Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
செவ்வாய் கிழமைகளில் இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்லன்னா வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கும்..
செவ்வாய் கிழமை அனுமனுக்கு உரிய நாளாக கருதப்பட்டாலு, ஜோதிடத்தின் படி இந்நாள் செவ்வாய் கிரகத்தைக் குறிக்கிறது. இந்த செவ்வாய் கிழமையில் ஒருசில செயல்களை செய்யக்கூடாது.
வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதில் செவ்வாய்கிழமை அனுமனுக்கு உரிய நாளாகும். அனுமனின் அருள் ஒருவருக்கு கிடைத்தால், அவரின் அனைத்து கஷ்டங்களும் நீங்கும். செவ்வாய் கிழமை அனுமனுக்கு உரிய நாளாக கருதப்பட்டாலு, ஜோதிடத்தின் படி இந்நாள் செவ்வாய் கிரகத்தைக் குறிக்கிறது. ஜோதிடத்தில் செவ்வாய் தைரியம் மற்றும் ஆற்றலின் கிரகமாக கருதப்படுகிறது.

இந்த செவ்வாய் கிழமையில் ஒருசில செயல்களை செய்யக்கூடாது. அவ்வாறு செய்வதால் செவ்வாய் பகவானின் கோபத்திற்கு ஆளாகி, வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது செவ்வாய்கிழமைகளில் எந்த மாதிரியான விஷயங்களை செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.

அசைவ உணவை உண்ணாதீர்கள்
நீங்கள் அசைவ உணவுப் பிரியராக இருந்தாலோ அல்லது அசைவ உணவை அவ்வப்போது உண்பவராக இருந்தாலோ, செவ்வாய்கிழமைகளில் மட்டும் அசைவ உணவை உண்ணாதீர்கள். இல்லாவிட்டால், வாழ்வில் பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

நில வழிபாட்டை தவிர்க்கவும்
அனுமன் மண்ணின் மைந்தனாக கருதப்படுகிறார். ஆகவே செவ்வாய்கிழமைகளில் புதிய வீடு வாங்கவோ அல்லது புதிய வீடு கட்டுவதற்கு பூமி பூஜை செய்யவோ வேண்டாம். ஒருவேளை செவ்வாய் கிழமைகளில் இச்செயல்களை செய்தால், வீட்டில் பல நோய்கள் வரலாம் மற்றும் குடும்பத்தில் பண பிரச்சனை ஏற்படத் தொடங்கும்.

இரும்பு பொருட்களை வாங்காதீர்
செவ்வாய் கிழமைகளில் இரும்பு பொருட்களை வாங்குவதை அல்லரு கருப்பு நிற ஆடைகளை வாங்குவதை/அணிவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக செவ்வாய் கிழமைகளில் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிற ஆடைகளை வாங்கலாம்/அணியலாம். அனுமனுக்கு சிவப்பு நிறம் மிகவும் பிடிக்கும். ஆகவே செவ்வாய்கிழமைகளில் சிவப்பு நிற ஆடைகளை அணிவது செவ்வாய் தோஷத்தைக் குறைக்கும்.

மேக்கப் பொருட்களை வாங்காதீர்
செவ்வாய்கிழமைகளில் மேக்கப் பொருட்கள் அல்லது கண்ணாடி பொருட்களை வாங்காதீர்கள். இல்லாவிட்டால் கணவன்-மனைவி இடையே சண்டைகள் வரத் தொடங்கும். இது தவிர, வீட்டில் பண இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

தானம் செய்ய வேண்டிய பொருட்கள்
செவ்வாய்கிழமை அன்று தாமிரம், குங்குமம், கோதுமை, செம்பருத்தி, தேன், மிளகாய் ஆகியவற்றை தானம் செய்வது நல்லது. அதோடு சிவப்பு நிற பழங்கள் மற்றும் சிவப்பு நிற ஆடைகளையும் தானமாக வழங்கலாம். இப்படி தானம் செய்வதால் அனுமன் மகிழ்ச்சியடைவார். மேலும் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.



Click it and Unblock the Notifications