Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
சாணக்கிய நீதியின் படி மனைவிகள் இந்த விஷயங்களை வேண்டுமென்றே கணவரிடம் திட்டமிட்டு மறைப்பாங்களாம்...!
சாணக்கியர் இராஜதந்திரம், பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஞானியாக விளங்கினார். இது தவிர நடைமுறை வாழ்க்கை தொடர்பான பல அறிவுரைகளை சாணக்கியர் கூறியுள்ளார்.
சாணக்கியர் இராஜதந்திரம், பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஞானியாக விளங்கினார். இது தவிர நடைமுறை வாழ்க்கை தொடர்பான பல அறிவுரைகளை சாணக்கியர் கூறியுள்ளார். சாணக்கியர் ஒரு அறிஞராக மட்டுமல்லாமல், சிறந்த ஆசிரியராகவும் இருந்தார். அவருடைய கொள்கைகளை பின்பற்றினால் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள். அவரது சாணக்கிய நீதி பணம், உடல்நலம், வணிகம், திருமண வாழ்க்கை, சமூகம் மற்றும் வாழ்க்கையில் வெற்றி தொடர்பான விஷயங்களைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது. எந்த ஒரு நபரும் தனது வாழ்க்கையில் இந்த விஷயங்களை ஏற்றுக்கொண்டால், அவர் நிச்சயமாக வெற்றியின் உச்சத்தை எட்ட முடியும்.

கணவன் மனைவி மற்றும் திருமண வாழ்க்கை தொடர்பான பல விஷயங்கள் சாணக்கிய நீதியில் விவரிக்கப்பட்டுள்ளன. அவை இன்றைய வாழ்க்கைக்கும் பொருத்தமானவை. சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, மனைவிகள் வேண்டுமென்றே தங்கள் கணவரிடம் இருந்து சில விஷயங்களை மறைக்கிறார்கள். இந்த ரகசியத்தை அவர்கள் கணவரிடம் சொல்லவே மாட்டார்கள். நல்ல எதிர்காலத்திற்காகவும், கணவன்-மனைவிக்கு இடையே உள்ள பந்தத்தை வலுப்படுத்தவும் சில விஷயங்களை மறைக்கிறார்கள். அதன் மூலம் கணவனும் மனைவியும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ முடியும். சாணக்கிய நீதியின் படி மனைவிகள் கணவரிடம் மறைக்கும் பொதுவான விஷயங்கள் என்னென்னெ என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கடந்தகால உறவுகள்
திருமணத்திற்கு முன் இருந்த உறவுகளைப் பற்றி எந்த மனைவியும் தன் கணவரிடம் கூற மாட்டார்கள். திருமண வாழ்வில் எந்த சந்தேகமும் வராத வகையில் மனைவி தன் வாழ்நாள் முழுவதும் இந்த ரகசியத்தை கணவனிடம் இருந்து காப்பாற்றி சந்தோஷமாக வாழ்கிறார்கள்.

கருத்து வேறுபாடுகள்
கணவனின் ஒவ்வொரு முடிவையும் மனைவி ஆதரிக்கிறார்கள். கணவன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், வீட்டில் தகராறு ஏற்படக்கூடாது என்பதற்காகவும் தன் மறுப்பை வெளிப்படையாகக் கூறுவதில்லை. கணவன் என்ன சொன்னாலும் மனைவிகள் கீழ்ப்படிந்து ஒப்புக்கொள்கிறார்கள் என்று சாணக்யா கூறுகிறார். அதனால் மனைவி தனது கருத்துக்களை நேரடியாக கணவரிடம் கூறுவதில்லை.

புகுந்த வீட்டின் சிக்கல்கள்
மனைவி தன் கணவனிடம் வீட்டாரின் தவறான விஷயங்களை மறைக்கிறார்கள். இதனால் வீட்டில் சண்டை சச்சரவுகள் இருக்காது. அவர்கள் வீட்டின் அமைதியைக் குலைக்காமல் பாதுகாத்து, தன்னால் முடிந்த வரை பிரச்சினைகளை நிர்வகிக்கிறார்கள்.

சேமிப்பு
திருமணத்திற்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒரு வாகனத்தின் சக்கரங்களைப் போன்றவர்கள். எப்பொழுதும் ஒரே மாதிரியாக நகர்வார்கள். வீட்டைக் கையாளும் மனைவி வீட்டின் லட்சுமியாகக் கருதப்படுகிறார். மனைவி எப்போதுமே தன் கணவனிடம் வீட்டுச் செலவுகளை மறைத்துவிடுவார், அதுபற்றி கணவரிடம் தெரிவிக்காமல் இருப்பார்கள். அவர் ஒரு நிலையான பட்ஜெட்டில் குடும்பத்தை நடத்துகிறார் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறார். அப்படியிருந்தும், அவர்கள் கடினமான காலங்களில் பணத்தை சேமிக்கிறார்கள். எதிர்காலத்தில் எந்த நெருக்கடியையும் எதிர்கொள்ள பெண்கள் இந்தப் பணத்தைச் செலவிடுகிறார்கள்.

ஆரோக்கியப் பிரச்சினைகள்
திருமணத்திற்குப் பிறகு கணவனுக்கு எந்த விதமான பிரச்சனைகளையும், சிக்கல்களையும் ஏற்படுத்துவதை மனைவி விரும்புவதில்லை. மனைவி தன் உடல்நலக் குறைவைக் கூட கணவனிடம் இருந்து மறைத்து விடுகிறார். அவளால் தாங்கக்கூடிய வரை அவர் அதைத் தாங்குகிறார். ஆனால் இது எதிர்காலத்தில் பெரிய பிரச்சனையாக மாறும். எதிர்காலத்தில் நோய் மோசமடைந்தால், கணவர் அதிக சிரமங்களை எதிர்கொள்கிறார் என்பதை அவர்கள் தாமதமாக உணர்கிறார்கள்.

ஆசைகள்
ஒரு மனைவி தன் ஆசைகளை கணவனிடம் இருந்து எப்போதும் மறைப்பார். கணவனின் விருப்பத்துடன் மனைவி வாழ்கிறார். கணவன் முன் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளத் தயங்குகிறார். திருமணத்திற்குப் பிறகு, ஒரு மனைவி தன் கணவனின் விருப்பத்தைத் தன் விருப்பமாக எடுத்துக்கொண்டு தன் வாழ்க்கையை நடத்துகிறார் என்று சாணக்யா கூறுகிறார்.



Click it and Unblock the Notifications











