Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
22 கிலோ பிளாஸ்டிக் கழிவை விழுங்கி பரிதாபமா உயிரிழந்த கர்ப்பிணி திமிங்கலம்... பார்க்க பாவம் இருக்க
22 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை விழுங்கியதால் உயிரிழந்த கர்ப்பமாக கடல் திமிங்கலம் பற்றிய துக்கமான செய்தியைத் தான் இங்கே உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். அதைப் பற்றிய விரிவான தொகுப்பு தான் இது.
கர்ப்பமாக இருந்த மிகப்பெரிய திமிங்கலம் ஒன்று கடலில் நம்மால் கலக்கப்படுகிற பிளாஸ்டிக் கழிவுகளை விழுங்கியதால் பரிதாபமாக இறந்திருக்கிறது.

அப்படி இறந்த திமிங்கலத்தை மீட்டெடுத்து ஆய்வு செய்த போதுதான் தெரிந்தது அந்த திமிங்கலத்தின் வயிற்றுக்குள் கிட்டதட்ட 22 கிலோ அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது தெரிந்து வெளியே அகற்றப்பட்டிருக்கிறது. அது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

மத்தியத் தரைகடல்
மத்திய தரைகடல் பகுதியில் மாசுபாடு அதிகரித்துவிட்டது. அதனால் ஏராளமான பிரச்சினைகள் உண்டாவதற்கான நமக்கான எச்சரிக்கையாகத் தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள் கட்டுக்கடங்காமல் கடல் பகுதியில் கலந்து விட்டது. அது மத்திய தரைகடல் பகுதியில் மட்டுமல்ல, உலக கடற்கரைப் பகுதிகள் முழுவதும் இந்த நிலையில் தான் இருக்கிறது.

26 அடி திமிங்கலம்
சிறிய அளவு மீன் பிளாஸ்டிக்கை விழுங்கி இறக்கவில்லை. நீங்கள் நன்கு யோசித்துப் பார்க்க வேண்டும். இறந்தது கிட்டதட்ட 26 அடி அளவுக்கு நீளமுடைய மாபெரும் ராட்சத திமிங்கலம்.

வயிற்றுக்குள்
எதனால் இந்த ராட்சத திமிங்கலம் இறந்தது எ்னறு சுாதனை செய்த போது அதனுடைய வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக்குகள் கிடைத்திருக்கின்றன. வெறும் பிளாஸ்டிக் பைகள் மட்டுமல்லாது எலக்ட்ரிகல் வயர்கள், பிளாஸ்டிக் தட்டுக்கள், ஷாப்பிங் செல்லும்போது வாங்கி வரும் பைகள், மீன் வலைகள், சோப்பு டப்பாக்கள் போன்ற பல்வேறு வகையான பிளாஸ்டிக் கழிவுகள் அந்த திமிங்கலத்தின் வயிற்றுக்குள் இருந்திருக்கின்றன.

கரை ஒதுங்கியது
மத்திய தரைக்கடல் பகுதயில் வடக்கு கடற்கரை ஓரமாக மிக பிரமாண்டமான ராட்சத திமிங்கலம். அது இறந்து போய் கரை ஒதுங்கியிருந்தது. கடல் தான் திமிங்கலம், டால்பின் போன்ற உயிரினங்களுக்கு சொர்க்கம். அந்த சொர்க்கத்தையே அவர்களுக்கான நரகமாக நாம் மாற்றி விட்டோம்.

அச்சுறுத்தலாகிவிட்ட கடல்
சமீப ஆண்டுகளாக கடல் பகுதிகளின் வாழ்க்கை பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஆய்வுகளும் அதைத் தான் சொல்கின்றன. அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிய மற்றும் ஐரோப்பிய கடற்பகுதிகளில் அடிக்கடி கடல் வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் கழிவுகளாலும் மாசுபாட்டினாலும் செத்து கரை ஒதுங்குகிறது. இதை அடிப்படையாக வைத்து தான் ஆராய்ச்சியாளர்களால் எச்சரிக்கை விடப்படுகிறது.



Click it and Unblock the Notifications