ஆசை ஆசையாய் இப்படி முகத்தை மாற்றிக்கொண்ட மனிதன்... காரணம் தெரிஞ்சா சிரிப்பீங்க...

மண்டையோட்டு மீதான ஆசையால் தன்னை மாற்றிக் கொண்ட விநோத மனிதர் பற்றிய தொகுப்பு தான் இது.

சினிமா பார்ப்பது அவனுக்கு விருப்பம்' என்பதற்கும் 'அவன் ஒரு சினிமா பைத்தியம்' என்பதற்கும் என்ன வேறுபாடு? அளவுக்கு அதிகமான விருப்பம் என்பதை பைத்தியம் என்றே உலகம் அழைக்கிறது.

Man Undergoes Several Surgeries To Attain Skull Face

விமர்சனங்கள் எழுந்தாலும் கலாகா, மண்டையோட்டு மீதான மையலை விட்டுவிடவில்லை. இன்னும் சில அறுவை சிகிச்சைகளை செய்துகொள்ள இருப்பதாக கூறும் அவர், இந்த மாற்றம் மண்டையோடு போன்று தோற்றமளிக்க வேண்டும் என்ற அவரது கனவு நனவாவதற்கான முயற்சிதான் என்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வித்தியாசமான விருப்பம்

வித்தியாசமான விருப்பம்

அமெரிக்காவில் கொலம்பியாவை சேர்ந்த இருபத்திரண்டு வயது வாலிபனின் பெயர் கலாகா ஸ்கல். டாட்டூ என்னும் பச்சை குத்துதலை தொழிலாக செய்பவன். சிறுவயதிலிருந்தே அவனுக்கு மண்டையோடுகள் என்றால் அதிக விருப்பம்; அதாவது பைத்தியம்! ஆகவே, தன் முகத்தையும் மண்டையோடு போல் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினான்.

தடுத்த தாய்

தடுத்த தாய்

கலாகாவின் தாயாருக்கு அவனது விருப்பம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆகவே, மண்டையோடு போன்று தோற்றமளிப்பதற்காக அவன் செய்த முயற்சிகளை அவர் தடுத்துவிட்டார். கலாகாவின் விருப்பம் நிறைவேற காலம் கனிந்தது. ஆம், அவன் தாயார் மரணமடைந்தார். தாய் இறந்ததும் தன் விருப்பத்தை நிறைவேற்ற தீர்மானித்தான் கலாகா ஸ்கல்.

மூக்கு போனது; காதும் அறுந்தது

மூக்கு போனது; காதும் அறுந்தது

மண்டையோடு போன்ற தோற்றம் வருவதற்காக பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கு கலாகா உள்பட வேண்டியது நேர்ந்தது. மண்டையோட்டுக்கு மூக்கு இருக்காது. ஆகவே, அவர் தன் மூக்கின் கீழ்ப்பகுதியை அறுவைசிகிச்சை மூலம் நீக்கிக்கொண்டார். மண்டையோட்டுக்கு காது மடல்களும் இருக்காது. ஆகவே, தன் காது மடல்களின் பெரும்பகுதியையும் அறுவைசிகிச்சை மூலம் எடுத்து விட்டார். நாக்கினை பிளந்ததோடு, நாவில் நீல மற்றும் சாம்பல் வண்ணத்தில் பச்சை குத்திக் கொண்டார்.

கண்களிலும் தாடையிலும் குழி

கண்களிலும் தாடையிலும் குழி

கலாகா ஸ்கல், தன் கண்களைச் சுற்றிலும் கறுப்பு நிற குழி இருப்பதுபோன்றும், மேல் மற்றும் கீழ்த்தாடைகளுக்கு இடையே குழி இருப்பதுபோன்றும் பச்சை குத்திக்கொண்டார். பற்கள் பெரிதாக இருப்பதுபோன்றும் டாட்டூ வரைந்தார்.

ஊடக வெளிச்சம்

ஊடக வெளிச்சம்

கொலம்பியாவில் விருப்பப்பட்டு மூக்கையும் காதையும் வெட்டிக்கொண்ட முதல் நபர் கலாகாதான்! ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவே கலாகா இப்படிச் செய்ததாக கூறப்படுகிறது. கலாகாவின் ஆர்வத்தை புரிந்து கொள்ளாத பலர் அவரது செயலை விமர்சித்துள்ளனர்.

கனவு பயணம் தொடர்கிறது

விமர்சனங்கள் எழுந்தாலும் கலாகா, மண்டையோட்டு மீதான மையலை விட்டுவிடவில்லை. இன்னும் சில அறுவை சிகிச்சைகளை செய்துகொள்ள இருப்பதாக கூறும் அவர், இந்த மாற்றம் மண்டையோடு போன்று தோற்றமளிக்க வேண்டும் என்ற அவரது கனவு நனவாவதற்கான முயற்சிதான் என்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, July 12, 2019, 12:35 [IST]
Desktop Bottom Promotion