Latest Updates
-
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம் -
இஞ்சி தொகையல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - காரசாரமா ஆரோக்கியமா இருக்கும் -
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க... -
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
இந்தியாவின் 'தங்க நகரம்' என்று அழைக்கப்படும் அதிசய நகரம் - இதுக்கு என்ன காரணம் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது!
உயிர எடுக்கிற குழி முதல்தடவ ஒரு உயிரை காப்பாத்திருக்கு... என்ன நடந்தது தெரியுமா?
ரோட்டில் இருக்கும் குழிகளால் ஒருவர் உயிர் பிழைத்த அதிசயம் பற்றிய கதையைக் கேளுங்கள். அப்படி என்ன நடந்தது என்பது பற்றிய விவரத்தைத் தான் இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
தினந்தோறும் சாலையில் வாகனங்களை ஓட்டிப் போகிறோம் வருகிறோம். ஒவ்வொரு நாளும் எதிர்பாராத விதமாக நிறைய விபத்துகளையும் கண்கூடாக பார்க்கத்தான் செய்கிறோம். அதிலும் நம் நாட்டில் நிறைய விபத்துகள் ஏற்பட சாலையின் மோசமான நிலையே காரணமாக அமைகிறது. ரோட்டில் இருக்கும் குழிகள், அதில் தேங்கி நிற்கும் மழைநீர் போன்ற பிரச்சினைகளே விபத்துகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

ரோட்டில் இருந்த குழியில் விட்டு வண்டி தடுமாறியதால் விபத்து என்று நிறைய செய்திகளை பக்கம் பக்கமாக படிக்கிறோம்,கேட்கிறோம். இப்படி ஏகப்பட்ட ரிப்போர்ட் இருந்தாலும் தற்போது ஒரு ஆச்சர்யம் நிகழ்ந்துள்ளது. ரோட்டில் இருந்த குழிகளால் ஒருவர் உயிர் பிழைத்து உள்ளார். இந்த அதிசயம் எப்படி நடந்தது, வாங்க பார்க்கலாம்.

5 9 வயது பெரியவர்
கிரேட்னா என்ற மலேசியாவை சேர்ந்த 5 9 வயது பெரியவர் வேகமான இதயத் துடிப்பு காரணமாக ஆம்புலன்ஸில் அவசர அவசரமாக மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அவரது இதயத் துடிப்பு 200 பீட்ஸ் /நிமிடங்கள் ஆக இருந்தது. ஆனால் என்ன ஆச்சரியம் போகும் வழியில் இருந்த சாலை குழிகளில் வண்டி வேகமாகச் ஏறிச் சென்றதால் அவரின் இதயத் துடிப்பு நார்மலாகி உள்ளது. இதனால் அவர் உயிரும் பிழைத்து உள்ளார்.

மருத்துவர்களின் கருத்து
சாலையில் உள்ள குழிகள் இதயத்திற்கு எலக்ட்ரிக்கல் ஷாக் மாதிரி செயல்படுகிறது. இதனால் அவரின் இதயத் துடிப்பு பழைய நிலைக்கு வந்துள்ளது. மருத்துவமனையில் கொடுக்கப்படும் எலக்ட்ரிக்கல் ஷாக்கை சாலை குழிகளே செய்துள்ளது என்று மருத்துவர்கள் ஆச்சர்யமாக கூறியுள்ளனர்.

அதிசயம் தான்!
இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க, ஏகப்பட்ட குழிகள் இருந்தும் நம்ம இந்தியாவில இன்னும் இந்த மாதிரி எதுவும் நடக்கலையே, ஒருவேள நம்ம மக்கள் குழி ரைடிங் பண்ணிருக்க மாட்டாங்களோ. ஓ! அதான் லவ்வர்ஸ் இதயத் துடிப்பு நார்மலா இருக்கோ!



Click it and Unblock the Notifications