தொடர்ந்து திருமணம் தடைபட்டுகிட்டே இருக்கா? அப்ப இந்த 5 கோவிலுக்கு போங்க...உடனே கல்யாணம் நடக்குமாம்!

நித்ய கல்யாணப்பெருமாள் சுவாமி, விரைவில் திருமணம் நடப்பதற்கான வரங்களை வழங்குவதாக அறியப்படுகிறார். உள்ளூர் புராணத்தின் படி, விஷ்ணு ஒரு துறவியின் 360 மகள்களை மணந்ததாக கூறப்படுகிறது.

திருமணம் என்பது இந்தியாவில் மிக முக்கியமான சமூக அமைப்பாகக் கருதப்படுகிறது. மேலும் இது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமானதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், சில சமயங்களில் சில தம்பதிகள் தவறாகப் பொருந்திபோய், வாழ்க்கையில் மிகுந்த சிரமப்படுகிறார்கள். மற்றவர்களுக்கு திருமணம் என்பது ஒரு தொலைதூரக் கனவாகத் தோன்றலாம். ஆனால், பலர் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். உங்களுக்கான ஆத்மார்த்தமான துணையைப் பெறுவது அதிர்ஷ்டம் என்பதில் சந்தேகமில்லை. உங்களுக்கு பல்வேறு காரணங்களால் திருமணம் தொடர்ந்து தடைபட்டு போகிறதா? சில சமயங்களில் திருமணத்தை தாமதப்படுத்தும் எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் அல்லது வெற்று தாமதத்தை சந்திக்க நேரிடும். மேலும் சில நேரங்களில் ஒவ்வொரு அடியிலும் தடைகள் ஏற்படலாம்.

Temples To Visit If Your Marriage Is Getting Delayed in tamil

ஒரு திருமணம் என்பது வெற்றிபெற அனைத்து கோணங்களிலிருந்தும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய ஒன்று. உங்கள் திருமண தடைகளை நீக்க இறைவன் அருள்புரிவார். ஆமாம், தொடர்ந்து திருமணம் தடைபட்டு போகும் நபர்கள் மற்றும் திருமணமாகாத நபர்கள் இக்கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த ஐந்து கோவில்களுக்குச் சென்று வழிபட்டு, பூஜை செய்வதன் மூலம், விரைவில் திருமண யோகத்தை பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருமணஞ்சேரியில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில்

திருமணஞ்சேரியில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில்

கும்பகோணத்தில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் திருமண தடைகளை நீக்குவதில் புகழ்பெற்றது. கல்யாண சுந்தரேஸ்வரர் இங்குள்ள கோவிலில் கவுரி (சதி) தேவியை மணந்தார். இங்கு பக்தியுடன் வழிபடும் இளம் வயதினருக்கு திருமண பாக்கியம் விரைவில் அமையுமாறு அறியப்படுகிறது. ஆதலால், இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபடுகின்றன. நீங்கள் இந்த கோவிலுக்குள் நுழைந்தவுடன், உங்கள் நிலைமை மற்றும் வாய்ப்புகள் எவ்வளவு மோசமாக இருந்தாலும், உங்களுக்கு விரைவில் திருமணம் நடப்பது உறுதியாகிவிடும். ஆதலால் தான், திருமணஞ்சேரியில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் தெய்வீக தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

சதி தேவியுடன் கல்யாண சுந்தரரை மாலையில் வணங்கி, இங்கு கல்யாண அர்ச்சனை (இங்கே மிகவும் பிரபலமான சடங்கு) செய்ய ஆசீர்வாதமும் அனுமதியும் பெற வேண்டும். இதற்கு மாலைகள், மஞ்சள், தேங்காய், குங்குமம், சீரகம், வெற்றிலை பாக்கு, எலுமிச்சை, சர்க்கரை ஆகியவை தேவை. எலுமிச்சை பழத்தை மறுநாள் சாறாக எடுத்து வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இந்த சடங்கை செய்ததற்குப் பிறகு விரைவில் திருமணம் நிச்சயம் நடைபெறும். திருமணமான பிறகு பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட பழைய மாலையுடன் தம்பதிகள் மீண்டும் இந்த இடத்திற்கு வருகை தர வேண்டும். பின்னர் தங்கள் பெயரில் ஒரு பூஜையை இங்கே செய்ய வேண்டும்.

நித்ய கல்யாணப்பெருமாள் கோவில்

நித்ய கல்யாணப்பெருமாள் கோவில்

நித்ய கல்யாணப்பெருமாள் சுவாமி, விரைவில் திருமணம் நடப்பதற்கான வரங்களை வழங்குவதாக அறியப்படுகிறார். உள்ளூர் புராணத்தின் படி, விஷ்ணு ஒரு துறவியின் 360 மகள்களை மணந்ததாக கூறப்படுகிறது. ஆதலால், திருமணத்தில் தாமதம் ஏற்படுபவர்கள், சென்னையிலிருந்து மகாபலிபுரத்திற்கு செல்லும் கிழக்குக் கடற்கரை சாலையில் சுமார் 45 நிமிடங்கள் தொலைவில் உள்ள திருவிடந்தையில் அமைந்துள்ள நித்ய கல்யாணப்பெருமாளைத் தரிசிக்க வேண்டும். தடைகள் நீங்கி, விரைவில் திருமணம் நடைபெற வேண்டுமானால், நித்ய கல்யாணப் பெருமாள் கோவிலுக்குச் செல்லுங்கள். இக்கோயிலில் தெய்வங்களுக்கு கல்யாணோத்ஸவம் நடந்தால், அங்கு வழிபடுபவர்களுக்கு தாங்கள் விரும்பியபடி திருமணம் நடக்குமாம்.

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

திருமணம் செய்வதில் சிக்கல் உள்ளவர்கள் அல்லது திருமணத்தில் தேவையற்ற தாமதத்தை எதிர்கொள்பவர்கள் இங்கு இறைவனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபடலாம். இந்த பூஜையில் கலந்து கொள்ள ஒரு ஜோடி மாலைகளை வாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் பிறப்பு விவரங்களை அர்ச்சகரிடம் கொடுத்து அர்ச்சனை செய்யுங்கள். பூஜை முடிந்ததும் பூசாரிகளால் மாலைகளை எடுத்து உங்கள் கழுத்தில் அணிவித்து, கோயிலை ஒன்பது முறை சுற்றி வந்து பின்னர் கழுத்தில் இருந்து மாலையை அகற்றவும். வீட்டிற்கு வந்த பிறகு, இந்த மாலைகளை உங்கள் பூஜை அறையில் பாதுகாப்பாக வைக்கவும். திருமணம் நடந்து முடிந்த பிறகு, அந்த பழைய மாலைகளுடன் கோயிலுக்குச் செல்லுங்கள். இரண்டு மாலைகளை வாங்கி, மீண்டும் பூஜை முறையை செய்து, பழைய மாலைகளை கோயிலின் வளாகத்தில் உள்ள ஸ்தல விருட்ச மரத்தில் கடவுளுக்கு காணிக்கையாக கொடுங்கள்.

தென் திருப்பதியில் உப்பிலியப்பன் கோவில்

தென் திருப்பதியில் உப்பிலியப்பன் கோவில்

கும்பகோணத்தில் இருந்து சுமார் 6 கிமீ தொலைவில் உள்ள திருவிண்ணைநகரில், விஷ்ணு கோகிலாம்பாயை மணந்து, திருமண வரங்களை அளித்து வருகிறார். பரவலான நம்பிக்கையின்படி, கோயிலுக்குச் செல்வது உங்கள் திருமண தடைகள் நீங்கி, விரைவாக திருமணம் நடக்க உதவுகிறது. இங்கு ஒரு வேத சடங்கு செய்யப்படுகிறது. மேலும் பக்தர்களுக்கு விரைவில் திருமணம் மற்றும் நல்ல இணக்கத்தை வழங்க ஆசீர்வாதம் வழங்கப்படுகிறது. செல்வ, செழிப்போடு மகிழ்ச்சியாக இருப்பீர்களாம். விஷ்ணு, உப்பிலியப்பன் அல்லது ஒப்பிலியப்பன் என்றும், அவரது மனைவியான லட்சுமி தேவி 'பூமி தேவி' என்றும் அழைக்கப்படுகிறார். இங்குள்ள இறைவனின் இதயப் பகுதியில் துளசி உள்ளது. தென்னிந்தியாவின் ஸ்ரீ வைஷ்ணவ வழிபாட்டு முறையின் 108 திவ்ய தேசங்களில் 13வது ஆலயம்.

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

தென் திருப்பதி (தென் திருப்பதி) என்றும் அழைக்கப்படும் இந்த கோவிலில், திருப்பதி பாலாஜியின் மூத்த சகோதரர் என்று நம்பப்படும் விஷ்ணு பகவானாக இருக்கிறார். புகழ்பெற்ற ஆழ்வார்கள் இந்த கடவுளின் சக்திகளை போற்றும் மங்களாசாசனம் பாடல்களை பாடியுள்ளனர். திருவோணத்தின் போது, ​​பக்தர்கள் பிரம்ம ஹத்ய தோஷ பாவங்களிலிருந்து தங்களைத் தாங்களே விடுவிக்க சந்தனம் மற்றும் குங்குமத்தை சமர்ப்பிப்பார்கள். மணி, ஆரத்தி கரண்டி போன்ற பூஜைப் பொருட்களைச் சமர்ப்பித்தால் சகல பாவங்களிலிருந்தும் விடுபடலாம். பூஜைகள் செய்வது தம்பதிகளிடையே பரஸ்பர ஒற்றுமை மற்றும் திருமண மகிழ்ச்சியை உறுதி செய்யும்.

மங்களாம்பிகை சமேத மாங்கல்யேஸ்வரர் கோவில்

மங்களாம்பிகை சமேத மாங்கல்யேஸ்வரர் கோவில்

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள லால்குடி எடையத்துமங்கலம் கிராமத்தில் மாங்கல்ய மகரிஷியால் திருமண வரம் பெற்ற இக்கோயில் உள்ளது. பைரவர், வசிஸ்டர், அகஸ்தியர் ஆகியோரின் திருமணங்கள் இக்கடவுளின் அருளால் நடத்தப்பட்டன. மங்களாம்பிகை சமேத மாங்கல்யேஸ்வரர் கோயில் உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தவறாமல் வந்து செல்லும் கோயிலாகும். புராணத்தின் படி, மாங்கல்ய மகரிஷி உத்திர நட்சத்திரத்தில் பிறந்தார். அவர் ஒரு சில ரிஷிகள் மற்றும் முனிவர்களின் திருமணங்களை நடத்தியதாகவும், தவத்தின் மூலம் அவர் பெற்ற மாபெரும் சக்தி அவரது உள்ளங்கையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. தேவதைகளின் குருவாக இருப்பதால், திருமணங்கள் வெற்றியடையும் மற்றும் செழிப்புடன் இருக்கவும் ஆசீர்வதிக்கிறார்.

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

திருமணத்தின் ஒவ்வொரு நல்ல முஹூர்த்தத்திலும், இந்த தேவதைகள் மேலிருந்து பூமிக்கு வருகை தருகிறார்கள். மேலும் நீண்ட மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை ஆசீர்வதிப்பதற்காக மாங்கல்ய மகரிஷியின் கைகளுக்கு அதிக சக்தியை அளிக்க மாங்கல்யேஸ்வரரை பிரார்த்தனை செய்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. உத்திர நட்சத்திரத்தன்று தான் வழிபடுபவர்களுக்கு சக்தி வாய்ந்த வரங்களை அருளுகிறார்கள். இக்கோயிலில் கல்யாணோத்ஸவம் தமிழ் மாதம் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் நடைபெறும். பெரும்பாலான கோவில்களில் திருவிழாக்களின் நாட்காட்டியில் பங்குனி உத்திரம் மிக முக்கியமானது. திருமணம் தொடர்பான எந்த தடைகளும், தெய்வங்களுக்கு பூஜை செய்வதன் மூலம் தானாகவே மறைந்துவிடும்.

கல்யாண வெங்கடேஸ்வர ஸ்ரீனிவாசஸ்வாமி கோவில்

கல்யாண வெங்கடேஸ்வர ஸ்ரீனிவாசஸ்வாமி கோவில்

திருப்பதி மங்காபுரத்தில் திருப்பதி வெங்கடாசலபதியும், பத்மாவதி தேவியும் அகஸ்தியர் திருமணத்திற்குப் பிறகு 6 மாதங்கள் தங்கியிருந்ததால், புதுமணத் தம்பதிகள் மலை வழியாகச் செல்லக்கூடாது என்று அகஸ்தியர் அவர்களிடம் வேண்டிக்கொண்டதால், இந்த மலை வழியாக புதுமண தம்பதிகள் யாரும் செல்லக்கூடாது என்று கூறப்படுகிறது. மேலும், இங்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் அனைவரின் விருப்பமும் நிறைவேற இறைவன் அருள் புரிகிறார். திருமணம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க, திருப்பதிக்கு அருகில் உள்ள சீனிவாச மங்காபுரம் கிராமத்தில் இருக்கும் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவிலுக்கு வாங்கள். திருமண பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் இந்த கோவிலில் பிரார்த்தனை செய்வதன் மூலம் அதிலிருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

இக்கோவிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்தில் கலந்துகொள்வதன் மூலம், திருமணம் தொடர்பான துயரங்கள் உங்களை விட்டு நீங்கும். சடங்கின் இறுதிப் பகுதியில், பூசாரி ஒரு மஞ்சள் கங்கனை (மஞ்சள் நூல்) வழிபாட்டாளரின் வலது கையில் கட்டுகிறார். உள்ளூர் நம்பிக்கையின்படி வெங்கடேசப் பெருமான் இத்தலத்தை இரண்டு வரங்களுடன் அருளியுள்ளார். திருப்பதியில் இறைவனை தரிசனம் செய்ய முடியாதவர்கள் இங்கு அவரை வழிபட்டு, பாலாஜியை வழிபட்ட பலன்களைப் பெறலாம். கல்யாண உற்சவத்தில் கலந்துகொண்டு, கையில் ‘காப்பு' கட்டிக்கொண்டு மரபுகளைக் கடைப்பிடிப்பவர்கள்.

 மற்ற கோவில்கள்

மற்ற கோவில்கள்

தோஷங்கள் மற்றும் திருமணத் தடைகளை நீக்கும் பல கோவில்கள் உள்ளன. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர், மயிலாப்பூர் திருமழிசை ஓதண்டீஸ்வரர், வேஷாரண்யம் திருவீழிழலை, கும்பகோணம் நாச்சியார் கோயில், மதுரை இம்மையில் நன்மை தருவர் கோவில், புதுக்கோட்டை தீர்கோளக்குடி, திருப்பத்தூர் பிறன் மலை கோயில், திருப்பாத்தூர் பிரன் மலை கோயில், மயிலாடுதுறை மெய்யூர் குத்தாலம், திருச்சி திருப்பாமஞ்சீசுவரர் கோயில் (செங்கல்புட் அருகே) ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில், அரியத்துறை (பொன்னேரி அருகில், சென்னை) ஸ்ரீ வரமூர்த்தீஸ்வரர் கோயில், முதலியன மற்றும் ஆரியங்காவு தர்மசாஸ்தா, மாராரிக்குளம் மகாதேவர், திருச்சட்டுக்குளம் மகாதேவர், கேரளாவில் உள்ள பெருவாரம் மகாதேவர் கோயில் ஆகிய கோவில்களுக்கு செல்வதன் மூலம் உங்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

பொறுப்புத் துறப்பு: இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் கிடைத்த அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் எழுத்தப்பட்டது. இதன் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, September 12, 2022, 12:51 [IST]
Desktop Bottom Promotion