For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிள்ளையாருக்கு ஏன் தோப்புக்கரணம் போடறோம்றங்கிற ரகசியம் தெரியுமா? இப்போ தெரிஞ்சிக்கங்க

பிள்ளையார் முன்பாக தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போடுவதன் மூலம் மூளை சுறுசுறுப்படையும், புதுவித உற்சாகம் பிறக்கும். தன் முன்னாள் குட்டிக் கொள்பவர்களுக்கு கூரிய மதியும் சீரிய நிதியும் பெறுவார்கள

|

பிள்ளையாரப்பா எனக்கு நல்ல புத்தியை கொடுப்பா என்று தலையில் குட்டிக்கொள்வார்கள். இரண்டு பக்கமும் கைகளால் காதுகளை பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடுவார்கள். இப்படி செய்வது பிள்ளையாருக்கு ரொம்ப பிடிக்கும். தன் முன்னால் பய பக்தியோடு தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போடுபவர்களுக்கு புத்திசாலித்தனத்தை அதிகரிக்கச் செய்வதோடு நிதியும் அதிகரிக்கச் செய்வேன் என்று அந்த விநாயகரை அருளியிருக்கிறார்.

விநாயகர் செல்லப்பிள்ளையார். புத்திசாலித்தனம் கொண்டவர் கூடவே விளையாட்டுத்தனமும் கொண்டவர். மாமாவின் சங்கை எடுத்து வைத்துக்கொண்டு விளையாடிவர். அதேபோல குறுமுனி அகத்தியரிடமும் விளையாடி தலையில் குட்டு வாங்கியவர். அவருக்கு தன் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டியவர். இந்த இருவரிடமும் விளையாடியதால்தான் நமக்கு தலையில் குட்டுவதும் தோப்புக்கரணம் போடுவதும் தெரியவந்தது. இன்றைக்கு அது மிகப்பெரிய உடற்பயிற்சியாகவும், யோகாவும் உருமாறி நிற்கிறது.

Thoppukarnam done to Ganesha becomes Super Power Yoga

அது சரி தலையில் குட்டி தோப்புக்கரணம் போட்டால் மதி அதிகரிக்கும் சரி நிதி எப்படி அதிகரிக்கும் என்று கேட்கிறீர்களா? புத்திசாலித்தனத்தோடு செய்யும் செயல் வெற்றியடைந்து அதற்கேற்ப வருமானமும் கூடத்தானே செய்யும். சரி புராண கதைக்கு வருவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Thoppukarnam done to Ganesha becomes Super Power Yoga

Thorpi Karnam which is corrupted as Thoppukaranam in Tamil is performed by holding the left ear with right hand fingers and the right by left hand fingers and simultaneously sitting and standing in front of Lord Ganesha and seeks his blessings.
Story first published: Tuesday, August 27, 2019, 11:50 [IST]
Desktop Bottom Promotion