Latest Updates
-
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
சனி பகவானின் அருளால் பிப்ரவரி 24 முதல் இந்த 3 ராசிக்காரங்களோட வாழ்க்கையே மாறப் போகுது...
சனி பகவான் 2022 ஜனவரி 22 ஆம் தேதி அஸ்தமனமாகி, 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி உதயமாகி இயல்பு நிலையில் பயணிக்க உள்ளார். இக்காலத்தில் 3 ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ராஜயோகம் உருவாகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கிரகங்களில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது ஒரு நபரின் வாழ்க்கையில் சிறு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டில் பல முக்கிய கிரகங்கள் இடம் மாறவுள்ளன. அதில் நீதியின் கடவுளான சனி பகவான் ராசியை மாற்றவுள்ளார்.

பெரிய கிரகங்கள் ராசியை மாற்றுவதற்கு முன்பு அஸ்தமனம் ஆகும். ஆகவே சனி பகவான் 2022 ஜனவரி 22 ஆம் தேதி அஸ்தமனமாகி, 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி உதயமாகி இயல்பு நிலையில் பயணிக்க உள்ளார். இக்காலத்தில் 3 ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ராஜயோகம் உருவாகிறது. இப்போது எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் உருவாகிறது மற்றும் அவர்கள் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம். உங்கள் ராசி இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
ஜோதிடத்தின் படி, மேஷ ராசியின் பத்தாவது வீட்டில் சனி உதயமாவதால் ராஜயோகம் உருவாகிறது. மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இவர் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். ஆகவே இந்த ராசிக்காரர்கள் ராஜ வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பைப் பெறலாம். அரசியலில் இருப்பவர்கள் பெரிய பதவியைப் பெறலாம். பணிபுரிபவர்கள் வேலையை மாற்ற நினைத்தால் புதிய வேலை வாய்ப்பைப் பெறலாம். இல்லாவிட்டால் வருமான உயர்வைப் பெறலாம். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு, வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

ரிஷபம்
பிப்ரவரி 24 ஆம் தேதி சனி உதயமாவதால், ரிஷப ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ராஜயோகம் உருவாகிறது. இதனால் இக்காலம் எந்த ஒரு புதிய தொழிலையும் தொடங்க சிறந்த நேரமாக இருக்கும். அதிர்ஷ்டம் இக்காலத்தில் உங்களை ஆதரிக்கும். இக்காலத்தில் உங்களின் எந்த ஒரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். அதே வேளையில், தோல்வியுள்ள வேலையிலும் இக்காலத்தில் வெற்றியைக் காண்பீர்கள். மேலும் அரசியலில் ஆர்வம் உள்ள ரிஷப ராசிக்காரர்கள் இக்காலத்தில் அரசியலில் முயற்சி செய்யலாம்.

கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டில் சனி உதயமாவதால், இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகிறது. இந்நிலையில் இந்த ராசிக்காரர்களுக்கு கூட்டு வேலை பயனுள்ளதாக இருக்கும். மேலும் கூட்டாண்மை வேலையும் சிறப்பான முன்னேற்றத்தில் இருக்கும். வியாபாரிகள் மற்றும் பிற வேலையில் இருப்பவர்களுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். அதோடு இக்காலத்தில் எண்ணெய், பெட்ரோலியம், சுரங்கம், இரும்பு போன்ற சனி தொடர்பான வேலைகளில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications











