Just In
- 1 hr ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 1 hr ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 2 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 2 hrs ago நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
Don't Miss
- Automobiles தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- Sports 42 வயதில் 311 ஸ்ட்ரைக் ரேட்! டி20 உலககோப்பைக்கு வருகிறாரா தோனி? ஓய்வை ரத்து செய்ய கேட்க போகும் BCCI
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ரிஷபம் செல்லும் சூரியனால் மே 15 முதல் அதிக பிரச்சனைகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
சூரியன் 2022 மே 15 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்கிறார். சூரியன் ரிஷபம் செல்வதால் சில ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பிரச்சனைகள் அதிகம் இருக்கும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும். கிரகங்களின் மாற்றம் மனித வாழ்க்கையை நேரடியாக பாதிக்கிறது. அதில் சிலருக்கு அதிர்ஷ்டமானதாகவும், சிலருக்கு மோசமானதாகவும் இருக்கும். ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றும் கிரகம் சூரியன். கிரகங்களின் தலைவராக கருதப்படும் சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
அந்த வகையில் சூரியன் 2022 மே 15 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்கிறார். ஜோதிடத்தில் சூரியன் தந்தை, ஆட்சி ஸ்தானம் மற்றும் சமூகத்தில் மரியாதை போன்றவற்றுடன் தொடர்புடையவர். ஆகவே சூரியனின் பெயர்ச்சி அனைத்து ராசிகளையும் பாதிக்கும். ஆனால் சூரியன் ரிஷபம் செல்வதால் சில ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பிரச்சனைகள் அதிகம் இருக்கும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
ரிஷபம் செல்லும் சூரியனால் மிதுன ராசிக்காரர்கள் சற்று ஆற்றல் குறைவாக இருப்பார்கள். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுப்பதில் சில சிரமங்களை நீங்கள் சந்திக்க நேரிடும். மேலும் இக்காலத்தில் உங்கள் சிறப்பான திறனை வழங்குவதில் சில சிக்கல்களை சந்திக்கக்கூடும். கூடுதலாக, உடன்பிறந்தவர்களுடன் சில பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். இக்காலத்தில் உங்கள் கண்களில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் கண்களில் கவனம் செலுத்துங்கள்.
துலாம்
சூரிய பெயர்ச்சி காலம் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இல்லை. இக்காலத்தில் உடல் வலி, ஆற்றலின்மை, பலவீனம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே உங்கள் ஆரோக்கியத்தை கவனித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. நிதி ரீதியாக இக்காலம் உங்களுக்கு சாதகமாக இல்லை. எனவே இக்காலத்தில் எவ்விதமான நிதி முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். இல்லாவிட்டால் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சியால் சற்று கோபமாக நடத்து கொள்வார்கள் மற்றும் இவர்களின் அணுகுமுறையும் சரியாக இருக்காது. அதோடு, தனிப்பட்ட அல்லது தொழில் வாழ்க்கையில் பொறுப்பான வேலைகளை எடுக்கும் போது நீங்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
சூரியனின் ராசி மாற்றத்தால் மகர ராசிக்காரர்கள் தங்களின் நிதி நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் உங்கள் நிதி நிலைமை பாதிக்கப்படும். பெரிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திப்பீர்கள். பணியிடத்தில் உங்கள் உயர் அதிகாரிகளுடனான உறவு சற்று மோசமாக இருக்கும். இதனால் பணியிடத்தில் உங்கள் இமேஜ் சற்று பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
கும்பம்
திருமணமான கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி அவ்வளவு நல்லதாக இல்லை. இக்காலத்தில் உங்கள் வாழ்க்கை துணை ஆட்சி செய்வது போன்று இருக்கும். இதனால் நீங்கள் சற்று வருத்தப்படுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இக்காலம் உங்களுக்கு சாதகமாக இல்லை. சுவாச பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.