்த்துக் கொள்வார்கள்.
சிம்மம்
காதலில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் தைரியசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் தங்களின் அன்புக்குரியவர்களின் மனதை ஒருபோதும் காயப்படுத்த மாட்டார்கள். ஆனால் இவர்களின் தொடர்ந்து கண்காணிக்கும் தன்மையால் இவர்களின் துணை எப்பொழுதும் இவர்கள் அருகில் இருப்பது போலவே உணர்வார்கள். இவர்களின் இந்த செயல் பெரும்பாலானவர்கள் வெறுக்கும் ஒன்றாகும், மேலும் இவர்களின் இந்த நடவடிக்கையும், இதனைத் தொடர்ந்து எழும் கேள்விகளும் இறுதியில் பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
கடகம்
மென்மையான இதயம் கொண்ட கடக ராசிக்காரர்கள் ஒரு உறவில் ஆழமாக இறங்குவதற்கு முன் தீர யோசிப்பார்கள். நீரை அடையாளாமாகக் கொண்ட இவர்கள் மிகவும் உணர்திறன் மற்றும் நம்பகமானவர்கள் இந்த குணங்களை தங்கள் துணையிடம் இருந்தும் இவர்கள் எதிர்பார்ப்பார்கள். கடந்த காலங்களில் அவர்கள் நம்பிக்கையில் ஒரு முறிவை எதிர்கொண்டதால், தங்கள் கூட்டாளரை நம்புவது அவர்களுக்கு கடினமாகிறது. இதனால் எப்பொழுதும் சந்தேகக்கண் இவர்களிடம் இருக்கும். ஆனால் இவர்களின் அடையாளமான நண்டைப் போலவே கடுமையான ஓடுகளுக்கு நடுவில் மென்மையான இதயம் இவர்களிடம் இருக்கும்.
MOST READ: உலகம் முழுவதும் பெண்கள் உடலுறவின் போது செய்யும் மோசமான தவறுகள் இதுதான்... ஆண்கள் ரொம்ப பாவம்யா...!
மகரம்
ஒரு உறவில் இருக்கும் போது இவர்களுக்கு தங்கள் துணையை நம்புவதற்கு கூடுதல் முயற்சி தேவைப்படலாம். இவர்கள் அனைவராலும் விரும்பப்படும் நபராக இருந்தாலும் இவர்களின் கடந்த கால அனுபவங்கள் இவர்களை இப்படி சந்தேகப்படத் தூண்டும். தங்கள் துணையை நம்புவதற்கு முன் அவர்களின் அனைத்து செயல்களையும் கண்காணிக்கும் வழக்கம் இவர்களிடம் இருக்கும். இவர்கள் ஒருபோதும் வார்த்தைகளை நம்ப மாட்டார்கள், எதை மறைக்கிறார்கள் என்றுதான் தேடுவார்கள், இதனால் காதலிப்பது இவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். துரோகத்திற்கு ஆளாவதைக் காட்டிலும் தனிமையில் இருப்பது நல்லது என்று நினைப்பவர்கள் இவர்கள்.
மேஷம்
துப்பறிவது இவர்களின் பிறவி குணங்களில் ஒன்று. அதீத ஆர்வம் கொண்ட இவர்கள் அனைத்தையும் கவனித்து துப்பறிவார்கள். இவர்கள் பொய் சொல்பவர்களை மிகவும் வெறுக்கிறார்கள் மேலும் இவர்களைப் பொறுத்தவரை அனைவரும் ஒருவகையில் பொய்யர்கள்தான். உறவில் இருக்கும்போது கூட திருட்டுத்தனமாக செயல்படுவது அவர்களின் இயல்பான குணமாகும். மேஷம் மக்களை நம்புவதை அப்பாவியாகக் காண்கிறது, எனவே அவர்கள் தங்கள் துணை சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் கவனிக்கிறார்கள். இருப்பினும், சில நேரங்களில் அவர்களின் உணர்வுகள் அவர்களை எல்லை மீறுகின்றன, மேலும் அவர்களின் ஆர்வம் அவர்களின் உறவுக்கு அழிவை ஏற்படுத்தும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இயற்கையாகவே சந்தேக குணம் கொண்டவர்கள். இவர்களின் ராசி அடையாளமான தேள் மிகவும் தீவிரமானது. இவர்கள் இறுதியில் ஆழமாக காதலிப்பார்கள் என்றாலும், இவர்கள் ஒருவரை நம்புவதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்வார்கள். நம்பிக்கையைத் தூண்டுவதற்கு முன்பு காத்திருப்பதையும், கவனிப்பதையும் இவர்கள் பொருட்படுத்துவதில்லை. தங்களது துணைக்கு தெரியாமலேயே அவர்களை கண்காணிப்பார்கள். ஒவ்வொரு முறையும் இவர்கள் துரோகத்தை சந்திக்கும் போது உலகம் மீதான இவர்களின் நம்பிக்கை குறைந்து கொண்டே வரும்.
MOST READ: இங்கு உடலுறவில் ஈடுபடும் வயது ஆண்களுக்கு 10 பெண்களுக்கு 6 .... உலகின் படுமோசமான பாலியல் சடங்குகள்...
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே உள்ளுணர்வு மற்றும் தொலைநோக்கு இயல்பு உள்ளது. தங்கள் துணையின் வாழ்க்கையை ரகசியமாக கண்காணிக்க இவர்கள் பல்வேறு தந்திரங்களை மேற்கொள்வார்கள். தங்கள் துணையின் நேர்மையை உறுதிப்படுத்த அவர்கள் தொடர்ந்து செய்திகளைச் சரிபார்க்கலாம், அவர்களின் சமூக ஊடக சுயவிவரங்களைத் சோதிக்கலாம். இவர்கள் மிகவும் பொறுமையற்றவர்களாக இருக்கக்கூடும், மேலும் அவர்கள் உடனுக்குடன் தங்கள் கூட்டாளர்களிடமிருந்து சரியான நேரத்தில் தகவல்களைத் தேடுவதற்கான ஒரு காரணங்களில் இதுவும் ஒன்று.