Just In
- 8 min ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 1 hr ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 1 hr ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 2 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
Don't Miss
- Movies மாட்டிக்கினாரு ஒருத்தரு.. சமந்தாவின் மாஜி கணவர் அந்த நடிகையுடன் டேட்டிங்கா?.. தீயாய் பரவும் பிக்ஸ்!
- News தேவ கவுடா காலத்தில் தொடங்கிய சினிமாவை மிஞ்சும் 40 ஆண்டுகால அரசியல் பகை.. ஹாசனில் மோதும் 'பேரன்கள்'!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மறக்கறதும், மன்னிக்கிறதும் இந்த ராசிக்காரங்க அகராதியிலேயே கிடையாதாம்... பார்த்து பழகுங்க இவங்ககிட்ட.
மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவது என்பது நட்பு, காதல், உறவுகள் என எதில் வேண்டுமென்றாலும் இருக்கலாம், ஆனால் சிலர் ஒருபோதும் எதிலும் இரண்டாவது வாய்ப்பை வழங்கமாட்டார்கள்.
மற்றவர்கள் செய்த தவறுகளை மறப்பதும், மன்னிப்பதும் அவர்கள் உங்களுக்கு எவ்வளவு நெருக்கமானவர்கள் என்பதையும் அவர்கள் செய்த தவறு என்னவென்பதையும் பொறுத்துதான். சிலர் தனக்கு நெருக்கமானவர்கள் எவ்வளவு பெரிய தவறு செய்திருந்தாலும் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுப்பார்கள், சிலரோ சிறிய தவறைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் அவர்களை முற்றிலும் புறக்கணிப்பார்கள்.
மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவது என்பது நட்பு, காதல், உறவுகள் என எதில் வேண்டுமென்றாலும் இருக்கலாம், ஆனால் சிலர் ஒருபோதும் எதிலும் இரண்டாவது வாய்ப்பை வழங்கமாட்டார்கள். இதற்கு அவர்களின் பிறந்த ராசியும் ஒரு முக்கிய காரணமாகும். குறிப்பாக காதல் விவகாரத்தில் தங்களின் நம்பிக்கை உடைக்கப்பட்டு விட்டால் இவர்கள் ஒருபோதும் அதனை மறக்கவும், மன்னிக்கவும் மாட்டார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இந்த குணத்துடன் இருப்பார்கள் என்று பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் வேகமாக காதலிக்க தொடங்குவதில்லை, ஆனால் அவர்களால் வேகமாக காதலை முடிக்க முடியும். அவர்கள் இரண்டாவது வாய்ப்புகளைத் தருவதில்லை, ஏனென்றால் அவ்வாறு செய்வதற்கு அவர்களின் சுயமரியாதை அனுமதியளிக்காது. ஒருமுறை முடிவெடுத்து விட்டால் மனதை மாற்றிக்கொள்வது என்பது இவர்களுக்கு கடினமான ஒன்றாகும்.யாராவது ஒரு தவறு செய்து அது மன்னிக்க முடியாதது என்று இவர்கள் உணர்ந்தால் அவர்களை உடனடியாக தங்கள் வாழ்க்கையை விட்டு வெளியேற்றவிடுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரரிடம் நீங்கள் இரண்டாவது வாய்ப்புக்காக காத்திருந்தால் நீங்கள் அவர்களுக்கு துரோகம் செய்திருக்கலாம் அல்லது ஏதாவது ஒரு வகையில் அவர்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டு அவர்களை சமாதானப்படுத்த அடுத்த வாய்ப்புக்காக காத்திருக்கலாம். ஆனால் அந்த வாய்ப்பு உங்களுக்கு எப்பொழுதும் கிடைக்காது. உங்களின் வருத்தமோ அல்லது மன்னிப்போ அவர்களின் கோபத்தை ஒருபோதும் குறைக்கப்போவதில்லை. இவர்கள் யாருக்கும் இரண்டாவது வாய்ப்பு வழங்கமாட்டார்கள், ஏனெனில் மீண்டும் முட்டாளாக இவர்கள் தயாராக இருக்க மாட்டார்கள்.
MOST READ: கொரோனா வைரஸ் காலத்தில் உடலுறவு கொள்வது பாதுகாப்பானதா? பாதுகாப்பாக உடலுறவு கொள்வது எப்படி?
கடகம்
சில விஷயங்களில் கடக ராசிக்காரர்கள் அவநம்பிக்கை கொண்டவர்கள் குறிப்பாக இரண்டாவது வாய்ப்பு வழங்கும் விஷயத்தில். இதற்கு காரணம் அவர்கள் ஏற்கனவே ஒருமுறை கொடுத்த இரண்டாவது வாய்ப்பு அவர்களுக்கு மோசமான அனுபவத்தை கொடுத்ததாக இருக்கலாம். அவர்களின் நம்பிக்கை அழிக்கப்பட்டு, அவர்களின் இதயம் ஒரு முறை உடைந்ததே போதுமென்று அவர்கள் நினைப்பார்கள். தன்னுடைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும் இவர்கள் மீண்டும் அந்த தவறை ஒருபோதும் செய்யமாட்டார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் மற்றவர்களின் பிரச்சினைகளை சரிசெய்வது தங்கள் வேலையல்ல என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள். நீங்கள் அவர்களுடன் பிரச்சினையில் ஈடுபட்டால் நீங்கள் அந்த தவறிலிருந்து நீங்கள் அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்வீர்கள் என்று இவர்கள் நினைப்பார்கள். ஆனால் ஒருபோதும் உங்களின் தவறை மன்னித்து உங்களுக்கான பாதுகாப்பான இடத்தை வழங்க அவர்கள் முயற்சிக்கமாட்டார்கள். யாரோ ஒருவர் இரண்டாவது முறையாக அவர்களைப் பயன்படுத்திக் கொள்வது முரண்பாடு என்பது மகர ராசிக்குத் தெரியும், எனவே அவர்கள் ஒருபோதும் அதனை செய்யமாட்டார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் நம்பிக்கையுடனும், கனிவாகவும் இருக்கிறார், ஆனால் அவர்கள் நிறைய இரண்டாவது வாய்ப்புகளைத் தருவதில்லை. ஒருவர் தங்களின் உண்மையான முகத்தை தனக்கு காட்டினால் அதனை நம்ப வேண்டும் என்பது இவர்களின் கருத்தாகும். அது இவர்களுக்கு வலியை தருமானால் அவர்களை தங்கள் வாழ்க்கையை விட்டு முற்றிலுமாக வெளியேற்ற வேண்டும் என்பது இவர்களின் நம்பிக்கையாகும். இவர்கள் மீண்டும் ஒரு வாய்ப்பு கேட்ட அனைவருக்கும் கொடுத்தால், அவர்கள் ஏதாவது அல்லது சிறந்த ஒருவரை இழக்க நேரிடும். ஒருமுறை இவர்கள் உங்களை வெளியேற்றி விட்டால் அதோடு விட்டுவிடுங்கள், அதற்கு பின் முயற்சிப்பது முற்றிலும் வீண்.
MOST READ: கருட புராணத்தின் படி இந்த செயல்கள் உங்களின் ஆயுளை பாதியாக குறைக்கமாம் தெரியுமா?
கன்னி
தனது நண்பர்கள் மற்றும் காதலரிடம் இருந்து என்ன தேவை என்பதைப் பற்றிய தெளிவான பார்வை இவர்களுக்கு இருக்கும். அந்த நபர் இவர்களின் நம்பிக்கையை சிதைக்கும் போது இவர்கள் அவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்ப்பது இல்லை, அவர்களை முற்றிலுமாக வெளியேற்றுகிறார்கள். அவர்களுடன் மீண்டும் இணைவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. இவர்களுடன் இருப்பதற்கான வாய்ப்பை நீங்களாக கெடுத்துக்கொண்டால் அதனை ஒருபோதும் திரும்ப பெற இயலாது.