Just In
- 22 min ago தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- 53 min ago இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- 1 hr ago குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- 2 hrs ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
Don't Miss
- News 4 மணி வரை உக்கிரமா இருப்பேன்! சுட்டெரிக்கும் வெயில்..வயதானவர்களுக்கு வார்னிங்! எப்போது வாக்களிப்பது?
- Finance பேடிஎம் UPI ஐடிகள், புதிய வங்கிகளுக்கு மாற்றம்.. RBI அதிரடி அறிவிப்பு!
- Movies பலாப்பழம் ஏன் இருட்டா இருக்கு.. வாக்குச்சாவடியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சுய இன்பத்திற்கும் கருவியை கண்டுபிடித்து அலற விட்ட முன்னோர்கள்!
ஆரம்ப காலங்களில் சுய இன்பத்திற்காக பயன்படுத்தப்பட்ட கருவிகளைப் பற்றிய அதிர்ச்சிகரமான சில தகவல்கள்.
மனித தன்மையற்ற செயல்கள் இன்று அதாவது நவ நாகரிக காலம் துவங்கியதிலிருந்து தன நடந்து கொண்டிருக்கிறது என்று நினைக்க வேண்டாம், இன்றைய தேதியில் நடப்பதை விட பன்மடங்கு அதிகமாக முந்தைய காலங்களில் நடந்திருக்கிறது.
இப்போதும் கூட பாலியல் ரீதியிலான விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே இருக்கக்கூடிய சூழலிலேயே பாலியல் தொடர்பான விஷயங்களை கேட்கவோ, படிக்கவோ வெட்கப்படுகிறார்கள் என்றால் ஆரம்ப காலங்களில் எல்லாம் என்ன செய்திருப்பார்கள். இப்போதும் கூட சுய இன்பம் என்பது தவறான பழக்கம் என்ற பார்வையிருக்கிறது. இந்நிலையில் ஆரம்ப காலங்களில் சுய இன்பம் காண்பதற்கு என்றே பிரத்யோக கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.
#1
ஆரம்ப காலத்தில் சுய இன்பம் காண்பது என்பது ஆரோக்கியமற்றது, உடலில் ஏதேனும் குறைபாடு அல்லது நோய் தாக்கம் ஏற்பட்டால் தான் இப்படி சுய இன்பம் காண வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று நினைத்திருந்திருக்கிறார்கள்.
அந்த நோயை ஸ்பெர்மடோர்ஹோயா என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதை சீராக்க ஜுகும் பென்னீஸ் என்ற கருவி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
#2
இது ஓர் இரும்பு வளையம் போல இருக்கும். ஆண்கள் இதனை தங்களது பிறப்புறுப்பில் பொருத்திக் கொள்வார்கள். விக்டோரியன் எரா என்று சொல்லப்படுகிற காலத்தில் தான் இதனை அதிகப்படியாக ஆண்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த முறை மிகவும் காட்டுமிராண்டித்தனமானது என்று சிலர் விமர்சித்திருக்கிறார்கள். சுய இன்பம் காணும் போது இந்த கருவியினால் பலருக்கும் ரத்தக்காயம் ஏற்பட்டிருக்கிறதாம்.
#3
1906 ஆம் ஆண்டு ரேபேல் ஷோன் என்பவர் இந்த பெல்ட்டை கண்டுபிடித்திருக்கிறார். ஆண்களின் பிறப்புறுப்பின் மீது இந்த பெல்ட் போட்டுக் கொள்ள வேண்டும். மிகவும் இறுக்கமாக இந்த பெல்ட்டை அணிந்து கொள்வதினால் அதீதமான வழி உண்டாகிடும்.
இறுக்கமாக கட்டியிருப்பதினால் நடுவில் கழற்றவும் முடியாது.
#4
இந்த கருவிக்கு 1876களிலேயே காப்புரிமை பெறப்பட்டிருக்கிறது. ஸ்பெர்மேட்டிக் ட்ருஸ் என்று அழைக்கப்படும் இந்த கருவியை வெற்றிகரமான கருவி என்று அழைக்கிறார்கள். ஆனாலும் இந்த கருவியும் வலியையும் வேதனையையும் கொடுத்தது என்றே சொல்லப்படுகிறது.
இதனை காலுடன் இணைத்து தங்களது பிறப்புறுப்பில் மாட்டிக் கொள்ள வேண்டுமாம்.
#5
1837 ஆம் ஆண்டு மிகத் தீவிரமாக சுய இன்பம் காண்பது என்பது மிகவும் ஆபத்தானது என்ற ரீதியில் நிறைய பிரசங்கம் செய்யப்பட்டது. இதிலிருந்து தங்களை காத்துக்கொள்ள இதைச் சாப்பிடுங்கள் என்று சொல்லி ஓர் பிஸ்கட் வடிவில் இருக்கக்கூடிய ஒன்றையும் கொடுத்தார்கள். இதைச் சாப்பிடுவதால் உங்களுக்கு காம உணர்வு மேலோங்காது அதனால் சுய இன்பம் காணவேண்டிய கட்டாயம் ஏற்படாது என்று சொல்லப்பட்டது.
#6
இதனை சில்வெஸ்ஃபர் க்ரகம் என்பவர் கண்டுபிடித்திருக்கிறார், இதனை கிரஹம் க்ராக்கர் என்றே அழைக்கிறார்கள். இதனை இன்றளவும் சிலர் பயன்படுத்துகிறார்களாம்.
ஆனாலும் இது விளம்பர யுத்தி, ஆபத்தானது என்று பல்வேறு விமர்சனங்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
#7
இந்த கருவி சுய இன்பம் காண்பதற்கு எதிரானது இல்லை என்றாலும் பிறப்புறுப்பில் இருக்கும் முடிகளை அகற்ற பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த கருவி நரக வேதனையை கொடுக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
#8
ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் கருவிகளை கொடுத்திருக்கிறார்கள். பெண்கள் இதனை தொடர்ந்து நிரந்தரமாக அணிந்திருக்க வேண்டும் என்றும் நிர்பந்திக்கப்பட்டார்கள். இயற்கை உபாதை கழிக்கும் போது மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
அந்தக் காலத்தில் ஆண்கள் பெரும்பாலானோர் போர்களத்திற்கு சென்று போரிட வேண்டிய கட்டாயம் இருந்தது, சிலர் அங்கே மரணித்து விடுவதும் உண்டு.
#9
இந்த நேரத்தில் பெண்களும் சுய இன்பம் காணாமல் இருக்க வேண்டும்,வேறு ஆணுடன் உறவு கொள்ளக்கூடாது என்பதற்காக இதனை தொடர்ந்து அணிந்திருக்கச் சொல்லியிருக்கிறார்கள். பதினாரா நூற்றாண்டுக்கு முன்னர் பயன்படுத்தியது என்று சொல்லப்பட்டாலும் சரியான சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை.
#10
1915 ஆம் ஆண்டு பிரான்ஸில் இந்த எலெக்ட்ரிக் கருவியை கண்டுபிடித்திருக்கிறார்கள். சிறிய வளையம் ஒன்றினை உங்களது பிறப்புறுப்பில் பொருத்திக் கொள்ள வேண்டும் அதன் வயர் ஒரு எலக்ட்ரானிக் கருவியுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
எலக்ட்ரிக் கருவி என்றதும் ஷாக் ஏதும் அடித்திடுமோ என்று எல்லாம் பயந்து விடாதீர்கள்.
#11
அதை விட சுவாரஸ்யமான ஒரு விஷயத்தை இறக்கியிருக்கிறார்கள். பிறப்புறுப்பில் வளையத்தை மாட்டிக் கொண்டு அத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் கருவியை கையிலேயே வைத்துக் கொண்டிருக்க வேண்டும் பிறப்புறுப்பில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்தது என்று சொன்னால் நம்மைச் சுற்றி பத்தடி தூரத்தில் இருப்பவர்களுக்கும் கேக்கும் விதமாக நாம் கையில் வைத்திருக்கக்கூடிய கருவியிலிருந்து அலாரம் ஒலிக்கிறது.
அந்த காலத்தில் கையில் வைத்திருப்பது எதற்கான கருவி? அது எப்போதெல்லாம் அலாரமடிக்கும் என்பது பலருக்கும் தெரிந்தே தான் இருந்திருக்கிறது.
#12
1893 ஆம் ஆண்டு ஃப்ராங் ஓர்த் என்பவர் இந்த கருவியை உருவாக்கியிருக்கிறார். இது தோல்வியடைந்த கண்டுபிடிப்பு என்று சொல்லப்படுகிறது. இதனை வீட்டிலிருக்கும் போது மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த கருவியை உங்கள் பிறப்புறுப்பில் பொறுத்திக் கொள்ள வேண்டும்.
காம உணர்வு மேலோங்கி உங்களது உறுப்பு விரியும் போது இந்த கருவியுடன் பொருத்தப்பட்டிருக்கும் கப்பிலிருந்து குளிர்ந்த நீர் பிறப்புறுப்பின் மீது விழுகிறது.
#13
குளிர்ந்த நீர் பட்டவுடன் உடனே உறுப்பு சகஜநிலைக்கு திரும்பிடும், இதனால் நீங்கள் சுய இன்பம் காண வேண்டிய கட்டாயம் ஏற்படாது என்று சொல்லப்பட்டது. ஆனால் இந்த முறை வெற்றியடையவில்லை. மாறாக இருக்கும் இடம் ஈரமானது தான் மிச்சம்.
#14
பிறப்புறுப்பின் அளவு பெரிதாவதால் தான் சுய இன்பம் காண வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது என ஒரு காலத்தில் நம்பினார்கள். இதனால் உறுப்பின் அளவை சிறிதாக்க பல்வேறு கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன, அவற்றில் ஒன்று தான் இது.
#15
இதனை பென்னீஸ் கேஜ் என்றே அழைக்கிறார்கள். பிறப்புறுப்பில் இதனை மாட்டிக் கொள்ள வேண்டும். கடினமான கருவியாக இருப்பதால் உறுப்பு விறைக்கும் போது அதீத வலி உண்டாகும், அதே நேரத்தில் சுய இன்பமும் காண முடியாது.