Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் செவ்வாய்: மார்ச் 26 முதல் இந்த 6 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது.. -
4 கத்திரிக்காயும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 23 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரும் நாளாக இருக்குமாம்...! -
சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் பெரிய வெங்காயம் இருந்தா 10 நிமிடத்தில் இந்த சட்னியை அரைங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்! -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 மாவட்டங்கள் என்னென்ன தெரியுமா? -
ஆந்திரா முட்டை புலுசு ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க... சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்...! -
புதன் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
காரசாரமான கேரளா ஸ்டைல் ஈஸி பெப்பர் சிக்கன் ரெசிபி... இப்படி செஞ்சு பாருங்க... வேற லெவல் சைடிஷா இருக்கும்...! -
கள்ளக்காதலில் ஈடுபட அதிக வாய்ப்புள்ள 4 ராசிகள் இவங்கதான்... இவங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...!
ஊர்ந்து செல்லும் எறும்புகள் சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்!
உலகம் முழுவதும் எறும்புகள் பரவி விரிந்து இருக்கிறது. எறும்புகளுக்கென்ற தனித்துவமான குணங்கள் சில இருக்கின்றன
எல்லாருக்கும் தன்னுடைய வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். நேர் வழியோ குறுக்கு வழியோ எப்படியாவது சாதித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில்,ஆசையில் நாம் மேற்கொள்ள சில விஷயம் முட்டாள்தனமாக இருந்துவிடுவது உண்டு.
வெற்றிக்கான வழியை சொல்கிறவர்கள் பகட்டுடன் ஏற்கனவே தன்னுடைய வாழ்க்கையில் வெற்றிப் பெற்று பெரிய அந்தஸ்த்தில் இருக்க வேண்டும். அதாவது அவர் ஒரு சோதனை எலி என்ற எண்ணத்துடன் தான் நாம் பார்கிறோம். குறிப்பாக,வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் அல்லது யாரைப் பார்த்து நாம் பிரம்மிக்கிறோமோ அவர்களைப் பார்த்து தான் நம்முடைய வாழ்க்கை தடத்தை வகுத்துக் கொள்ள விரும்புவோம்.

எறும்பு பாடம் :
அவர்கள் பின்பற்றிய வழியை தெரிந்து கொள்வதில் நமக்கெல்லாம் அதீத ஆர்வம் இருக்கும். ஜெயித்தவர்கள் மட்டும் தான் வெற்றிக்கு வழி காட்ட வேண்டுமா? அதுவும் மனிதர்கள் மட்டும் தான் காட்ட வேண்டுமா என்ன?
நாம் பார்த்தாலே நசுக்கி தூக்கியெறியும் எறும்புகளிடம் இருந்து கற்றுக் கொள்ளவும் வாழ்க்கைப் பாடம் இருக்கிறது.

முயற்சி :
தன்னுடைய இலக்கை அடைய இறுதி வரை அதாவது தன் உயிர் போகும் வரை போராடும். அவை செல்லும் வழியில் ஏதாவது தடங்களை ஏற்படுத்துங்கள். வழியை தவறவிட்டு தவிக்கும், முட்டி மோதும், வழி மாறி முன்னேற முயற்சி செய்யுமே தவிர ஒரு போதும் சோர்ந்து பின் வாங்குவதில்லை.

தைரியம் :
பிற உயிரினங்களால் தன்னுடைய உயிருக்கே ஆபத்து என்று தெரிந்தும் தைரியமாக தன்னுடைய உணவைத்தேடி வெளியே வருகிறது. தான் சந்திக்கும் தடங்கள்களையெல்லாம் வெற்றிபடிகளாக்கி எனக்கான உணவுடன் நான் மீண்டும் என்னுடைய இருப்பிடத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஒரே கோரிக்கையுடன் லட்சிய வெறியுடன் பயணிக்கிறது.

நம்பிக்கை :
எறும்புகள் தாங்க முடியாத குளிர் காலத்தில் எதிர் வரும் கோடை காலத்தை மனதில் வைத்து பொறுமையாக காத்திருக்கும்.
தனக்கான காலம் வரும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கும். நினைத்தது போலவே கோடை காலம் வந்ததும் தன் உணவைத்தேடி வெளியில் கிளம்பி விடும்.
முன்னதாக ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். குளிர் காலம் வந்ததும் தன்னால் வெளியில் செல்ல முடியாது என்று தனக்கான உணவை அதாவது அந்த குளிர்காலம் முடியும் வரை தேவைப்படுகின்ற உணவை சேமித்து வைத்திடும்.

எல்லாரும் சமம் :
நான் பெரியவன்,முதலாளி என்று எந்த எறும்பும் தனித்து இருப்பதில்லை. எல்லாரும் சமம் எல்லாரும் சேர்ந்து உழைக்கின்றன.
ஒன்றுடன் ஒன்று போட்டிப் போடுவதில்லை, பொறாமை கொள்வதில்லை. எவ்வளவு பேர் இருக்கிறோம் நான் கொண்டு வருகின்ற ஒற்றை நெல் இல்லையென்றால் என்ன ஆகிடப் போகிறது.
நான் மட்டும் ஏன் உழைக்க வேண்டும் என்று ஒரு போதும் நினைப்பதில்லை. தான் என்ற எண்ணம் இல்லாமல் எல்லாரும் பசியாற நானும் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து உழைக்கிறது.

எதிர்ப்பு :
முழு கவனத்துடன் தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் போது வரும் இடைஞ்சல்களையும் சமாளிக்க தெரிந்து வைத்திருக்கிறது எறும்புகள். முதலில் சமாதனத்துடன் விலகிச் செல்லும், மீண்டும் மீண்டும் தன்னை சீண்டுபவர்களை அலறி துடிக்கும் வண்ணம் கடிக்கும்.
அடங்கி அடங்கி பின் வாங்காமல் தன்னுடைய எதிர்ப்பை காட்டிட வேண்டும். அதுவும் சரியான நேரத்தில்.



Click it and Unblock the Notifications











