Latest Updates
-
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் கோடிகளில் புரளப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவில் உள்ள முழு சத்துக்களை பெற வேண்டுமா? அப்ப இப்படி சாப்பிடுங்க.. கூறும் ஹெல்த் கோச்! -
வீட்டில் செல்வம் பெருகணுமா? வாஸ்து சாஸ்திரம் சொல்லும் இந்த செடிகளை சரியான திசையில் வையுங்கள்! -
சாணக்கிய நீதி படி பெண்களின் கூடவே பிறக்கும் 5 தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
Guru Peyarchi 2026: உச்சம் பெறும் குருவால் இந்த 6 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது.. -
ஓட்ஸ் இட்லியும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 02 ஜூன் 2026: இந்த நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா -
புதன்-சுக்கிரன் ஒரே நாளில் நட்சத்திரத்தை மாற்றுவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
1/4 கப் வேர்க்கடலையும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க - இட்லி,தோசைக்கு செமயா இருக்கும் -
குரு-சனி இணைந்து உருவாக்கும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க மூட்ட மூட்டையா பணத்தை அள்ளப்போறாங்க..
செவ்வாய் கிழமைகளில் இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்லன்னா வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கும்..
செவ்வாய் கிழமை அனுமனுக்கு உரிய நாளாக கருதப்பட்டாலு, ஜோதிடத்தின் படி இந்நாள் செவ்வாய் கிரகத்தைக் குறிக்கிறது. இந்த செவ்வாய் கிழமையில் ஒருசில செயல்களை செய்யக்கூடாது.
வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதில் செவ்வாய்கிழமை அனுமனுக்கு உரிய நாளாகும். அனுமனின் அருள் ஒருவருக்கு கிடைத்தால், அவரின் அனைத்து கஷ்டங்களும் நீங்கும். செவ்வாய் கிழமை அனுமனுக்கு உரிய நாளாக கருதப்பட்டாலு, ஜோதிடத்தின் படி இந்நாள் செவ்வாய் கிரகத்தைக் குறிக்கிறது. ஜோதிடத்தில் செவ்வாய் தைரியம் மற்றும் ஆற்றலின் கிரகமாக கருதப்படுகிறது.

இந்த செவ்வாய் கிழமையில் ஒருசில செயல்களை செய்யக்கூடாது. அவ்வாறு செய்வதால் செவ்வாய் பகவானின் கோபத்திற்கு ஆளாகி, வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது செவ்வாய்கிழமைகளில் எந்த மாதிரியான விஷயங்களை செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.

அசைவ உணவை உண்ணாதீர்கள்
நீங்கள் அசைவ உணவுப் பிரியராக இருந்தாலோ அல்லது அசைவ உணவை அவ்வப்போது உண்பவராக இருந்தாலோ, செவ்வாய்கிழமைகளில் மட்டும் அசைவ உணவை உண்ணாதீர்கள். இல்லாவிட்டால், வாழ்வில் பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

நில வழிபாட்டை தவிர்க்கவும்
அனுமன் மண்ணின் மைந்தனாக கருதப்படுகிறார். ஆகவே செவ்வாய்கிழமைகளில் புதிய வீடு வாங்கவோ அல்லது புதிய வீடு கட்டுவதற்கு பூமி பூஜை செய்யவோ வேண்டாம். ஒருவேளை செவ்வாய் கிழமைகளில் இச்செயல்களை செய்தால், வீட்டில் பல நோய்கள் வரலாம் மற்றும் குடும்பத்தில் பண பிரச்சனை ஏற்படத் தொடங்கும்.

இரும்பு பொருட்களை வாங்காதீர்
செவ்வாய் கிழமைகளில் இரும்பு பொருட்களை வாங்குவதை அல்லரு கருப்பு நிற ஆடைகளை வாங்குவதை/அணிவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக செவ்வாய் கிழமைகளில் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிற ஆடைகளை வாங்கலாம்/அணியலாம். அனுமனுக்கு சிவப்பு நிறம் மிகவும் பிடிக்கும். ஆகவே செவ்வாய்கிழமைகளில் சிவப்பு நிற ஆடைகளை அணிவது செவ்வாய் தோஷத்தைக் குறைக்கும்.

மேக்கப் பொருட்களை வாங்காதீர்
செவ்வாய்கிழமைகளில் மேக்கப் பொருட்கள் அல்லது கண்ணாடி பொருட்களை வாங்காதீர்கள். இல்லாவிட்டால் கணவன்-மனைவி இடையே சண்டைகள் வரத் தொடங்கும். இது தவிர, வீட்டில் பண இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

தானம் செய்ய வேண்டிய பொருட்கள்
செவ்வாய்கிழமை அன்று தாமிரம், குங்குமம், கோதுமை, செம்பருத்தி, தேன், மிளகாய் ஆகியவற்றை தானம் செய்வது நல்லது. அதோடு சிவப்பு நிற பழங்கள் மற்றும் சிவப்பு நிற ஆடைகளையும் தானமாக வழங்கலாம். இப்படி தானம் செய்வதால் அனுமன் மகிழ்ச்சியடைவார். மேலும் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.



Click it and Unblock the Notifications