Just In
- 16 min ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- 18 min ago ஜாகிங் போகும் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க எலும்புகள் அவ்வளவுதான்...!
- 2 hrs ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 3 hrs ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
Don't Miss
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- News சம்மருக்கு டிராவல் பண்றவங்களுக்கு நோ பிராப்ளம்.. சூப்பர் பிளானை கையில் எடுத்த ரயில்வே! இத பாருங்க
- Movies எரிகிற கொள்ளியில் இன்னும் ஏன் எண்ணெய் ஊத்துற.. விஜய்யை கடுமையாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
பிறவியில் இருந்தே விநாயக பெருமானின் அருளைப் பெற்ற ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிக்காரர்களுக்கு விநாயகரின் சிறப்பான அருள் உள்ளது. விநாயகரின் அருளால் அந்த ராசிக்காரர்கள் வாழ்வில் சந்திக்கும் பல தடைகளையும் உடைத்தெறிந்து வெற்றி காண்பார்கள்.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வருகிறது. இந்து மதத்தில் முதன்மை கடவுளாக கருதப்படுபவர் விநாயக பெருமான். எந்த ஒரு சுப காரியங்கள் நடந்தாலும் இவரை முதலில் வணங்கிய பின்னரே பிற வழிபாடுகள் நடக்கும். ஏனெனில் விநாயகரை முதலில் வணங்கினால், நடக்கும் காரியங்களில் எவ்வித தடையும் ஏற்படாமல் வெற்றிகரமாக நடப்பதோடு, பக்தர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. விநாயகரை வழிபடுவதால் அனைத்துவிதமான தொல்லைகளில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.
அதுவும் புதன்கிழமை விநாயகருக்குரிய நாளாகும். ஜோதிடத்தில் ஞானம் மற்றும் செழிப்புக்கு காரணமான கிரகம் புதன், விநாயக பெருமானுடன் தொடர்புடையது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிக்காரர்களுக்கு விநாயகரின் சிறப்பான அருள் உள்ளது. விநாயகரின் அருளால் அந்த ராசிக்காரர்கள் வாழ்வில் சந்திக்கும் பல தடைகளையும் உடைத்தெறிந்து வெற்றி காண்பார்கள். இப்போது விநாயகரின் விருப்பமான அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் விநாயகரின் சிறப்பான அருளும், ஆசீர்வாதமும் கொண்டவர்கள். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வலிமை, வீரம் ஆகியவற்றின் காரணியாகும். இந்த குணங்கள் அனைத்தும் மேஷ ராசிக்காரர்களிடமும் இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு விநாயகரின் சிறப்பான அருள் இருப்பதால், இவர்களின் அனைத்து வேலைகளும் முடிந்து விரைவில் சிறப்பான பலனைத் தருகிறது.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன். ஜோதிடத்தில் புதன் புத்தி, வணிகம், கணிதம், தகவல் தொடர்பு, லாஜிக் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. மிதுன ராசிக்காரர்களை சிவபெருமானின் மகனான விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். ஆகவே இந்த ராசிக்காரர்களின் வழிபாட்டால் விநாயகர் விரைவில் மகிழ்ச்சி அடைகிறார். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுகிறார்கள் மற்றும் விநாயகரின் ஆசீர்வாதத்தால் இந்த ராசிக்காரர்களின் காரியங்கள் அனைத்தும் விரைவில் வெற்றிகரமாக முடிக்கப்படுகிறது.
மகரம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, மகர ராசிக்காரர்களுக்கு விநாயகரின் சிறப்பான அருள் எப்போதும் உண்டு. மகர ராசிக்காரர்கள் சுதந்திரமான சிந்தனையும், கடின உழைப்பும் கொண்டவர்கள். விநாயகருடன், சனி பகவானுக்கும் மகர ராசி மிகவும் பிடித்த ராசி. ஆகவே இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் எப்போதும் உடன் இருக்கும். குறைந்த முயற்சியிலேயே நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். தங்களின் அனைத்து வேலைகளிலும் வெற்றி காண்பார்கள். மேலும் இந்த ராசிக்காரர்கள் தங்கள் புத்திசாலித்தனம் மற்றும் திறமையினால் எப்பேற்பட்ட சவால்களையும் திறம்பட சமாளிப்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு விநாயகரின அருள் இருப்பதால் தான், இவர்களின் பணிகளில் தடைகள் ஏதும் இருப்பதில்லை.