Latest Updates
-
வார ராசிபலன் (03 May 2026-09 May 2026)- இந்த வாரம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
நேபாளி ஸ்டைல் சிக்கன் சுகௌனி - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
பிஜ்னோர் சம்பவம்: லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கவனத்திற்கு! உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? -
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்!
ஓம் மந்திரத்தை உச்சரிக்கும்முன் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய 4 விஷயங்கள்
ஓம் என்ற மந்திரத்தைச் சொல்லும்போது என்னென்ன விஷயங்களை மனதுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் சக்தியை பற்றி தெரியுமா? இது ஒரு இரண்டு வார்த்தை தான் ஆனால் இதன் சக்தி முழு பிரபஞ்சத்தையும் ஆட்டிப் படைக்கும் வல்லமை படைத்தது. இந்த ஓம் எனும் ஒலி இந்த பிரபஞ்சம் முழுவதும் இன்றளவும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.

இது தான் அனைத்து மந்திரங்களுக்கும் உயிர் நாடியாக விளங்குகிறது. இந்த ஒம் என்ற பிரணவ மந்திரத்தை நாம் மனப் பூர்வமாக செபித்து வந்தால் நம் உடலும் மனமும் அமைதி நிலை பெறும்.

ஓம் மந்திரம்
உங்கள் மன அழுத்தத்தை ஒரு நொடிப் பொழுதில் போக்கும் அற்புத மந்திரம் இந்த ஓம் என்ற ஓங்கார ஒலி தான். நீங்கள் தினமும் இந்த மந்திரத்தை ஓத நினைத்தால் கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றி செய்யுங்கள். மனதில் அமைதியோடு வாழ்க்கையில் மகிழ்ச்சியும் கிட்டும்.

அமைதியான இடம்
இந்த மந்திரத்தை ஓதுவதற்கு முன் எந்த சத்தமும் இடையூறும் இல்லாத அமைதியான இடத்தை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். நல்ல கற்றோட்டமான திறந்த வெளியில் செய்வது நல்லது. திறந்தவெளியான இடங்கள், மொட்டை மாடி, செளகரியமான இடம் போன்றவற்றை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.

ஓத வேண்டிய நேரம்
எழுந்திருக்கும் போதே இந்த ஓம் மந்திரத்தை ஓதுவது அந்த ஓலி அதிர்வுகளே போதும் அந்த நாள் உங்களுக்கு அமைதியான நாளாக கழியும். உங்களால் அதிகாலையில் ஓத முடியா விட்டால் இரவு நேரங்களில் கூட இதை ஜெபிக்கலாம். மனது அமைதியை தழுவி நல்ல நிம்மதியான தூக்கத்தையும் பெறுவீர்கள்.

தியானம்
இந்த ஓம் என்ற பிரணவ மந்திரம் மதத்தை சார்ந்த ஒன்றாக பெரும்பாலும் கருதுகின்றனர். ஆனால் இது ஒரு தியான வார்த்தை. இது உங்கள் மனதை அமைதிப்படுத்தும் தாரக மந்திரம். இதை கடவுள், மதம் என்ற பெயரால் தள்ளி வைக்காதீர்கள். இது எல்லாராலும் ஜெபிக்க வேண்டிய மன நிம்மதி மந்திரம்.

பத்மாசனம்
நல்ல உரக்க ஓதுங்கள். பத்மாசனம் நிலையில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு உங்கள் அடிவயிற்றில் இருந்து இந்த மந்திரத்தின் சத்தம் ஒலிக்கட்டும். எவ்வளவு தூரம் உங்களால் ஒலியை நீடித்து சொல்ல முடியுமே அதுவரை ஓதுங்கள். அப்பொழுது மூச்சை இழுத்து சொல்லுங்கள.அப்படியே இந்த மந்திரத்தை மறுபடியும் மறுபடியும் ஓதுங்கள்.2 நிமிடங்களாவது இதை செய்து வாருங்கள். ஓம் என்ற ஓங்காரமும் உங்கள் உடலில் கலந்து மனதில் அமைதியை நிலைக்க செய்யும்.



Click it and Unblock the Notifications