Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
பாதி பன்றி, பாதி மனிதன், ஆட்டுக்கு பிறந்த வினோதக் குட்டி - என்ன நடந்திருக்கும்?
பாதி பன்றி, பாதி மனிதன், ஆட்டுக்கு பிறந்த வினோதக் குட்டி - என்ன நடந்திருக்கும்?

பிரபல ஆங்கில படமான எக்ஸ்-மேனில் நாம் நிறைய மியூட்டேஷன் குறித்த விஷயங்கள் பார்த்திருப்போம். விசித்திரமான தோற்றத்தில், வினோதமான சக்திகளுடன் அவர்கள் சூப்பர் ஹீரோ போல இருப்பார்கள்.
இன்றைய அறிவியலில் பல முன்னணி மரபணு ஆராய்சியாளர்கள் இந்த ஜெனிட்டிக் மியூட்டேஷன் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். இதனால், இழந்த ஒருவரையும், நாம் கற்பனையாக உருவாக்கிய அல்லது கார்டூனாக கண்டு வரும் கதாப்பதிரங்களையும் உயிருடன் கண்ணெதிரே காண இயலும்.
இப்படி ஒரு ஜெனிட்டிக் மியூட்டேஷன் நடந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு சான்றாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு வினோதமான பிரசவம் நடந்திருக்கிறது. அது குறித்த தகவல்களை தான் நாம் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்....

பிலிப்பைன்ஸ்!
ஆட்டுக்கு பாதி பன்றி, பாதி மனித உருவில் குட்டி ஒன்று பிறந்ததாக கூறப்படும் இந்த நிகழ்வு, பிலிப்பைன்ஸ் நாட்டின் சுல்தான் கடாரத் எனும் இடத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. இப்பகுதியில் விசித்து ஒருவரது பண்ணையில் தான் ஆடு இப்படியான பாதி பன்றி, மனித உருவம் கொண்ட குட்டியை ஈன்றதாக கூறி செய்தி வைரலாக பரவி வருகிறது.

சிசேரியன்!
ஜோசபைன் ரெபிகியூ எனும் விவசாரி இதுக்குறித்து கூறுகையில், ஆடு குட்டி இட முடியாமல் சிரமப்பட்டதால், கால்நடை மருத்துவரை அழைத்தோம். அவர் வந்து அறுவை சிகிச்சை மூலம் குட்டியை வெளியே எடுத்தார். ஆனால், குட்டியை பார்த்த நொடியில் அனைவரும் வாயடைத்து போயினர். காரணம் ஆடு ஈன்ற குட்டி பார்ப்பதற்கு பாதி பன்றி மற்றும் பாதி மனித உருவத்தில் இருந்தது.

தோற்றம்!
எப்போதும் ஆடு குட்டி இட்டால், அதன் தொழில் கொஞ்சமாவது முடி இருக்கும். ஆனால், இந்த குட்டி பளிச்சென்று கொஞ்சம் கூட முடி இல்லாமல் பளபளவென்று இருந்தது. தோற்றத்தில் விசித்திரமாக இருக்கும் இந்த குட்டியை கண்டு அனைவரும் வருந்தி வருகிறார்கள். ஆம்! குட்டி ஈன்ற கொஞ்ச நேரத்திலேயே குட்டியும், தாயும் இறந்துவிட்டது.
இந்த நிகழ்வு நம் கிராமத்தில் நடக்க போகும் ஏதோ அபாயத்தை குறிக்கிறது என்று கிராம மக்கள் இப்போதே பேச துவங்கிவிட்டனர்.

ஆராய்ச்சி!
சில ஆராய்ச்சியாளர்கள் இது ஒரு மரபணு மாற்றம் அல்லது பிறழ்வு எனப்படும் ஜெனிட்டிக் மியூட்டேஷன் நிகழ்வுக்கு சிறந்த எடுத்துகாட்டு என்று கூறி வருகிறார்கள். மேலும், ஒருவேளை கருத்தரித்த ஆட்டுக்கு Rift Valley Fever என்ற நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும், இது கொசுக்கள் மூலம் பரவும் நோய் என்றும் கூறி இருக்கிறார்கள். இதனால், வயிற்றில் வளரும் சிசுவின் வளர்ச்சியில் தாக்கம் ஏற்படுமாம்.



Click it and Unblock the Notifications