Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
பைரவரை வணங்கி இன்று அன்னதானம் செய்யுங்க.. சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்..
தேய்பிறை அஷ்டமி திதியில் மகாதேவர் என்கிற சிவபெருமான் பைரவர் அவதாரம் எடுத்து பூமிக்கு வந்தார். இவரை வணங்கி தனக்கு அருளும், ஆசியும் வேண்டும் என்று ஆயுளையும், அழிவில்லா பொருளையும்..
பங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியை திரியம்பகாஷ்டமி என்று கூறுவர். இந்த தினத்தில் அன்னதானம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், அன்ன தானம் செய்து சொர்ண ஆகர்ஷ பைரவரை வழிபட்டு அவரின் அருளாசியை பெறுவது அவசியமாகும்.

அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள் திருமணம், கிரகப்பிரவேசம், சொத்து வாங்குதல் உள்ளிட்டவை) மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்த திதிகள் தெய்வீக காரியங்களுக்கு தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை.
தேய்பிறை அஷ்டமி திதியில் மகாதேவர் என்கிற சிவபெருமான் பைரவர் அவதாரம் எடுத்து பூமிக்கு வந்தார். இவரை வணங்கி தனக்கு அருளும், ஆசியும் வேண்டும் என்று ஆயுளையும், அழிவில்லா பொருளையும், ஆன்ம சாந்தியையும் தரும் சனிதேவர் பணிந்தார்.

பைரவருக்கு தீபம்
ஸ்ரீபைரவருக்கு ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி திதிக்கு பின்பு வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும், செய்யும் தொழிலில் வளர்ச்சி காணவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், செல்வச் செழிப்போடு வாழவும், தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.

தேய்பிறை அஷ்டமி
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை என இரண்டு தடவை அஷ்டமி திதி வந்தாலும், தேய்பிறை அஷ்டமி திதியே பைரவருக்கு மிகவும் உகந்ததாகும். தேய்பிறை அஷ்டமியில் பைரவரை ஏன் வணங்க வேண்டும் என்றால், அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்றுதான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு செல்வங்களை வாரி வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை.

குழந்தை பாக்கியம்
பங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியை திரியம்பகாஷ்டமி என்று கூறுவர். இந்த தினத்தில் அன்னதானம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். இன்று பங்குனி மாத திரியம்பகாஷ்டமி தினம் என்பதால், நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், அன்ன தானம் செய்து சொர்ண ஆகர்ஷ பைரவரை வழிபட்டு அவரின் அருளாசியை பெறுவது அவசியமாகும். நாமும் அதுபோல் தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட, அஷ்ட லட்சுமிகளின் ஆசி கிடைப்பதோடு, பைரவரின் பூரண ஆசிகளும் வரங்களும் ஒரே சமயத்தில் கிடைத்துவிடும்.

ராகு கால வழிபாடு
தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். மேலும், நமது ஏழு ஜென்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களின் பாவ வினைகள் தீரத் துவங்கும். அப்படி பாவ வினைகள் தீரத் துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்.

கடன் தீரும்
தேய்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை வணங்குவதால் நீண்ட நாட்களாக வராமல் நிலுவையில் உள்ள வர வேண்டிய பணம் வந்துவிடும். அதேபோல், நாம் யாருக்காவது தர வேண்டிய கடன் தொகை இருந்தால் அந்தப் பணத்தை உடனடியாக திருப்பிக் கொடுக்கும் நிலை உருவாகிவிடும். எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.

நோய்கள் நீங்கும்
வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும். வலியும், வேதனையும் பெருமளவு குறையும். சனி பகவானின் கொடூர பார்வையின் தாக்கம் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத சம்பள உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும். பணம் சார்ந்த பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.



Click it and Unblock the Notifications











