Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம்
இன்னைக்கு இந்த பொருட்களை தானம் பண்ணுனா.. உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுமாம்...
நிர்ஜல ஏகாதசியானது பீம ஏகாதசி மற்றும் பாண்டவ ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் விஷ்ணு பகவானுடன் லட்சுமி தேவியும் வணங்கப்படுவார். இந்த ஏகாதசி அன்று லட்சுமி தேவிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்வது நல்லது.
இந்து மதத்தில் ஏகாதசி விரதம் மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு மாதமும் ஏகாதசி இரண்டு முறை வருகிறது. இந்நாளில் விஷ்ணு பகவானை மக்கள் வணங்குவார்கள். ஒவ்வொரு மாதத்தில் வரும் ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. ஏகாதசியிலேயே வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அதற்கு அடுத்தப்படியாக நிர்ஜல ஏகாதசி மிகவும் மகிமை வாய்ந்தது. இந்து நாட்காட்டியின் படி, நிர்ஜல ஏகாதசி ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி அன்று கொண்டாடப்படும். இந்த வருடம் நிர்ஜல ஏகாதசி ஜூன் 21 ஆம் தேதி வருகிறது.
நிர்ஜல ஏகாதசியானது பீம ஏகாதசி மற்றும் பாண்டவ ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் விஷ்ணு பகவானுடன் லட்சுமி தேவியும் வணங்கப்படுவார். இந்த ஏகாதசி அன்று லட்சுமி தேவிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்வதன் மூலம், வீட்டில் உள்ள பணப்பிரச்சனை நீங்கும்.

கடுமையான விரதம்
நிர்ஜல ஏகாதசி விரதமானது மிகவும் கடுமையானது. ஏனெனில் இந்த ஏகாதசி விரதமிருப்பவர்கள் நீர் கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட விரதம் இருந்தால், விரதமிருப்பவரின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். இது தவிர, இந்த ஏகாதசி அன்று தானம் வழங்குவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இப்போது நிர்ஜல ஏகாதசி அன்று என்னென்ன பொருட்களை தானமாக வழங்குவது நல்லது என்பதைக் காண்போம்.

குளிர்ச்சியான பொருட்களை தானம் செய்யலாம்
நிர்ஜல ஏகாதசி தண்ணீரின் முக்கியத்துவத்தைக் கூறுவதாக சொல்லப்படுகிறது. ஆனி மாதத்தின் கடுமையான வெப்பத்தில் ஒருவர் குளிர்ச்சியான பொருட்களை தானம் செய்வது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. ஆனி மாதத்தில் வெப்பம் உச்சத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே குளிர்ச்சியான பொருட்களை நிர்ஜல ஏகாதசி அன்று தானமாக வழங்க வேண்டும். அதனால் நிர்ஜல ஏகாதசி அன்று பலர் சர்பத் போன்ற பானங்களை தானமாக வழங்குகிறார்கள்.

காலணிகளை தானமாக வழங்கலாம்
வேதங்களின் படி, ஏகாதசி நாளில் பிராமணர்களுக்கு காலணிகளை தானமாக வழங்குவது மிகவும் புனிதமாக கூறப்படுகிறது. இது தவிர, உணவு தானம், குடை தானம், படுக்கை தானம், உடை தானம் போன்றவற்றை வழங்குவது மிகச்சிறப்பான பலனை அளிக்கும். வேண்டுமானால், கடலை மற்றும் வெல்லம் ஆகியவற்றையும் தானமாக வழங்கலாம்.

துளசி வழிபாட்டின் நன்மைகள்
ஏகாதசி நாளில் துளசியை வணங்க வேண்டும். அதுவும் இந்நாளில் துளசி செடிக்கு அடியில் ஒரு நெய் தீபம் ஏற்றி விஷ்ணு பகவானை வணங்க வேண்டும். இதனால் வீட்டின் செல்வம், புகழ் மற்றும் பெருமை அதிகரிக்கும். அதோடு, நிர்ஜல விரதம் இருந்து இந்த துளசி வழிபாட்டை செய்தால், வேலை மற்றும் வணிகத்திலும் நன்மைகள் கிடைக்கும்.

நிர்ஜல ஏகாதசி விரதத்தின் நன்மைகள்
நிர்ஜல ஏகாதசி விரதம் இருந்தால், இதுவரை செய்த பாவங்கள் நீங்கி, நற்பலன்கள் கிடைக்கும். நோய்கள் நீங்கும். அனைத்து வகையான செல்வங்களும் கிடைக்கும். முக்கியமாக பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். முக்கியமாக நிர்ஜல ஏகாதசி விரதம் இருந்தால், 24 ஏகாதசி விரதங்களின் பலனைப் பெறலாம்.



Click it and Unblock the Notifications